Tuesday, March 22, 2011

ஒற்றைத் தலைவலி

உலகில் 70 சதவீதம் பெண்கள் ஒற்றைத் தலைவலியால் அவதிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். முறையான வழிகாட்டுதல்களும் சிகிச்சைகளும் இல்லாததால், அல்லது இருந்தும் எடுத்துக் கொள்ளாததால் பலர் தலைவலியை முற்றவிட்டு, பக்கவாதம் உட்பட வேறு சில ஆபத்தான நோய்களுக்கும் ஆட்படுகிறார்கள். சிலருக்குக் கண்பார்வை கூட மங்கிப் போகக்கூடும்.

அறிகுறிகள்:
தலைவலி விட்டுவிட்டு ஒரே பக்கத்தில் வரும். வலி கடுமையாக இல்லாவிட்டாலும் தொடர்ச்சியாக செய்ய வேண்டிய வேலைகளை பாதிக்கும். தலையின் இரண்டு பக்கங்களில் அல்லது ஒரே பக்கத்தில் தோன்றி இன்னொரு பக்கத்திற்குப் பரவும். விண்விண் என அதிர்வோடு, பிசைவது போன்று, கண்ணையும் நெற்றியையும் அமுக்குவது போன்ற உணர்வுகளும், தலையில் ஏதோ ஒன்று கிளறுவது போனற உணர்வும் இருக்கும். வெளிச்சத்தை உற்றுப் பார்க்க முடியாது. சத்தம் கேட்டால் மிரட்சி உண்டாகும். திடுக்கிட வேண்டியிருக்கும். வாசனைகளை முகர்ந்தால் உடனடியாக அதிக உணர்ச்சி வசப்படும் நிலை. அதிகப்பசி, பசியின்மை, பார்வை மங்குதல், மூக்கடைப்பு, அடிவயிற்றில் வலி, சிறுநீர் அதிகரித்தல், மற்றும் முகச் சோகையால் தோலின் நிறம் மங்குதல் ஆகியவை காணப்படும்.படிக்கட்டில் ஏறும்போது, வீட்டு வேலைகளைச் செய்யும் போது வலி கூடும். கூடவே குமட்டலும் வாந்தியும் வரும்.

வகைகள்
ஒற்றைத் தலைவலி இரண்டு முக்கிய வகைப்படும்

1. கிளாசிக் மைக்ரேன் (Classic Migraine)

தலைவலியின்போது நரம்பு தொடர்பான அறிகுறிகள் தென்படுவதை (avra) இது குறிக்கும். அதாவது தலைவலி வருவதற்கான அறிகுறிகள் இல்லாமல், நோய் வருவது போன்ற உணர்வு மட்டும் எழுவது.

தலையில் நெற்றிப்பொட்டில், பொட்டெலும்பு, பின்பக்கத் தலை போன்ற இடங்களில் இதன் வலி தெரியும். கண்களிலும், தாடையிலும், முதுகிலும்கூட வலி தெரியலாம். பேச்சு குழறுதல், கவனமின்மை, மனநோய் போன்றவை இதனால் வர வாய்ப்புண்டு. தற்காலிகமாக பார்வையில் கோளாறு, உணர்வில் கோளாறு, கண்களுக்குள் மின்னல் போன்ற ஒளிக்கீற்று வந்து மறைதல் போன்றவை ஏற்படும்.

நெற்றிப் பொட்டிலும், கண்ணிலும் வலி ஏற்பட்டு, வலி அதிகரிப்பதால் சிலர் தாங்க முடியாமல் தவிப்பார்கள். சிலர் எதிலாவது தலையை முட்டிக்கொண்டு அழுவது கூட உண்டு.

கை, கால்களைப் பலவீனப்படுத்தும் இந்தவலி இரண்டு நாட்களுக்கு ஒருமுறைகூட வரலாம்.

பொதுவான மைக்ரேன்: (Common migraine)

மனநிலையில் பாதிப்பு, அடிக்கடி மூடு மாறுதல், சோர்வுறுதல், மனப்பதட்டம் ஆகியவற்றால் இத்தலைவலி ஏற்படும். இது தொடர்ந்து மூன்று நான்கு நாட்களுக்கு இருந்தால் குமட்டல், வாந்தி, வயிற்றுப் போக்கு, சிறுநீர் அதிகரித்தல் ஆகியன உண்டாகும்.

ஒற்றைத் தலைவலி எதனால் வருகிறது?

மூளை இயங்குவதற்குத் தேவைப்படும் செரடோனின் என்ற வேதியியல் திரவத்தின் அளவு குறையும் போதுதான் இந்த ஒற்றைத் தலைவலிகள் ஏற்படுகின்றன.புதிய கண்டு பிடிப்புகளின்படி, மூளையைச் சேர்ந்த சில செல்களில் ஏற்பட்டுள்ள பரம்பரைக் குறைபாடுகள் தான் காரணம் (gentic disorder) என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். மூளைக்குச் செல்லும் இரத்தக் குழாய்கள் திடீரென சுருங்குவதால் இரத்தக்குழாய் சுவர்களில் உண்டாகும் அழுத்தம் காரணமாக சுரக்கும் ரசாயனங்களால் மூளை வலியை உணர்கிறது.
ஒளிப்பட விளக்கம் இங்கே காண்க.

சிலர் ஒற்றைத் தலைவலி வரப்போவதை முன்பே எதிர்வு கூறுவார்கள், இதற்கு முன்னறிகுறியாக பார்வைப்புலன் தளத்தில் பளிச்சென்ற ஒளிக்கீற்றுக்கள், ஒளிவட்டம், குறுக்கு மறுக்கான ஒளிக்கோடுகள் அல்லது தற்காலிகமான பார்வையிழப்பு போன்றன தோன்றுவதாக கூறுவார்கள். பலருக்கு இந்த ஒளிக்கீற்றுகள்தோன்றாமலே தலைவலி தோன்றுகின்றது.இத்தலையிடி வருபவர்களுக்கு இது திரும்ப திரும்ப வருவதாக காணப்படுகிறது. அத்துடன் போதியளவு உணவு, உறக்கமின்மை, சில உணவுகளில் ஒவ்வாமை, ஏற்றுக்கொள்ளாமை, ஒளியின் அளவு ஹார்மோன்களினால் ஏற்படும் ஒழுங்கீனங்கள் (பெண்களில் மட்டும்) போன்றவை இதைப் பொறிதட்டிவிடும் . மேலும் மனவெழுச்சி (Anxeity), மனவழுத்தம் (stress) ஆகியனவும் காரணமாகலாம்.

அதிக சூரியவெம்பம், வானிலை அழுத்த மாற்றங்கள், காற்றோட்ட மற்ற புழுக்கமாக அறைகளில் தங்குதல், அடிக்கடி உறங்கும் முறையை மாற்றிக் கொள்ளுதல், வேலையிலும் ஓய்விலும் மாறுதல்களை உண்டாக்கிக் கொள்ளுதல், ஏதாவது ஓரிடத்திற்கு சென்றிருந்த போது தலைவலி வந்திருந்தால், அதே இடத்தில் வேறு ஒரு சூழ்நிலையில் செல்ல நேர்ந்தாலும் தலைவலி வருதல் மதுவகைகள் சில கீரைகள், பாலடைக்கட்டி, தயிர்,வினிகர்,சாக்லேட், ஆடு மற்றும் கோழி போன்றவற்றின் ஈரல், ஈஸ்ட்ரோ ஜென் ஹார்மோன், மிக அதிகமான உறக்கம், உறக்கமின்மை, மிகைபசி, இறைச்சி, தலைவலி அடிபடுதல், உடலின் உட்புற உறுப்புகளில் உண்டாகும் நோய்கள், அதிக மருந்து சாப்பிடுதல், மாதவிலக்கு, கர்ப்பம். மோசோசோடியம் குளுட்டாமேட், கவலை, மனஇறுக்கம், அசதி, வாய்வழி சாப்பிடும் கருத்தடை மாத்திரைகள் ஆகியவை மைக்ரேன் தலைவலியை உண்டாக்குகின்றன.

ஒற்றைத்தலைவலி பரம்பரை நோயா?
ஒற்றைத் தலைவலி பரம்பரையாக வரக்கூடியது என்று சொல்லப்படுகிறது. என்றாலும், இது மரபில் உள்ள கோளாறால்தான் என்று திட்டவட்டமாகக் கூற முடியவில்லை. மற்றபடி, கட்டாயம் வரும் என்றும் சொல்லமுடியாது.

தாக்குண்டவர் துன்பத்தில் துடிக்க, சூழ இருப்பவரின் நோய் நீக்க முடியாத கையாலாகாத நிலை இன்னும் துன்பமானதாகும். சந்தோசமாக இணைந்து வாழும் இருவரில் ஒருவருக்கு இது வந்துவிட்டால், அவ்வுறவே பிரியுமளவுக்கு இந்நோய் பாதிக்கும். பெற்றோர்க்கு தலைவலி வந்துவிட்டால் சிறு பிள்ளைகள் குழப்பமடைந்து கவலைகொள்கின்றார்கள்.

உணவு¸ வாழ்க்கை முறை மாற்றங்கள்:
தாக்குதல் ஏற்ப்பட்டபோதான விபரங்கள் - நாள், நேரம், தாக்கின் கடுமைநிலை, கடந்த 24 மணி நேரத்தில் உட்கொண்ட உணவு போன்றவற்றை குறித்து வைத்துக்கொண்டால், தாக்குதலுக்கான தனிப்பட்டவருக்குரிய காரணிகளைக் கண்டுகொள்ளலாம். பின்னர் தெரிந்த காரணிகளைத் தவிர்த்துக் கொள்ளவேண்டும்.

வராமல் காக்கும் வழிகள்:

அறிகுறிகளை வைத்தே ஒற்றைத் தலைவலியை நெருங்க விடாமல் செய்ய முடியும். உங்களுக்கு உதவ சிலவழிகள்.

1. உணவுமுறையில் மாற்றம்:

சரியாக உணவு உண்ணாததும், ஒத்துக்கொள்ளாத சில உணவுவகைகளை உண்பதும், அளவுக்கு அதிகமாக உண்பதும் ஒற்றைத் தலைவலிக்கு முக்கியக் காரணங்களாகும். இதனால் நல்ல ஆரோக்கியமான உணவை, வேளை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். பால், காய்கறி வகைகள் நல்லது. இறைச்சி வகைகளைத் தவிர்த்தல் மிக நல்லது.சீனியளவு கூடிய உணவுகளைத் தவிர்ப்பதோடு குருதி வெல்லவளவு அதிகம் மாறுபடாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். போதியளவு நீர் குடிக்கவேண்டும்.

2. முறையான தூக்கம்:

தூக்கமில்லாமல் அவதிப்படுபவர்கள் காலையில் எழுந்ததும் தலைவலிப்பதாகச் சொல்வது வாடிக்கையாகிவிட்டது. அதனால் நல்ல தூக்கம் வரச்செய்யும் வழி முறைகளைத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக தூக்கம் வரும்வரை படிப்பது.

3. உடற்பயிற்சி:

உடற்பயிற்சிதான் உடலில் உள்ள வேதிப்பொருட்களை உற்பத்தி செய்யும் தன்மை கொண்டது. இதனால் மூளை நன்கு செயல்படத் தொடங்கும். முறையான தொடர் உடற்பயிற்சி இருந்தாலே ஒற்றைத் தலைவலி அண்டாது. மன, உடலமைதிக்கான தியானப்பயிற்சியும் செய்யவேண்டும். தொடர்ச்சியான, திரும்பத் திரும்ப ஒன்றையே செய்யும் வேலைகளிலின்போது ஒழுங்கான சிறு ஓய்வுகள் எடுக்கவேண்டும்

4. சுற்றுச்சூழலில் கவனம்:

அதிக சூரிய வெப்பம் படுதல், வானிலை மாற்றங்கள், காற்றோட்டமில்லாத புழுக்கமாக சூழலில் வாழ்தல் ஆகிய சுற்றுச்சுழல்களாலும் சிலருக்கு தலைவலி வரும். அதனால் இவற்றைத் தவிர்த்தல் வேண்டும். காற்றோட்டமுள்ள இடத்தில் தூங்குவதும், மலச்சிக்கல் வராமல் பார்த்துக் கொள்வதும் மிக அவசியம்.

5. மது, புகை, காபி தவிர்த்தல்

மது அருந்துதல், புகை பிடித்தல், காபி குடித்தல் சிலருக்கு தலைவலியை உண்டாக்கும். இவை முற்றிலும் நிறுத்தப்படல் வேண்டும். சிலருக்குக் காப்பி சாப்பிட்டால் தலைவலி நிற்பது போல் தெரியும். ஆனால் அது நிரந்தரமற்றதாகும்.

6. கவலை, சோர்வு, மனஅழுத்தம் வேண்டாம்.

அதிகமாகக் கவலைப்படுபவர்கள், அடிக்கடி சோர்வு அடைபவர்கள், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிக்கடி ஒற்றைத் தலைவலி வரும். இவற்றில் இருந்து விடுபட, மற்றவர்களுடன் நட்பாகப் பேசிப் பழக வேண்டும். மனம் விட்டுப் பேசி குறைகளைக் களைய வேண்டும்.

7. தடுப்புமுறைகள்:

ஒற்றைத்தலைவலி எதனால் வந்தது என்பதை அறிந்துகொண்டு அவற்றைத் தவிர்த்தலே மிக நல்லது. உதாரணமாக, ஒரு நிகழ்ச்சிக்குப் போனால் தலைவலி வந்திருக்கும். திரும்பவும் அந்த நிகழ்ச்சியைக் காணாது தவிர்த்தல். சில பொருட்கள் அலர்ஜியாகி தலைவலி கொடுத்திருக்கும். அவற்றைத் தவிர்த்து முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ளலாம்.

8. மருந்துகள்:

அதிக அளவில் மருந்து எடுத்துக் கொள்வதும் சிலருக்குத் தலைவலி வரக் காரணமாக இருக்கும். இதனால் மருத்துவர் ஆலோசனைப்படி மட்டுமே மருந்து எடுத்துக்கொள்ளவேண்டும். நோயின் தன்மை, நோயின் தீவிரம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு உடனடி சிகிச்சை தேவைப்படும் நோயாளிக்கு சிகிச்சையளிக்க வேண்டும். நரம்பியல் நிபுணரை ஆலோசிப்பது நல்லது.

மேலும் விபரம் அறிய http://yourtotalhealth.ivillage.com/migraines

Leia mais...

தண்ணீர் மரு(க)த்துவம்





நம் உலகம் 70% நீரால் ஆனது. தண்னீரில் தால் முதலில் உயிர் தோன்றியது. நம் உடலின் பெரும் பகுதியும் நீரால் ஆனது தான். Dr. F. Batmaghelidj போன்றவர்கள் பல வருடம் ஆய்ந்து கண்டுபிடித்த விஷயம், நோய் எனப்படுவதே தாகம் தான் என்பதே.உடலிலே தண்ணீரின் அளவு குறையும் போது தான் நோயாக உணர்கிறோம். எனவே தேவைப்படும் தண்ணீரை குடித்தாலே பல நோய்கள் பறந்து விடுமாம்.

நம் உடலின் திசுக்கள் இயங்க 75% தண்ணீர்,இரத்தம் சத்துப்பொருட்களை உடலின் பாகங்களுக்கு கொண்டு செல்ல 82% தண்ணீர்,நுரை யீரல் தேவையான பிராண வாயுவை வழங்க 90% தண்ணீர் ,ஏன் எலும்புகளில் கூட 25 % தண்ணீர் தேவையாய் இருக்கிறது. எனவே நீண்ட நாள் நோயற்று வாழ் நிறையத் தண்ணீர் பருகுங்கள்.
தண்ணீர் நெஞ்செரிச்சலை தடுக்கிறது: ஜீரண மண்டலத்தின் மேல் பகுதியில் ஏற்படும் நீர்சத்து குறைவே நெஞ்செரிச்சலை உருவாக்குகிறது. கவனியாது விட்டால் அது தொடர்பான பல நோய்களை அறிமுகப்படுத்தும்.Antaacid மாத்திரைகள் வேதனையை குறைக்குமே ஒழிய தேவையான தண்ணீர் அருந்தி வருவது தான் குணமடையும் வழி
தண்ணீர் மூட்டு வலிக்கு மருந்து்: மூட்டு இணைப்புகளில் உண்டாகும் தண்ணீர் பற்றாக்குறைதான் மூட்டு வலிக்கு காரணம். pain-killers மாத்திரைகள் உபயோகிப்பது வலி நிவாரணம் தருமே ஒழிய நோயை குணமாக்காது. சிறிய அளவு உப்பு சத்துடன் கூடிய தண்ணீர் அதிகம் அருந்தினால் மூட்டு வலி குணமாகும்
தண்ணீர் முதுகு வேதனையைத் தடுக்கும்:முதுகெலும்புத் தொகுதியில் உடலின் எடையைத் தாங்குவதில் தண்ணீர் ஒரு மெத்தை போல் செயல் படுகிறது.இந்த எலும்புகளில் நீர் சத்து குறையும் போது இடுப்பு வலி ,முதுகு வலி கழுத்து வலி ஏற்படுகிறது.சரியான அளவு தண்ணீர் அருந்துவதே இவ்வலிகளிலிருந்து விடுதலை தரும்

தண்ணீர் இதய நோயிலிருந்து காக்கிறது:இதயம் மற்றும் நுரை ஈரலில் உண்டாகும் தண்ணீர் பற்றாக்குறையே angina எனும் நெஞ்சு வலிக்குக் காரணம்.அதிகப்படியான் தண்ணீர் அருந்துவது. இன்நோயைக் குணமாக்குகிறது.
தண்ணீர் ஒற்றைத் தலைவலியை குணமாக்குகிறது:
மூளை மற்றும் கண்களுக்குத் தேவையான தண்ணீர் அளவு குறைவதால் தான் ஒற்றைத்தலைவலி உண்டாகிறது
தண்ணீர் பெருங்குடல் அழற்சியை போக்குகிறது:உடலில் தண்ணீர் வரண்டு போகும்போது செரிக்கப்பட்ட உணவிலிருந்து குடல் தண்ணீரை முழுமையாக உறுஞ்சி விடுவதால் மலம் இறுகி குடலில் உராய்ந்து புண்ணாக்குகிறது. அடி வயிற்றில் வேதனை உண்டாக்குகிறது.இதன் தொடர்ச்சியே இரத்தக்கசிவு ,மூல முளை ,குடல் புற்று போன்றவை.போதுமான தண்ணீர் அருந்துவது மட்டுமே இதனை குணமாக்கும்
தண்ணீரும் உப்பும் ஆஸ்த்மாவை குணப்படுத்துகிறது: உடம்பில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க உடல் எடுக்கும் நடவடிக்கை தான் ஆஸ்த்மாவிற்குக் காரணம். உடலின் தண்ணீர் காற்றில் ஆவியாகி போய்விடாமல் காற்றுப் பாதைகளில் உடல் தடை ஏற்படுத்துவதே ஆஸ்த்மாவிற்குக் காரணம்.அதிக அளவு தண்ணீர் சிறிது உப்புச்சத்துடன் எடுத்துக்கொள்வது நுரை ஈரலிலிரு்ந்து சளியை வெளியேற்றி பிராணவாயு தடங்கலின்றி கிடைக்கச்செய்யும்
தண்ணீர் இரத்தக் கொதிப்பை தடுக்கிறது: போதுமான தண்ணீரின்றி உடலில் உண்டாகும் வறட்சி தான் உயர் இரத்த அழுத்தத்திற்குக் காரணம். தண்ணீரும் சிறிது உப்பும் அருந்தி வருவது இரத்தக்கொதிப்பை குணமாக்குகிறது.இதை கவனியாது விட்டால் ஹார்ட் அட்டாக்,ஸ்ட்ரோக்,பக்கவாதம், மூளைப் பாதிப்பு,அல்ஷீமர்போன்ற ஆபத்துகளில் கொண்டு சேர்க்கும்
நீரிவு நோய்க்குக் காரணம் தண்ணீர் பற்றாக்குறையே:
தண்ணீர் அதிக கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துகிறது:
தண்ணீர் உடலில் சேரும் விஷத்தை வெளியேற்றுகிறது:
---------------------------------------------------------------------------------------------------
தினமும் அதிகாலை-யில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது ஜப்பானில் இப்போது பிரபலமாகி வருகிறது.

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் மிகப் பழைய கடுமையான வியாதிகளை மட்டுமல்ல நவீன கால நோய்களைக் கூட இந்த நீர் மருத்துவம் மூலம் 100% வெற்றிகரமாக குணப்படுத்த முடியுமென ஜப்பானிய மருத்துவ சம்மேளனம் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.

தலை வலி , உடல் வலி, இதய நோய்கள், ஆத்திரட்டிஸ் எனப்படும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய் , வேகமான இதயத்துடிப்பு, எபிலெப்ஸி எனப்படும் வலிப்பு நோய், அளவுக்கதிகமான உடல் பருமன், ஆஸ்துமா, காச நோய், மூளைக்காய்ச்சல், சிறு நீரகம் மற்றும் சிறு நீர் வியாதிகள் , வாந்தி, பேதி, வாய்வுக் கோளாறுகள், மூல வியாதி, சலரோகம் அல்லது சர்க்கரை வியாதி, சகலவிதமான கண் நோய்கள், கர்ப்பப்பை புற்று நோய், ஒழுங்கீனமான மாதவிடாய் கோளாறுகள், காது, மூக்குத், தொண்டை கோளாறுகள் போன்றவற்றுக்கு இந்த நீர் மருத்துவம் 100% பயனளிக்கின்றது என இம் மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மருத்துவ முறை
  1. காலையில் தூங்கி எழுந்ததும் , பல் துலக்கும் முன்பே 4 x 160ml டம்ளர் (கிளாஸ் ) தண்ணீர் அருந்துங்கள்.
  2. பல் துலக்கி வாய் அலம்பிய பின் 45 நிமிஷங்களுக்கு உணவோ, நீராகாரம் எதுவாயினும் உட்கொள்ளக் கூடாது.
  3. 45 நிமிடங்களுக்குப் பின் வழக்கமான உங்கள் உணவை உட்கொள்ளலாம்.
  4. காலை உணவின் பின் 15 நிமிஷங்களுக்கும், மதிய உணவு, இரவு உணவின் போதும 2 மணி நேரங்களுக்கு எதுவும் உட்கொள்ள வேண்டாம். (After 15 minutes of breakfast, lunch and dinner do not eat or drink anything for 2 hours)
  5. முதியோர் அல்லது நோயாளிகள் அல்லது 4 டம்ளர் நீரை எடுத்த எடுப்பிலேயே அருந்த முடியாதவர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நீர் உட்கொண்டு நாளடைவில் 4 டம்ளர் அளவு நீர் அருந்த பழகலாம்.
மேற்குறிப்பிட்ட முறையை பின்பற்றும் நோயாளிகள் நலம்பெறுவது உறுதி. எந்த நோய்க்கு எத்தனை நாட்கள் இந்த முறையை பின்பற்ற வேண்டும் என்ற விபரங்களை கீழே காணலாம். இந்த வழியில் பின்பற்றினால் இந்நோய்கள் முற்றிலும் குணமாகும் அல்லது தணியும் என்று ஜப்பானிய மருத்துவர்கள் கூறுகின்றனர்.
  1. உயர் இரத்த அழுத்தம் - 30 நாட்கள்
  2. வாய்வுக் கோளாறுகள் - 10 நாட்கள்
  3. சலரோகம் அல்லது சர்க்கரை வியாதி - 30 நாட்கள்
  4. மலச்சிக்கல் (கான்ஸிடிபேஷண்ட்) - 10 நாட்கள்
  5. புற்றுநோய் - 180 நாட்கள்
  6. காச நோய் - 90 நாட்கள்.
  7. ஆத்திரட்டிஸ் நோயாளிகள் முதல் வாரம் 3 நாட்களும், இரண்டாவது வாரத்திலிருந்து தினமும் இம் முறையினைப் பின்பற்ற வேண்டும்.
பக்க விளைவுகள் எதுவுமில்லாத மருத்துவமுறை இது, எனினும் நீர் அதிகமாக உட்கொள்வதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வரும். ஆனாலும் இந்த முறையை நமது அன்றாட கடமைகளில் ஒன்றாகப் பின்பற்றுவது மிகவும் நன்மை தரும் என்றே சொல்ல வேண்டும். நீர் அருந்தி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருங்கள். "நீரின்றி அமையாது உலகு" என வள்ளுவர் சொன்னதன் பொருள் இது தானோ?

கொஞ்சம் இருங்கள் இரண்டு கப் தண்ணீர் குடித்துவிட்டு வந்து விடுகிறேன்.

மேலும் விபரங்களுக்கு:
www.shirleys-wellness-cafe.com
www.watercure.com/wondersofwater

Leia mais...

தேங்காய் - மகத்துவம்


உணவில் சுவையும் மணமும் ஊட்டும் தேங்காய் சிறந்த மருந்தாகவும் பயன் படுகிறது.
தேங்காயில் உள்ள சத்துக்கள் என்ன?
தேங்காயில் புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என அனைத்தும் உள்ளன.
தேங்காயால் உடல் வலிமை பெறும். தீ புண்களை ஆற்றும். தேங்காய் எண்ணெய் கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது. தேமல்,படை,சிரங்கு நீக்கும்.
தோலை புதுப்பித்து தோல் சுருக்கங்கள் அகற்றும்.

இதய நோயாளிகள் தேங்காய் சாப்பிடலாம்
தேங்காயில் உள்ள fatty Acid உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது, உடல் எடையைய் குறைக்கிறது என ஓர் ஆய்வு கூறுகிறது
"தேங்காய் எண்ணெயில் கொழுப்பு உள்ளது, சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகளுக்கு நல்லதல்ல" என்ற கருத்தை இது பொய்யாக்குகிறது. தேங்காய் எண்ணெயில் "medium chain Fatty Acid" அதிகமாக உள்ளது.உடலில் உள்ள கொழுப்பு சத்தை குறைக்கும் Capric Acid, மற்றும் 'Lauric Acid' ஆகிய இரு அமிலங்களும் போதிய அளவு உள்ளது. இதனால் தினமும் தேங்காய் எண்ணெய் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறையுமாம். அதோடு இந்த அமிலங்கள் வைரஸ் பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்க்க வல்லது.நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.தேங்காயில் உள்ள Mono Laurin வைரஸ்களின் செல் சுவர்களை கரைக்கிறது.தேங்காய் சர்க்கரை நோயால் ஏற்படும் தளர்ச்சியை போக்கும்.
இயற்கையான தேங்காய் எண்னெயால் இதயத்துக்கு எந்தக் கெடுதியும் இல்லை.ஆனால் தேங்காய் எண்னெய் கெட்டுப் போகாமலிருக்க பதப்படுத்தும் போது அதாவது hydrogenation என்னும் முறையில் ஒரு hydrogen மூலக்கூறை செயற்கையாக தேங்காய் எண்ணெயின் மூலக்கூறுடன் சேர்க்கிறார்கள்.இது தான் கெடுதல். இவ்வாறு செய்யப்படும் எல்லா எண்ணெயும் கெடுதல் தான் எனவே தூய இயற்கையான வடிவில் தேங்காய் எண்ணெய் உபயோகிப்பது சிறந்தது.

எய்ட்ஸ் நோயாளிகளுக்கு நல்லது:
எய்ட்ஸ் நோயாளிகளுக்கு வைரஸ் பாதிப்பை குறைக்கிறது. தேங்காயில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம். உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்கு பெரிதும் உதவுகிறது.
ஆண்மைப் பெருக்கி:
முற்றிய தேங்காய் ஆண்மையை அதிகரிக்கும். அதில் உள்ள வைட்டமின் இ முதுமையைத் தள்ளிப் போடும் தைராய்டு சுரப்பியை ஊக்குவிக்கிறது. குறை தைராய்டு நோய்க்கு தேங்காய் எண்ணெய் நல்லது.

கர்ப்பிணிகளுக்கு நல்லது:
தேங்காய்ப் பூவை சாறாக்கி கர்ப்பிணிகளுக்குக் கொடுத்தால் குழந்தை சிவப்பாகப் பிறக்குமாம்
இளநீரின் மருத்துவக் குணங்கள் என்ன?

இளநீர் இயற்கை மனிதனுக்கு தந்த வரம் . சுத்தமான சுவையான பானம். பல்வேறு வகைகள் உள்ளன. எல்லா வகையிலும் சிறந்தது தான்.
  • உடல் வெப்பத்தைத் தணித்து குளிர்ச்சி அளிக்கும்
  • இரத்தத்தில் தேவையான தாது உப்புக்களைச்சேர்த்து, உடலின் செயல்திறனை ஊக்குவிக்கிறது.
  • அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும் .
  • இருதயம், கல்லீரல், சிறுநீரகம், கண்கள் மற்றும் இரத்த நாளங்களில் உஷ்ணத்தை கட்டுப்படுத்துகிறது.
  • ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
  • சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். விந்துவை அதிகரிக்கும்.
  • மேக நோய்களைக் குணப்படுத்தும்.
  • உடலில் ஏற்படும் நீர் - உப்புப் பற்றாக்குறையை இளநீர் சரி செய்கிறது.
  • இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது.
  • இளநீரின் உப்புத் தன்மை வழுவழுப்புத்தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்ல சத்து.
  • ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருள்கள் இளநீரில் உள்ளன.
  • அவசர நிலையில் நோயாளிகளுக்கு இளநீரை சிரை மூலம் செலுத்தலாம்.
  • பேதி, மயக்கம், அசதி ஏற்படும்போது டாக்டரிடம் செல்வதற்குமுன் 2 டம்ளர் இளநீர் சாப்பிடுவது என்பது1 பாட்டில் சலைன் வாட்டர் ஏற்றுவதற்குச்சமமாகும்.
  • இளநீர் மிக மிகச் சுத்தமானது.
  • ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப் பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறது.
  • ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொருள்களை அகற்ற இளநீர் பயன்படுகிறது.
  • இளநீரிலிருந்து கண் நோய்களுக்குச் சிறந்த மருந்தான . "ஜெல்' என்ற பொருள் தயாரிக்கப்படுகிறது
  • இளநீரில் அதிக அளவில் சத்துகள் உள்ளன. சர்க்கரைச் சத்துடன் தாதுப் பொருள்களும் நிறைந்துள்ளன. பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன.
  • இளநீரில் தாய்ப்பாலுக்கு ஈடான புரதச்சத்து உள்ளது.
  • மூல நோயாளிகள், நாட்பட்ட சீதபேதி, ரத்த பேதி, கருப்பை ரணம், குருதிப் போக்குக் காரணமாக வரும் இரத்த சோகை, உற்சாகமின்மை ஆகியவற்றிற்கு இளநீர் மிகச்சிறந்த நிவாரணம் அளிக்கின்றது.
  • கடும் வெயில் காரணம் அப்போது வியர்வை ஏராளமாக வெளியேறுவதால் நீர் கடுப்பு உண்டாகும். அப்போது 2 டம்ளர் இளநீர் பருகிட 1 மணி நேரத்திற்குள் சிறுநீர் தாராளமாகப் போகும். சிறுநீர்த் பாதையில் புண் இருந்தால் PUS CELLS அதிகமாகி எரிச்சல், கடுப்பு உண்டாகும். அதற்கு இளநீரில் வெந்தயம் அரைக்கால் ஸ்பூன் தூள் செய்து கலந்து பருகி வர ஐந்து நாளில் சரியாகும்.
  • மாத விலக்கின் போது ஏற்படும் அடிவயிற்று வலிக்கு இளநீரே மருந்து.
  • கடும் காய்ச்சலுக்கு இளநீர் 8 மணிக்கொரு முறை பருகிவரத் தணியும்.
  • பேதி, சீதபேதி, இரத்த பேதியின் போது மற்ற உணவுகள தவிர்த்து உடனே இளநீர் பருகிவர, உடல் அசதி, மயக்கம் மாறும்.
  • சிறுநீரகக் கல், சதையடைப்பு URINARYINFECTION போன்ற கோளாறுகளுக்கு இளநீர் நல்ல மருந்து
  • கூல்டிரிங்க்ஸ், ஐஸ்கிரீம்ஆகியவற்றை விட உடலுக்குப் பல மடங்கு நலம் தரும் இளநீரை இயற்கைப் பானமாக பயன்படுத்துவதே ஆரோக்கியமான வழி.
  • டைபாய்டு, மலேரியா, மஞ்சள் காமாலை, அம்மை நோய்கள், டிப்தீரியா, நிமோனியா, வாந்திபேதி, வயிற்றுப்புண், மலச்சிக்கல், சிறுநீரகக் கோளாறுகள் போன்றவற்றால் பாதிக்கப்படும் போது இளநீரைத் தாராளமாகக் குடிக்க வேண்டும்.
  • அறுவை சிகிச்சைகளுக்குப் பின் திரவ ஆகாரம் மட்டுமே சாப்பிட வேண்டிய சமயங்களில் இளநீருக்கு முன்னுரிமை வழங்கி உபயோகித்தால் அறுவைச் சிகிக்சைப் புண் (OPERATION SORE) சீக்கிரம் ஆறிவிடும்..
  • இளநீரில் உள்ள தாதுக்கள் உணவு எளிதில் ஜீரணமாவதற்கு பயன்படுவதால் ஜீரணக் கோளாறுகளால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இளநீர் கொடுத்தால் வாந்தி கட்டுப்படும். நாக்கு வறட்சி நீங்கும்.
  • இளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதில் உள்ள அமிலத் தன்மை வயிற்றில் புண்ணை உருவாக்கும். ஏதாவது ஆகாரம் எடுத்த பின்னரே சாப்பிடவேண்டும்.
தென்னை மரத்தின் வெவ்வேறு பாகங்களின் மருத்துவக் குணங்கள் என்ன?
  • மாத விடாயின் போது ஏற்படும் அதிக ரத்தப் போக்குக்கு,தென்னை மரத்தின் வேரிலிருந்து எடுக்கப்படு சாறு நல்ல மருந்து.
  • வெள்ளை படுதலுக்கு தென்னம் பூ மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
  • தேங்காய் புண்ணாக்கும் கருஞ்சீரகமும் சேர்த்து தோல் நோய்களுக்கு மருந்தாகிறது.
  • தேங்காய் சிரட்டையில் (வெளிப்புற ஓடு) இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளைக் குணப்படுத்துகிறது.
  • மூல முளை, ரத்த மூலம் போன்றவற்றுக்கு தென்னங் குருத்திலிருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது.
  • தேங்காய்ப் பால் சிறந்த நஞ்சு முறிவு. இது சேராங்கொட்டை , பாதரசத்தால் உண்டாகும் நஞ்சு போன்ற பல நஞ்சுகளை முறிக்கும்.
தைலங்கள்;
நாள்பட்ட தீராத புண்களுக்கு மருந்தாகத் தரப்படும் மத்தம் தைலம், தோல் நோய்களுக்கான கரப்பான் தைலம், வாத வலிகளைக் குணப்படுத்தும் கற்பூராதி தைலம், தலைக்குப் பயன்படுத்தப்படும் நீலபிரிங்காதித் தைலம், சோரியாசிஸ் நோய்க்குப் பயன்படும் வெப்பாலைத் தைலம், தலையில் உள்ள பொடுகுக்கு மருந்தாகும் பொடுதலைத் தைலம் ஆகிய தைலங்களில் தேங்காய் எண்ணெய் பயன்பாடு முக்கியமானது.

தேங்காயில் உள்ள சத்துக்கள்:
ஒரு கப் (80 gm துருவிய )தேங்காயில் உள்ள சத்துக்கள்
கலோரிகள்- 283 : கொழுப்பிலிருந்து பெறப்படும் கலோரி-224
மொத்தக் கொழுப்பு : 27 gm (41%)
ஸேச்சுரேட்டட் கொழுப்பு:24 gm (119%)
கொலெஸ்ட்ரால் : 0gm (0%)
சோடியம் : 16 mg (1%)
மொத்த மாவுச்சத்து :12gm(4%)
உண்ணத்தக்க நார் சத்து :7gm (29%)
சர்க்கரை :5gm
புரதம் :3 gm
விட்டமின் A : (0%)
விட்டாமின் C :(4%)
சுண்ணாம்பு சத்து :(1%)
இரும்பு சத்து :(11%)

மேலு அறிய: Super Foods - The Truth about Coconut - video

Leia mais...

அதிக நேரம் கணினியில் செலவிடுகிறீர்களா?


இன்றைய வாழ்க்கை முறையில் காதலியை தவிர்த்தாலும் கணினியை தவிர்க்க முடியாத சூழல். ஆனாலும் அதிக நேரம் கணினியில் செலவிடும் போது என்னென்ன பாதிப்புகள் உண்டாகின்றன என்று அறிய வரும்போது அதிர்ச்சி தருகிறது.

கண் பாதிப்பு: இமைக்காமல் அதிக நேரம் கணினித் திரையயே பார்த்துக் கொண்டிருப்பது கண் அழுத்தம்(glucoma), மற்றும் விழி உலர்வு நோய்(dry eye syndrom) க்கு காரணமாகிறது. குறிப்பாக கிட்டப் பார்வை (short sight) உள்ளவர்களை அதிகம் பாதிக்கிறது. அதிக வெளிச்சமான் திரையை அதிக நேரம் உற்றுப் பார்ப்பது கண்களை மிகவும் பாதிக்கிறது. இதை மிக சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இதன் ஆபத்தை மெல்ல நாம் உணருமுன் பார்வையை நிரந்தரமாக இழக்க நேரிடும்.கண் எரிச்சல், கண் அரிப்பு, வலி இதெல்லாம் இதன் முன்னெச்சரிக்கை.
  • கணினினி திரை வெளிச்சத்தை மிதமாக வைத்துக்கொள்ளவும்.
  • கணினி இருக்கும் அறையில் ஓரளவு வெளிச்சம் இருக்க வேண்டும்.
  • அடிக்கடி கண்ணை இமைப்பது நல்லது.
  • இடையிடையே கண்ணை முழுவதுமாக மூடி கண்ணுக்கு சிறிது ஓய்வு கொடுக்க வேண்டும்.
  • அடிக்கடி திரையிலிருந்து பார்வையை விலக்கி தூர உள்ள பொருளை காட்சியைப் பார்க்க வேண்டும்.
  • மானிட்டருக்கு பின் புறம் ஜன்னல் இருந்தால் நல்லது.
  • குளிரூட்டப்பட்ட அறைகளில் உள்ள உலர்ந்த குளிர் காற்று கண் உலர்வுக்குக் காரணமாகும்.

Leia mais...

கல்வி

பொது அறிவு
Wikipedia - Free Encyclopedia -சிறந்த பொது அறிவுக் களஞ்சியம்
விக்கிபீடியா
களஞ்சியம்
Internet public library
How Stuff work? -ஒவ்வொரு பொருட்களும் எப்படி வேலை செய்கின்றன? தெரிந்து கொள்ளுங்கள்
MIT Open Course wares - free courses
open learn
Learn that .com - Learn something here எதையாவது கற்றுக்கொள்ள வேண்டுமா?
Bartleby.com-e-books
about.com-What You Need to Know about?-எதைப் பற்றியாவது தெரிந்து கொள்ள வேண்டுமா?
Librarian's Internet Index
Oddee.com
Philosophy class
தமிழ் நாடு அரசு பாடநூல் தமிழக அரசு பள்ளி பாட நூல்களை பதிவிறக்கம் செய்ய
Vidya online ஏராளமான புத்தகங்கள்,சலனப்படங்கள்,பாடங்கள் நிறைந்த கல்வித்தளம்.
தமிழ் நாடு பள்ளிக் கல்வித் துறை  வழங்கும்  இணைய கல்வி


மழலைக்கல்வி
primary-education
www.knowledgeadventure.com/
Surfing the Net with Kids
mathsisfun.com
a mathsdictionaryforkids
a plus math.com
funbrain.com


மொழி
ஆங்கிலம் கற்க
தமிழ் -ஆங்கில அகராதி
தமிழ் பல்கலைக் கழகம்
speech-topics-help.com 

தொழில் நுட்பம்
educypedia - சிறந்த அனைத்து தொழில் நுட்ப வலைத்தலங்களின் நுழை வாயில்
thozhilnutpam.com
எரிம சேமக்கலன்
e-panorama. net
www.circuit diagrams.com
Hardware Hell - -கணினி வன்பொருள் பற்றிய தகவல் தளம்
Internetworking Technology Hand book
Java Tutorial
free Java tutorial & guide
The Language guide
எளிய தமிழில் PHP
எளிய தமிழில் SQL
programmer tutorials.com
Photoshop Tutorial
w3schools.com-Full Web building Tutorials
Silicon Sam's Technology Resource - Complete Electronics troubleshooting guide

அறிவியல்
New scientist.com
Earth Sky
Science Master
101 Science.com
Fact or Fiction? -நீங்கள் கேள்விப்பட்ட ஒன்று உண்மையா? வெறும் வதந்தியா?
Brain pop. COM
Your Amazing Brain.org -மூளையின் செயல் பாடுகளை தெரிந்து கொள்ளுங்கள்.
chemistry-drills.com
The Complete work of Charles Darwin

கணிதம்
http://www.math.com/
The math league
Ask Dr.Math
மின்னல் கணிதம்
mathgoodies
mathcats.com

கலை
you can draw நீங்களும் படம் வரையலாமே?
drawspace.com
தமிழில் புகைப்படக் கலை
தமிழில் பங்கு வணிகம்

வேலை வாய்ப்பு
வேலை வாய்ப்பு கல்வி வலையிதழ்
10- ஆம் வகுப்பிற்கு பிறகு என்ன படிக்கலாம்?

Related Post:
knowledge at fingertips
பயனுள்ள முகவரிகள்:இலவச மின் நூல் தளம்பயனுள்ள வலைத்தள முகவரிகள்: மருத்துவம்

Leia mais...

மருத்துவம்


பொது மருத்துவ தளங்கள்:

healthopedia.com/
webmd.com/
health.discovery.com/
health.nih.gov/
mercksource.com/

medlineplus.gov/
medicinenet.com
en.wikipedia.org/wiki/Health
cdc.gov/datastatistics/
health.yahoo.com/

goodhealthnyou.com/
menshealth.digitaltoday.in/menshealth/
cnn.com/HEALTH/
webhealthcentre.com/
health.howstuffworks.com/

aolhealth.com/health
health.ninemsn.com.au/
dir.yahoo.com/Health/
nhsdirect.nhs.uk/help/
Disease Index

online-medical-dictionary.org/
wrong diagnosis.com
e health md.com
family doctor.org
nccam.nih.gov

yourtotalhealth.ivillage.com/
intelihealth.com/
my.clevelandclinic.org
lib.uiowa.edu/hardin/md/
healthfinder.gov/

mayoclinic.com/
medhelp.org/
noah-health.org/
emedicinehealth.com/
medicdirect.co.uk/
http://kidshealth.org/
 ஹாய் நலமா?

நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துக்களின் தன்மைகள், பக்க விளைவுகள் பற்றி முதலில் தெரிந்து கொள்ளுங்கள்:
fda.gov/
nlm.nih.gov/
webmd.com/
webmd.com
mercksource.com/pp/us

Medicine Net.com
centerwatch.com/
dailymed.nlm.nih.gov/
druginfonet.com/
druginfo.nlm.nih.gov/

needymeds.org/
rxlist.com/



எந்த மருந்துகள் சாப்பிடும் போது எந்த உணவுகள் சாப்பிடக்கூடாது என்ற விபரம்:
http://www.hoptechno.com/book10.htm
Food and Drug Interactions - FDA

மருத்துவத்துறையில் மோசடிகளை,மூட நம்பிக்கைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் தளம்
www.quackwatch.com/
http://www.herbological.com/- மூலிகைகள் பற்றிய தகவல் திரட்டுக்களையும் புரட்டுக்களையும் ஆராயும் தளம்

மூலிகைகள் பற்றி தெரிந்து கொள்ள
மூலிகை வளம்
ஆயுர்வேத மருத்துவம்
mskcc.org/
http://www.richters.com/
http://www.botanical.com/botanical/mgmh/mgmh.html
http://www.planetherbs.com/

http://www.medherb.com/
http://www.christopherhobbs.com/
abc.herbalgram.org-Herbal_Library
http://rain-tree.com/plants.htm
phytotherapies.org/

http://envis.frlht.org.in/

மாற்று மருத்துவம்:
http://www.skepdic.com/tialtmed.html
http://www.thenewmedicine.org/
http://nccam.nih.gov/
http://www.drweil.com/drw/ecs/ask_dr_weil/index.html

யோகா http://www.yogajournal.com/

தியானம் http://www.meditationcenter.com/

மசாஜ் http://www.kjartan.org/backrubfaq/
மாற்று மனநல மருத்துவம் www.alternativementalhealth.com/

மருத்துவச் செய்திகள்:
mercksource.com/
nlm.nih.gov/

மனித உடற்கூறு பற்றிய தளம்: www.innerbody.com/

தனிப்பட்ட நோய்கள் பற்றிய தளங்கள்:
நீரிழிவு அல்லது சர்க்கரை வியாதி பற்றி அறிய:
diabetes.niddk.nih.gov/
National Institute Of Diabetes, Digestive & Kidney Disease
http://www.diabetes.org/

இதயம் நுரையீரல் ,இரத்தம் சம்பந்தமான நோய்கள் பற்றி அறிய:
nhlbi.nih.gov/
National Heart ,Lung and Blood Institute
American heart Association
http://www.lungusa.org

கிட்னி சம்பந்தமான பக்கம்:
Kidney & Urologic Disease

ஜீரண மண்டல நோய்கள்:
Digestive Diseases A to z
digestive.niddk.nih.gov/

மூளை மற்றும் நரம்பியல்
http://www.ninds.nih.gov/index.htm

ஒற்றைத் தலைவலி (மைக்ரேன்)
http://www.migraines.org/

வலிப்பு
http://www.epilepsy.com/

Alzheimer’s Association
http://www.alz.org

American Academy of Dermatology-Public Resource Center
http://www.aad.org/public

American Dental Association-Public
http://www.ada.org/public/index.asp

Asthma and Allergy Foundation of America
http://www.aafa.org

National Cancer Institute (NCI)
http://www.cancer.gov

கண் பாதுகாப்பு
http://www.nei.nih.gov/health
http://www.allaboutvision.com/
http://www.mic.stacken.kth.se/Diseases/C11.html
http://www.agingeye.net/

National Institute of Child Health and Human Development
http://www.nichd.nih.gov/

முதியோர் பாதுகாப்பு:
Tips for Older adults
Smart parent Health Source
Aging well
National Institute on Aging
http://www.nia.nih.gov/

பெண்கள் நலம்
http://www.obgyn.net/women/conditions/conditions.asp

National Institute on Arthritis and Musculoskeletal and Skin Diseases
http://www.niams.nih.gov/

National Institute of Mental Health (NIMH) Health Information
http://www.nimh.nih.gov/healthinformation/index.cfm

National Institute of Neurological Disorders and Stoke (NINDS)
http://www.ninds.nih.gov

National Stroke Association
http://www.stroke.org/

Your Orthopaedic Connection (American Academy of Orthopaedic Surgeons
http://orthoinfo.aaos.org/
Pain Resource Center

திக்கு வாய் http://www.stutteringhelp.org/
முதுகு வலி ,கழுத்து வலி http://www.spine-health.com/

உணவு உட்பொருட்கள் பற்றிய கேள்விகளுக்குப் பதில்:
http://www.vrg.org/nutshell/faqingredients.htm
Food Nutrition ,Cosmetics Q&A
ask Noah

உணவுப் பொருட்கள் பற்றிய ஆய்வுத் தகவல்கள்:
ifr.ac.uk/
Weight loss and control
Nutrition
Better Health and You
Nutrition Fact Sheets

Nutrients - Food Research Institute
The Nutrition source
Nutrition Index
Vitamin index
Overview of Dietary Supplements - FDA

Nutrition Table For 7,248 Foods
Food Standards Agency
Nutrition and Your Health
Healthy Eating on the Run: A Month of Tips
Vegetarian Nutrition

Vegetarian Recipes
Recipes for Cooking the Heart Hearty Way
Ingredient Information
Lactose Intolerance - American Dietetic Association
Chemical Cuisine: CSPI's Guide to Food Additives

A Fresh Look at Food Preservatives
Food Additives
Staking a Claim to Good Health - FDA
Consumer Advice
Micronutrient Information Center

போதைப் பொருள் விடுதலை
www.cdc.gov/tobacco/index.htm -புகைப்பழக்கம்
www.usd.edu/cd/publications/fashandbook.cfm -மதுப்பழக்கம்
http://www.habitsmart.com/


பூச்சி ஒழிப்பு:
The p(B)est Control

சுற்று சூழல் மாசு உருவாக்கும் உடல் நலக் கேடு
http://www.scorecard.org/health-effects/

டாக்டர்களுடன் ஒரு சாட்டிங்
தமிழக அரசின் குடும்ப நலத்துறை இணைய தளம் மூலம் நமக்குத் தேவையான துறை சார்ந்த மருத்துவ நிபுணருடன் இணையம் வழி சாட் செய்து ஆலோசனைகள் பெறலாம்.
முகவரி இதோ www.tnhealth.org/chat.htm
இரத்த தானம் செய்ய விரும்புபவர்களும் ,இரத்தம் அவசரமாக தேவைப்படுவோர்களும் இந்த அருமையான தளத்தை பயன் படுத்தலாம். Indian Blood Donors.com
SMS மூலம் இரத்தம் பெறலாம்
இப்பொழுது இரத்தம் பெறுவது மிகவும் எளிது, இதற்க்கு நீங்கள் செய்யவேண்டியது என்னவெனில் உங்கள் அலை பேசியிலிருந்து "BLOOD" <உங்களுக்கு தேவையான இரத்தப் பிரிவு> டைப் செய்து 96000 97000 என்ற எண்ணுக்கு அனுப்பவும்.
உதாரணமாக "BLOOD B+" .
உடனே ஒரு இரத்த கொடையாளர் உங்களை தொடர்பு கொள்வார்.

http://www.suggestadoctor.in/ இந்தியாவில் பரிந்துரை செய்யப்படும் மருத்துவர்களை பட்டியலிடுகிறது.

தென்னிந்தியாவில் சிறந்த மருத்துவ மனைகளின் பட்டியல்

Leia mais...

பயனுள்ள முகவரிகள்-அரசு சேவைகள்


Services offered by Government of Tamil Nadu

Industrial Policies
Judiciary
Recruitment Services
Schemes of Departments
Employment Portal
Tourism
Tamil Nadu State Transport Corporations
Chennai Metro Water
Municipal Corporations / Municipalities
Tamil Nadu Electricity Board (TNEB)
Acts and Rules
Business and Commerce
Educational Services
Enquiry Services
Government Documents and Reports
Health Services

Leia mais...

Thursday, March 17, 2011

ஜப்பான் சுனாமி

ஜப்பான் சுனாமி... பலி 20,000ஐ தாண்டியது; அச்சுறுத்தும் அணுக் கதிர்வீச்சு!டோக்கியோ, மார்ச் 13,2011
வடகிழக்கு ஜப்பானில் சுனாமிப் பேரலை தாக்கியதின் காரணமாக பலியானோர் எண்ணிக்கை 1,700-ஐ தாண்டியது. புதிதாக அணு உலையில் இருந்து கதிர்வீச்சு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஃபுகுஷிமாவில் உள்ள அணுமின் நிலையத்தில் சனிக்கிழமை நிகழ்ந்த வெடிப்புச் சம்பவம் அச்சத்தை உண்டாக்கிய நிலையில், மற்றொரு அணுமின் நிலையத்தில் உள்ள அணு உலை உருகி, கதிர்வீச்சு பரவும் அபாயம் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்டுள்ளதாக ஜப்பானிய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணி நிலவரப்படி, ஏறத்தாழ 600 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் செண்டாய், ஃபுகிஷிமா மற்றும் மியாசகி ஆகிய பகுதிகளில் பலி எண்ணிக்கை 1,700-ஐ தாண்டி விட்டதாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன. சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

மினாமிசன்ரிகு என்ற சிறு நகரின் ஏறத்தாழ 10 ஆயிரம் பேரின் நிலை என்ன என்பது இதுவரை தெரியவில்லை.
கதிர்வீச்சு அபாயம்.. லட்சக்கணக்கில் வெளியேற்றம்..

இதனிடையே,  பூகம்பம் - சுனாமியின் காரணமாக, ஜப்பானின் அணு மின் நிலையம் ஒன்று சனிக்கிழமை வெடித்துச் சிதறியதால் பெரும் அச்சம் ஏற்பட்டது.  வடகிழக்கு ஜப்பானின் ஃபுகுஷிமாவில் உள்ள இந்த அணு மின் நிலையத்தில் உள்ள அணு உலை (எண் 1) பாதிக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அங்கு உயிர்சேதம் ஏற்பட்டதாக இதுவரை செய்தி இல்லை.(செய்தி: ஜப்பான் சுனாமி: அணு மின் நிலைய வெடிப்பால் அச்சம்)

ஆனால், ஞாயிற்றுக்கிழமை புதிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஃபுகுஷிமாவில் உள்ள மற்றொரு அணு உலை (எண் 2) உருகி, வெடித்துச் சிதறும் ஆபத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த அணு உலையைத் தணிப்பதற்குரிய எந்திர சாதனத்தில் சரிசெய்ய முடியாத கோளாறு ஏற்பட்டுள்ளதால், அணு உலை உருகுவதற்கான அபாயமும், வெடிப்பதற்கான சாத்தியமும் உண்டென தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, அந்த அணு உலை உள்ள இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 1,70,000 வெளியேற்றப்பட்டுவிட்டதாக ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான ஐ.ஏ.இ.ஏ தெரிவித்துள்ளது.

இந்தப் பேரழிவால், ஜப்பானின் வடகிழக்குப் பகுதிகளில் இருந்து 2,15,000 பேர் தங்கள் வீடுகளையும் உடமைகளையும் இழந்து உள்நாட்டு அகதிகளாகியுள்ளதாக காவல்துறை மதிப்பிட்டுள்ளது.
தற்போது, சுனாமிப் பேரலையால் வீடுகளையும் கட்டடங்களையும் சூழ்ந்த தண்ணீர் வடிந்து வரும் நிலையில், மாடிகளின் மேற்கூரைகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

ஜப்பான் சுனாமி... செய்தித் துளிகள்

* ஜப்பானில் இதுவரை இல்லாத மிகக் கடுமையான பூகம்பம் இது.
* வடகிழக்கு கடற்கரையோரப் பகுதியை பல மீட்டர்கள் உயரம் கொண்ட சுனாமி அலைகள் தாக்கின.

* கடலில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 8.9 ஆக பதிவு.

* செண்டாய் நகரில் ஒரே நாளில் 300 சடலங்கள் மீட்பு.

* ஏறத்தாழ 400 பேர் காணவில்லை என்கிறது ஜப்பான் போலீஸ்.

* ஒட்டுமொத்த அழிவை மதிப்பீடு செய்வது இப்போதைக்கு மிகக் கடினம் என்கிறார்கள் நிபுணர்கள்.

*  சுமார் 100 பேரை ஏற்றிச் சென்ற ஒரு கப்பல் சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டது.

* பகுஷிமா டேய்சி அணு உலை பாதித்ததால் மூடப்பட்டது. அந்தப் பகுதியில் இருந்த சுமார் 2000 பேர் வெளியேற்றம்.

* மியாகி பகுதியில் ஊள்ள இன்னொரு அணு உலையில் தீ விபத்து.

*  தமது நாட்டில் நிலைகொண்டிருக்கும் அமெரிக்க படையினர் நிவாரண நடவடிக்கையில் உதவ வேண்டும் என்று ஜப்பான் கோரிக்கை.

* பசிபிக் கடல் பகுதி நாடுகளில் சுனாமி எச்சரிக்கை. ஹவாய் தீவுகளை குறைந்த மீட்டரில் சுனாமி எழுந்ததால் பாதிப்பில்லை.

* லத்தீன் அமெரிக்க நாடுகளான மெக்ஸிகோ, சிலியிலும் சுனாமி எச்சரிக்கை.

டோக்கியோவில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் பசிபிக் கடலுக்கு அடியில் 20 மைல்கள் ஆழத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட கடுமையான பூகம்பம், ரிக்டர் அளவில் 8.9 ஆக பதிவாகியிருந்தது.
கடலில் எழுந்த சுனாமிப் பேரலைகள் கப்பல்கள், கட்டடங்கள் என அடித்து துவம்சம் செய்தபடி நிலப் பகுதிகளை கடுமையாகத் தாக்கியது.
இந்த சுனாமி தாக்குதலுக்கு கடற்கரைப் பகுதியான செண்டாய் மிக அதிக பாதிப்புக்குள்ளானது.
இதன் தொடர்ச்சியாக ரஷ்யா, தைவான், இந்தோனேஷியா, ஹவாலி, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பட்டு வரும் சுனாமி காட்சிகள் உலக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தச் சுனாமிப் பேரழிவால், ஜப்பான் வரலாற்றில் இல்லாத அளவுக்கு சேதம் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
பசிபிக் கடலில் இருந்து எழும்பிய சுனாமிப் பேரலைகள் 13 அடி வரை மேலெழுந்து ஜப்பானின் கடலோர நகர் பகுதிகளைத் தாக்கியுள்ளது.
பல்லாயிரக்கணக்கான கட்டடங்களும் வீடுகளும் வாகனங்களும் அடித்துச் செல்லப்பட்டன.
தொழிற்சாலைகளில் தீ விபத்துகள் ஏற்பட்டு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.
அணு உலை நிலையங்கள், முக்கிய விமான நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டன.
டோக்கியோ, ஒசாகி, கியோடோ உள்ளிட்ட நகர்களில் நூற்றுக் கணக்கானோர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல இடங்களில் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்திய பெருங்கடலில் சுனாமி எச்சரிக்கை இல்லை என்றும், இந்தியாவுக்கு ஆபத்து இல்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பேரழிவு பூகம்பங்கள்...

* ஜூலை 27,1976, தாங்ஷான், சீனா, பலி - 6,55,000 - ரிக்டர் 7.5
* டிச.26, 2004, சுமத்ரா, இந்தோனேஷியா, பலி - 2,27,898 - ரி9.1
* ஜன.12, 2010, ஹைத்தி, பலி - 2.22,570 - ரி7.0
* மே 12, 2008, சிச்சுவான், சீனா, பலி - 87,587 - ரி7.9
* அக்.8,2005, பாகிஸ்தான், பலி - 80,361 - ரி7.6
* மே 31, 1970 சிம்போத், பெரு, பலி - 70,000- ரி7.9
* ஜூன் 20, 1990, மஞ்சில், ஈரான், பலி - 40,000, ரி7.4
* டிச.26, 2003, பாம், ஈரான், பலி - 31,000, ரி6.6
* ஜன.26, 2001, குஜராத், இந்தியா, பலி - 20,023, ரி7.7
* ஆக.17 1999, இஸ்மித், துருக்கி, பலி - 17,118, ரி7.6
* செப்.30, 1993 லதூர், இந்தியா, பலி - 9,748, ரி6.2
* ஜன. 16, 1995, கோபே, ஜப்பான், பலி - 5,530, ரி6.9
- ஆதாரம்: USGS


Leia mais...

சமையலறை

Vegetables / கறிகாய்
Spices & Essentials / அவசியமான
English Tamil தமிழ்
Bottle gourd Suraikkai சுரைக்காய்
Cauli flower Kali flower காலிபிளவர்
Capsicum Koda milagai குடைமிளகாய்
Carrot Carrot கேரட்
Red Chilly Kaanja Milagai வரமிளகாய்
Green Chilly Patchai Milagai பச்சை மிளகாய்
Coconut Thengai தேங்காய்
Sambar Onion Chinna (or) Sambar Vengayam சின்ன வெங்காயம்
Spring Onion Vengaya thaal (leaves) வெங்காயத்தாள்
Onion Vengayam வெங்காயம்
Chick Peas Pattani பச்சைப் பட்டாணி
Potato Urulai kilangu உருளைக்கிழங்கு
Tomato Thakkali தக்காளி
Mint leaves Pudhina புதினா
Ladies finger Vendaikaai வெண்டைக்காய்
Drumstick Murungaikaai முருங்கைக்காய்
Common Beans Beans பீன்ஸ்
Village Beans Avaraikaai அவரைக்காய்
Lined gourd / Ridge gourd Peerkankaai பீர்கங்காய்
Snake gourd Pudalankaai புடலங்காய்
Mushroom Kaalaan காளான்
Green Plantain Vaalaikaai வாழைக்காய்
Garlic Poondu பூண்டு
Tamarind Puli புளி
Ginger Ingi இஞ்சி
Curry leaves Kariveppilai கருவேப்பிலை
Drumstick leaves Murungai Keerai முருங்கைக்கீரை
Dry Ginger Sukku சுக்கு
Yam Karunai Kilangu கருணைக்கிழங்கு
Dry coconut Copparai கொப்பரை
Plantain Flower Vaalaippu வாழைப்பூ
Colacasia Seppan kilangu சேப்பங்கிழங்கு
Bitter gourd Pakarkaai பாவக்காய்
Bottle Gourd Surakkaai சுரக்காய்
Brinjal / Eggplant Kathirikkaai கத்திரிக்காய்
Cucumber Vellarikkaai வெள்ளரிக்காய்
Chayote Chow Chow சௌ சௌ
Curri Leaves Kariveppillai கருவேப்பிலை
Gherkins Kovakkaai கோவக்காய்
Cluster Beans Kothavarangaai கொத்தவரங்காய்
Cabbage Muttai Kose முட்டைகோஸ்
Grated Coconut Thuruviya Thengaai தேங்காய்
Raw Mango Maangai மாங்காய்
Dry Coconut kopparai கொப்பரை தேங்காய்
Yardlong bean Payathamkaai பயத்தங்காய்
Mushroom Kaalaan காளான்
Ash Gourd Poosanikkaai சாம்பல் பூசணி
Pumkin Manjal Poosani பூசணி
Tropical Root Maravalli Kilangu மரவள்ளிகிழங்கு
Raddish Mullangi முள்ளங்கி
Sweet Potato Sarkarai Valli சக்கரை வள்ளி
English Tamil தமிழ்
Asafoetida Perungayam பெருங்காயம்
Bay Leaves Bringe Ilai பிரின்ஜ் இலை
Cardamom Yelakkai ஏலக்காய்
Cashewnut Mundhiri paruppu முந்திரிப் பருப்பு
Nutmeg Jadhikkai ஜாதிக்காய்
Cinnamon Pattai பட்டை
Cloves kirambu, lavangam கிராம்பு
Coriander leaves Kothamalli கொத்தமல்லி
Corn flour Makka cholam maavu மக்காச்சோளம் மாவு
Curds Thayir தயிர்
Honey Then தேன்
Jaggery Vellam வெல்லம்
Raisins Thiratchai திராட்சை
Saffron Kungumapoo குங்குமப்பூ
Spinach Pasalai keerai பசலைக் கீரை
Suji Ravai ரவை
Turmeric Manjal மஞ்சள்
Vermicelli Semia சேமியா
Red Chilly Powder Milakaai Thool மிளகாய் பொடி
Coriander Powder Thaniyaa Thool தனியா பொடி
Bengal Gram Flour Kadalai Maavu கடலை மாவு
Wheat Flour Gothumai Maavu கோதுமை மாவு
Rice Floor Arisi Maavu அரிசி மாவு
Maida Maida Maavu மைதா மாவு
Sugar Sarkarai சர்கரை
Ghee Nei நெய்
Oil Refined Oil சமையல் எண்ணை
Gingely Oil Nallennai நல்லெண்ணை
Groundnut Oil Kadallennai கடலெண்ணை
Butter Vennai வெண்ணெய்
Buttermilk More மோர்
Sago Javvarisi ஜவ்வரிசி
     
Measures & Vessels
1 cup 1 regular size tumbler 200 ml
1 tsp 1 small spoon full 6 ml
1 tbs 1 table spoon full 18 ml
Kadai / Wok / pan Vessel to fry / deep fry வானல்
Pressure Cooker Cooker குக்கர்
Vessel / bowl Paathiram பாத்திரம்
Electric Mixer Mixie மிக்ஸி
Plain Pan / Griddle Dosa Stone தோசைக்கல்
Puri / Chapathi pad Chapathi Kal சப்பாத்திக்கல்
Plate Plate
தட்டு
Knife Kathi த்தி
Filter Vadikatti டிகட்டி
Grinder Grinder கிரைண்டர்
Fruits / பழம்
Grains / தானியம்
English Tamil தமிழ்
Lemon Elumicham Palam எலுமிச்சம் பழம்
Tomato Thakaali Palam தக்காளி
Apple Apple ஆப்பில்
Orange Kamalaa Orange கமலா ஆரஞ்சு
Sweet Lime Saathukudi சாத்துக்குடி
Pine Apple Annaasi Palam அன்னாசிப்பழம்
Jack Fruit Palaa Palam பலாப்பழம்
Chikku Saporta சப்போட்டா
Black Grapes Panneer Thirachai Palam பன்னீர் திராட்சை
Green Grapes Thirachai Palam திராட்சைப்பழம்
Pomegranate Maathulam Palam மாதுளம் பழம்
Custard Apple Seetha Palam சீதாப்பழம்
Guava Koiyaa Palam கொய்யா பழம்
Banana Valai Palam வாழைப்பழம்
Green Banana Patcha Vaalaipalam பச்சைப்பழம்
Raisin Kaainda Thiraaichai காய்ந்த திராட்சை
Papayaa Pappaali பப்பாளிப்பழம்
Mango Malgova Mambalam மல்கோவா
Pears Paerikkaai பேரிக்காய்
Dates Paeritchai Palam பேரீச்சம் பழம்
Water Melon Tharpoosani தர்பூசணி
Muskmelon Mulaam Palam முலாம் பழம்
Fig Athi Palam அத்தி பழம்
Plum Ooty apple / Plums ஊட்டி ஆப்பில் / பிளம்ஸ்
Shell Apple VilaamPalam விலாம் பழம்
English Tamil தமிழ்
Bengal gram dhal Kadalai paruppu கடலைப் பருப்பு
Black gram Vellai Mulu Ulundu முழு உளுந்து
Black pepper Milagu மிளகு
Coriander seeds Thaniyaa தனியா
Cumin seed Jeeragam கருஞ்சீரகம்
Fenu greek Vendhayam வெந்தயம்
Fennel (Cake seeds) Perunjeerakam சோம்பு
Fried Gram Pottukadalai பொட்டுக்கடலை
Gingilli (or) Seasame seeds Ellu எள்ளு
Green gram dhal Payatham paruppu பயத்தம் பருப்பு
Ground nut Verkkadalai வேர்க்கடலை
Lentil Mysore paruppu மைசூர் பருப்பு
Mustard Kadugu கடுகு
Poppy Seeds Kasa kasaa கசகசா
Red gram dal Thuvaram paruppu துவரம் பருப்பு
Tymol seeds Omam ஓமம்
Wheat Godhumai கோதுமை
Split Black Gram Vellai udaitha ulundu வெள்ளை உடைத்த உளுந்து
Moong Gram Dal Manja Pasi Parupu மஞ்சள் பாசிப் பருப்பு
Basmathi Rice Biriyani Arisi பிரியாணி அரிசி
Idly Rice Itili Arisi இட்லி அரிசி
Rice Pulungal Arici புழுங்கல் அரிசி
Raw Rice Patchai Arici பச்சரிசி
Gingely Seed Vella Ellu வெள்ளை எள்ளு
Black Gingely Seed Karupu Ellu கறுப்பு எள்ளு
Barley Paarlee வாற்கோதுமை
Horse Gram Kollu கொள்ளு
Dry Beans Mottachai மொச்சை
Maize Cholam சோளம்
Click here to e-mail us if U have more Glossary or Recipe

Leia mais...

  ©Raka - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo