Saturday, November 10, 2012

நல்ல தமிழ் கணினி இணைய தளங்கள்



1. சூர்யா கண்ணன்
http://suryakannan.blogspot.com
Alexa Rank 109,302

2. புதுவை
http://www.pudhuvai.com
Alexa Rank 136,355

3. வின்மணி
http://winmani.wordpress.com
Alexa Rank 211,569

4. Cybersimman's Blog
http://cybersimman.wordpress.com
Alexa Rank 243,568

5. வேலன்
http://velang.blogspot.com
Alexa Rank 244,526

6. Saran R - Learning never ends
http://saranr.in/
Alexa Rank 277,299

7. PKP.in
http://pkp.blogspot.com
Alexa Rank 290,739

8. உபுண்டு
http://ubuntuintamil.blogspot.com
Alexa Rank 321,034

9. Browse All
http://browseall.blogspot.com
Alexa Rank 342,495

10. தமிழ் லினக்ஸ்
http://fosstamil.blogspot.com
Alexa Rank 460,135

11. பொன்மலர் பக்கம்
http://ponmalars.blogspot.com
Alexa Rank 593,478

12. சின்ன பையன்
http://cp-in.blogspot.com
Alexa Rank 602,324

13. Tamil Fa
http://tamilfa.blogspot.com/
Alexa Rank 692,987

14. கணினி மென்பொருட்களின் கூடம்
http://www.gouthaminfotech.com
Alexa Rank 697,631

15. கிருஷ்ணா (Krishna)
http://rvkrishnakumar.blogspot.com
Alexa Rank 802,775

16. தமிழ்நுட்பம்
http://tvs50.blogspot.com
Alexa Rank 818,444

17. GNU-கட்டற்ற மென்பொருள் - லினக்ஸ் - தமிழன் வெல்வான்
http://gnutamil.blogspot.com
Alexa Rank 889,284

18. தகவல் தொழில்நுட்பப்பூங்கா
http://tamilitpark.blogspot.com/
Alexa Rank 893,502

19. தமிழ்கம்ப்யூட்டர்
http://tamilcomputerinfo.blogspot.com/
Alexa Rank 982,986

20. எங்கும் தொழில்நுட்பம் எதிலும் தொழில்நுட்பம்
http://www.sollamattaen.co.cc/
Alexa Rank 1,062,604

21. உபுண்டு இயங்குதளம்
http://ubuntu5.blogspot.com/
Alexa Rank 1,066,404

22. தொழில்நுட்ப உலகம்
http:// http://www.sollamattaen.co.cc/
Alexa Rank 1,062,604

http://ubuntu5.blogspot.com/
Alexa Rank 1,066,404
Alexa Rank 1,090,826
itulaku.blogspot.com
Alexa Rank 1,090,826

23. Vino's Cafe
http://dareone.blogspot.com/
Alexa Rank 1,112,584

24. சுடுதண்ணி
http://suduthanni.blogspot.com
Alexa Rank 1,565,216

25. தமிழ் CPU
http://tamilcpu.blogspot.com
Alexa Rank 1,753,858

26. அதே கண்கள்
http://athekangal.blogspot.com
Alexa Rank 1,784,626

27. லினக்ஸ்
http://kumarlinux.blogspot.com/
Alexa Rank 1,930,011

28. Ivan's Blog
http://ipadiku.blogspot.com
Alexa Rank 2,050,329

29. PC Tricks & Tips தமிழில் ...
http://pc-tricks-tamil.blogspot.com/
Alexa Rank 2,053,068

30. TamilTech.info
http://www.tamiltech.info
Alexa Rank 2,103,454

31. கணினி அறிவியல் மாணவர்களுக்காக
http://kaniniariviyal.blogspot.com/
Alexa Rank 2,143,223

32. தொழில்நுட்ப செய்திகள்-தமிழில்
http://techbyvarma.blogspot.com
Alexa Rank 2,728,673

33. தமிழ் வெஃப்
http://mytamilweb.blogspot.com
Alexa Rank 2,823,763

34. தமிழில் போட்டோசாப் பாடம் (MD Khan)
http://tamilpctraining.blogspot.com/
Alexa Rank 2,846,651

35. தகவல் மலர்
http://thagavalmalar.blogspot.com/
Alexa Rank 2,967,870

36. பிலாக்கர் டிப்ஸ்
http://bloggertipsintamil.blogspot.com
Alexa Rank 3,050,191

37. Tamil Blogging Tips
http://tamilbloggingtips.blogspot.com
Alexa Rank 3,264,984

38. தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள் (MD Khan)
http://tamilcomputertips.blogspot.com/
Alexa Rank 3,803,995

39. உலவு (ulavu blog)
http://ulavublog.blogspot.com
Alexa Rank 4,352,220

40. கிராமத்து பையன்
http://gramathan.blogspot.com
Alexa Rank 4,596,364

41. தமிழ் கணினியகம்
http://thamilkaniniyagam.blogspot.com/
Alexa Rank 4,645,561

42. Tamilhackx
http://www.tamilhackx.com
Alexa Rank 4,829,061

43. Vinoth Infotek
http://vinothinfotek.blogspot.com/
Alexa Rank 5,052,981

44. அனூப்புடன் ஒரு ஐடி வலம்
http://itvalam.blogspot.com
Alexa Rank 5,449,613

45. சில விஷயங்கள் – கணிப்பொறியியலில்
http://tamilcomputer.wordpress.com/
Alexa Rank 6,084,729

46. K. Menan
http://kmenan.blogspot.com/
Alexa Rank 7,391,227



47. கணிநுட்பம்
http://kaninutpam.blogspot.com
Alexa Rank 7,739,560

48. கம்ப்யூட்டர் மெக்கானிக்
http://420gb.blogspot.com/
Alexa Rank 7,825,000

49. தமிழ் கணினி
http://tamil-kanini.blogspot.com/
Alexa Rank 8,028,064

50. தமிழ் Fedora
http://fedoraintamil.blogspot.com/
Alexa Rank 10,839,981

51. கற்றது Excel
http://sans-excel.blogspot.com
Alexa Rank 12,353,712

52. AutoCad
http://cadlearn.blogspot.com/
Alexa Rank இல்லை.

கீழ்க்கண்ட sub-domain-களுக்கு அலெக்ஸா ரேங்க் இல்லை.

உபுண்டு நேசன்
http://ubuntu.thamiziniyan.com/

குறிப்புகளும் தந்திரங்களும்
http://tipsntricks.yetho.com/

தமிழ்த் தொழில்நுட்பம்
http://tamiltech.indioss.com/

தமிழில் தொழில்நுட்பம்
http://www.blog.tamil-tech.info/

Leia mais...

சென்னை மாநகர பஸ் ரூட்டை காட்டும் புதிய மொபைல் அப்ளிக்கேஷன்



A Mobile Application For MTC Information
எந்த ஒரு தொழில் நுட்பமும் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெறுவது என்பது அதன் பயன்பாடுகளை பொருத்து தான் இருக்கிறது.

\அத்தகைய பயன்பாட்டுடன் இங்கே ஒரு புதிய தொழில் நுட்பம். சென்னை எம்டிசி இன்ஃபோ என்ற புதிய மொபைல் அப்ளிக்கேஷனை உருவாக்கி இருக்கிறார் டி.ஸ்கந்தா என்பவர்.

இந்த புதிய அப்ளிக்கேஷனில், சென்னை மாநகர போக்குவரத்து கழக பஸ் செல்லும் வழி தடங்கள் விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது. பெங்களூர் வாசியான டி.ஸ்கந்தா என்பவர் சென்னை வந்திருந்த போது சரியான பஸ் ரூட் பற்றிய விவரங்கள் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டதால் இந்த எம்டிசி பஸ் ரூட் மொபைல் அப்ளிக்கேஷனை உருவாக்கி இருக்கிறார்.

இந்த அப்ளிக்கேஷனில் சென்னை மாநகர பஸ்கள் செல்லும் வழியில் இருந்து அதன் டிக்கெட் விலை முதல்கொண்டு தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில், ஸ்கந்தா சென்னை வந்தபோது மொழியும் தெரியாமல், சரியான பஸ் விவரமும் தெரியாமல் மிக அவதிப்பட்டதால் இப்படி ஒரு மொபைல் அப்ளிக்கேஷனை உருவாக்கி இருக்கிறார். 

 இந்த சென்னை எம்டிசி இன்ஃபோ அப்ளிக்கேஷனில் பயணம் செய்ய எடுத்து கொள்ளும் நேரம் கூட கொடுக்கப்பட்டுள்ளது.
ஸ்கந்தாவின் இந்த உபயோகமான படைப்பை ஆன்ட்ராய்டு மார்க்கெட்டில் இருந்து எளிதாக ஃப்ரீ டவுன்லோட் செய்து கொள்ள முடியும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆன்ட்ராய்டு புதிய மொபைல் அப்ளிக்கேஷன்களை உருவாக்கியது.

உதாரணத்திற்கு சென்னை ட்ரெய்ன்டிராய்டு மற்றும் சென்னை ட்ரெய்ன் டைம் டேபிள் மூலம் ரயில் புறப்படும் நேரத்தில் இருந்து மற்ற அனைத்து விவரங்களையும் எளிதாக பெறலாம். இது போல் பஸ் பற்றிய தகவல்களை எளிதாக பெற பெங்களூரை சேர்ந்த டி.ஸ்கந்தா என்பவர் இந்த எம்டிசி இன்ஃபோ என்ற புதிய மொபைல் அப்ளிக்கேஷனை உருவாக்கி இருக்கிறார்.

Download MTC INFO for Android

Download Chennai TRAIN Application

Leia mais...

சென்னையின் பஸ்ரூட் எளிதில் அறிந்துகொள்ள



சென்னையின் பஸ் ரூட் எளிதில் அறிந்து கொள்ள இந்த இணைய தளம் நமக்கு அருமையாக வழிகாட்டுகின்றது.இந்த இணையதளம் செல்ல இங்கு கிளிக்செய்யவும்.இதனை கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நீங்கள் எங்கிருந்து எங்கு செல்லப்போகின்றீர்களோ அந்த இடத்தை குறிப்பிடவும்.நாம் தாம்பரத்திலிருந்து சூளை போஸ்ட் ஆபிஸ் குறிப்பிட்டுள்ளேன்.எனக்கு வந்துள்ள படத்தினை பாருங்கள்.



இதில் எந்த ரூட் நமக்கு தேவையோ அந்த ரூட்டை கிளிக் செய்தால் பஸ் எங்கிருந்து கிளம்பி எந்த எந்த ஸ்டாப்பிங் வரை செல்லும் என்கின்ற விவரம் கிடைக்கும்.
மேலும் இதிலேயே முக்கிய இடங்களாக சியிஎம்டி.பிராட்வே.எக்மோர்.தியாகராயநகர்.திருவான்மியூர்.சென்ட்ரல் என இடங்களும்கொடுத்துள்ளார்கள்.உதாரணமாக நீங்கள் ;தி.நகர் கிளிக் செய்தால் அந்த ஊரிலிருந்து எங்கு எங்கு பஸ்கள் செல்கின்றன - தி.நகர் வழியாக எந்த எந்த பஸ்கள் செல்கின்றன என்கின்ற விவரம் பஸ் எண்ணுடன் நமக்கு கிடைக்கும்.பஸ் எண்ணை கிளிக் செய்தால் உங்களுக்கு அந்த பஸ்ஸீன் உடைய ரூட் மேப்புடன் கிடைக்கும்.மேலும் ஸ்பெஷல் ரூட் என ஏசிபஸ்.எல்எஸ்எஸ் பஸ். மினி பஸ். ஆர்ட்னரி பஸ்.இரவு சர்வீஸ் பஸ் என அனைத்து விவரங்களும் இதில் எளிதில அறிந்துகொள்ளலாம்.இந்த பக்கத்தை புக் மார்க்செய்து கொண்டால் மற்றவர்களுக்கு ரூட் பொட்டுகொடுப்பதுடன் இல்லாமல் சென்னையின் சந்துபொந்துகளையும் நீங்கள் எளிதில் அறிந்துகொள்ளளலாம்
You might also like:

Leia mais...

நாம் அறிந்திருக்க வேண்டிய முக்கிய தகவல்கள்




  • மூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை ,காற்றை வெளியேற்றுவதற்கு.
  • கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம்.
  • ஆண்களுக்கு வலப் புறமும் பெண்களுக்கு இடப் புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும்.
  • ஞானிகளும் ரிஷிகளும் தியானம் செய்துபோது வலது காலை மடக்கி இடது தொடை மீது போட்டு தியானம் செய்வார்கள். இதற்கு காரணம் இடது காலை மடக்கி தியானம் செய்யும் போது வலது பக்கமாக சுவாசம் போகும். வலது என்றால் தமிழில் வெற்றி என்று பொருள். வலது பக்கமாக சுவாசம் செல்லும்போது தியானம்,பிராத்தனை எல்லாம் கண்டிப்பாக பலன் தரும்.
  • இந்த நாடியை அடக்குவதாக இருந்தால் வலது பக்க சுவாசத்திற்கு மாற்றவேண்டும். அதே மாதிரி ஒரு அமைப்புத்தான் மூக்குத்தி.
  • நமது மூளைப் பக்கத்தில் ஹிப்போதெலமஸ் என்ற பகுதி இருக்கிறது. நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்தக் கூடிய, செயல்படக் கூடிய அளவு சில பகுதிகள் உள்ளன.
  • அந்தப் பகுதியில் சில உணர்ச்சி பிரவாகங்கள் உள்ளன. இதனைச் செயல்படுத்துவதற்கு அந்தப் பகுதி துணையாக இருக்கிறது. இப்படி இந்தப் பகுதியை அதிகமாக செயல் படுத்துவதற்கும் பெண்ணின் மூக்கில் இடது பக்கத்தில் குத்தக்கூடிய முக்குத்தி வலது பக்க மூளையை நன்றாக செயல் படவைக்கும்.
  • இடது பக்கத்தில் முளை அடைப்பு என்றால் வலது பக்கத்தில் நன்கு வேலை செய்யும். வலது பக்கம் அடைத்தால் இடது பக்கம் உள்ள மூளை அதிகமாக இயங்கும்.
  • இன்றைய நம்முடைய மனித வாழ்க்கைக்கு அதிகமாக இந்த இடது பக்க மூளையை அடைத்துவலது பக்கமாக வேலை செய்ய வைக்கிறோம். அதனால் வலது கை, வலது கால் எல்லாமே பலமாக உள்ளது.
  • பெண்கள் முக்குத்தி அணியும்போது, முன் நெற்றிப் பகுதியில் இருந்து ஆலம் விழுதுகள் போல்சில நரம்புகள் நாசி துவாரத்தில் இறங்கி கீழே வரும். இப்படி விழுதுகள் மூக்குப் பகுதியிலும், ஜவ்வு போல மெல்லிய துவாரங்களாக இருக்கும். ஆலம் விழுதுகள் போல உள்ள மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க முக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ள வெட்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். அதுமட்டுமல்ல, மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும்.
  • பருவப் பெண்களுகே முக்குத்தி அணிவிக்கப்ப்டுகிறது. பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது, தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும்.இந்த வாயுக்களை வெளிக்கொண்ருவதற்கு ஏற்படுத்தட்டதுதான் இந்த மூக்கு குத்துவது. மூக்கு குத்துவதால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறு சரி செய்யப்படுகின்றன்.
  • இடப்பக்கம்தான் பெண்கள் மூக்குத்தி அணியவேண்டும். இடது பக்கம் குத்துவதால் சில மாற்றங்கள் ஏற்படும். சிந்தனா சக்தியை ஒரு நிலைப்படுத்துகிறது. மனதை அமைதிப்படுத்துகிறது. தியானம், பிராத்தனையில் ஈடுபட உதவுகிறது.

Leia mais...

உங்க ரயில் எங்கேயிருக்குன்னு இனி கூகுல் மேப்பிலேயே பார்க்கலாம்!



நான் சென்ற புதன்கிழமை சென்னையிலிருந்து பெங்களூருக்கு வர மாலை 5:25 மணிக்கு ஒரிசாவில் இருந்து வரும் ஒரு  சிறப்பு வண்டியில் டிக்கட் பதிவு செய்திருந்தேன்.  சென்னை நகரப் பேருந்தில் அடிச்சு பிடிச்சு அங்கே போனதுக்கப்புறம்தான் சொல்றாங்க அந்த வண்டி மூணு மணி நேரம் லேட்டுன்னு.  அப்புறம் கடைசியா 9:45 மணிக்குத்தான் வந்தது.  இது முதலிலேயே தெரிஞ்சிருந்தா நான் வீட்டிலேயே இருந்திட்டு வந்திருப்பேனே என்று நினைத்தேன்.  இனி அந்த பிரச்சினை இல்லை, எங்கே வரும், எப்படி வரும்னு யாருக்கும் தெரியாது, ஆனா வரவேண்டிய  நேரத்துக்கு ஒருபோதும் கரெக்டா வராது, எப்பவுமே தப்பான நேரத்துக்குத்தான் வரும் என்ற நிலையில் உள்ள உங்கள் ரயில் எந்த ஒரு நேரத்திலும் எங்கேயிருக்குன்னு இனி இணையத்திலேயே தெரிஞ்சுக்கலாம்!!  இந்தத் தகவல் ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் புதுப்பிக்கப் படும்,  CRIS என்னும் ரயில்வே பொதுத் துறை நிறுவனம் ரயில் யாத்ரியுடன் இணைத்து தயாரித்துள்ள இந்த செயலி [Application] இணைய இணைப்புள்ள கைபேசியிலும் செயல்படும்.
இந்தத் தளத்திற்க்குச் செல்ல சுட்டி.
நீல நிறத்தில் உள்ள ரயில்கள் சரியான நேரத்திலும், சிவப்பு வண்ணத்தில் அம்புக்குறியிட்ட ரயில்கள் கால தாமதமாகவும் இயங்குகின்றன.
 
மஞ்சள் வண்ணத்தில் உள்ள கோடு ரயில் செல்லும் பாதையைக் குறிக்கிறது.



ரயில் இயங்குவது பற்றிய தகவல்கள். நான் பாட்னாவில் இருந்து சென்னை வழியாக பெங்களூரு வரும் சங்கமித்ரா விரைவு வண்டியைத் தேர்ந்தெடுத்தேன்.

ரயில் ரேடார்  [RailRadar] எனப்படும் இந்த வசதியை இந்திய ரயில்வே  நிர்வாகம் சென்ற புதன் கிழமையன்று கூகுல் மேப்பில் அறிமுகப் படுத்தியுள்ளது. ரயில்வே இயக்கும் பத்தாயிரத்துக்கும் மேற்ப்பட்ட வண்டிகளில் 6500 வண்டிகள் தற்போது இந்த வசதியில் சோதனை முறையில் சேர்க்கப் பட்டுள்ளன, விரைவில் எல்லா வண்டிகளும் சேர்க்கப் படும்.
இதைப் பயன்படுத்த எந்த வண்டியின் பெயரையோ, நம்பரையோ நினைவில் வைத்துக் கொண்டிருக்க  வேண்டிய அவசியமில்லை.  அது புறப்படும் இடம் சேரும் இடத்தை உள்ளிட்டாலே போதும், அதற்கிடையே ஓடும் எல்லா வண்டிகளும் காண்பிக்கப் படும், நீங்கள் அவற்றில் தேவையானதை தேர்ந்தெடுத்து அது குறித்த தகவல்கள் [புறப்படும்/சேரும் நேரங்கள், வண்டி செல்லும் வழி, நிற்கும் நிலையங்கள்/நேரங்கள், சரியான நேரத்தில் இயங்குகிறதா/கால தாமதம் எவ்வளவு, நிலையத்திற்கு எந்த நேரத்துக்கு வரக்கூடும் முதலான தகவல்கள்]  அத்தனையும் பெறலாம்.

அல்லது கூகுள் மேப்பில் ஏதாவது ஒரு ரயில் நிலையத்தை ஜூம் செய்து பெரிதாக்கினாலே போதும் அங்கிருந்து செல்லும் வண்டிகள் அத்தனையும் காண்பிக்கும், அவற்றில் உங்கள் ரயிலைத் தேர்ந்தெடுத்தும் பார்க்கலாம்.

Leia mais...

Wednesday, August 22, 2012

புதிர் பூங்கா

1. பாபுவிற்கு இன்று என்ன கிழமை என்ற சந்தேகம் ஏற்பட்டது. :lol:
அப்போது அவரது நண்பர்கள் :confused_smile: உடையாரும் சுகந்தும் அங்கே வந்தார்கள்.

இங்கே உடையார்& சுகந் தைப்பற்றிக் கூறியாகவேண்டும்..

உடையார், திங்கள் , செவ்வாய், புதன் கிழமைகளில் எப்போதும் பொய்யே பேசுவார் :o .

சுகந், வியாழன்],வெள்ளி, சனிக் கிழமைகளின் பொய்தான் பேசுவார் :( .

பாபு முதலில் உடையாரிடம் இன்று என்ன கிழமை என்று கேட்டார்.
அதற்கு உடையார், "நேற்று எனது பொய்பேசும் தினங்களில் ஒன்று" என்றார்.

அடுத்தாற்போல் சுகந்திடம், இன்று என்ன கிழமை என்று கேட்டார்.
அவரும் "நேற்று எனது பொய் பேசும் தினங்களில் ஒன்று "என்றார்.

இப்போது பாபுக்கு இன்று என்ன கிழமை என்று புரிந்துவிட்டது :spam .
உங்களுக்குப் புரிந்தால் கூறுங்களேன்.!!!



2.உங்களுக்கெல்லாம் ஒரு சவால்...

"ஏனென்றால்" என்ற சொல்லை வைத்துக்கொண்டு ஓர் வசனம் அமைக்க வேண்டும் . ஆனால் "ஏனென்றால்" என்ற சொல் மூன்று இடத்தில் வரவும் வேண்டும். .. 
அறிஞர் அண்ணாவிடம் இப்படித்தான் கேட்கப்பட்டது... Because என்ற வார்த்தையினை தொடர்ச்சியாக மூன்று முறைகள் பயன்படுத்தி ஒரு வாக்கியம் அமைக்கமுடியுமா? என்று... உடனே பதிலளித்தாராம்....

No sentence will begin with because; because, because is a conjunction.

அதே போன்றதுதான் இதுவும்...


3.9, 9, 9, 9, 5, 5, 5, 5, 3, 3, 3, 3, 1, 1, 1, 1.

இந்த 16 எண்களில் ஏதாவது 6 எண்களின் கூடுதல் = 21

அந்த 6 எண்கள் எவை?..

ஒரு விதியைக் கவனிக்கவேண்டும்; 
  • ஒற்றை எண்களை இரட்டை எண்கள் வரும் ( இக்கணக்கில் ஆறு தடவை - 6 ஒரு இரட்டை எண் ) தடவைக்கு கூட்டினால் விடை இரட்டை எண்ணாக அமையும். எ.கா: 5+5+3+3+9+3 = 28 ; 1+1+1+3+3+9 = 18
  • ஒற்றை எண்களை ஒற்றை எண்கள் வரும் தடவைக்கு கூட்டினால் விடை ஒற்றை எண்ணாக அமையும். எ.கா: 1+3+3+5+5 = 17
  • இந்த விதிக்கு விதிவிலக்குகளும் உண்டு; (3+3+3+3+3 )
இதன்படி 9, 9, 9, 9, 5, 5, 5, 5, 3, 3, 3, 3, 1, 1, 1, 1. ஆகியவற்றின் ஆறு எண்களின் கூட்டல் மூலம் ஒற்றை எண் விடையாக ஒருபோதும் வராது.

ஆனால் வேறு முறைப்படி செய்யலாம்,
கேள்வியில் கூட்டல் என்று கேட்கவில்லை, எனவே கூடுதல் வேறு கூட்டல் வேறு என்று எண்ணினால்:
1 + 
5.5 + 5.5 + 9 = 21 (உபயோகிக்கப்பட்ட எண்கள்: 1,5,5,5,5,9)
(1*3)+3+3+3+9 = 21
1+1+3+5+9+(3-1) = 21
 போன்றனவும் ஏற்றுக்கொள்ளக்கூடியவை.

ஒருபோதும் ஆறு ஒற்றை எண்கள் சேர்ந்து 21 எனும் ஒற்றை எண் வரவே வராது!!!!

4. ஒரே ஒரு சொல்
அதற்கு இத்தனை குறிப்புக்கள்.
வாருங்கள் கண்டுபிடிப்போம் அந்தச் சொல்லை.

1)முற்பாதி போய்விட்டால் இருட்டே யாகும் 

2)முன்னேழுத்து இல்லாவிட்டால் பெண்ணே யாம்

3)பிற்பாதி போய்விட்டால் ஏவற் சொல்லாம்

4)பிற்பாதியுடன் முன்எழுத்து இருந்தால் மேகம்

5)சொற்பாகக் கடைதலைசின் மிருகத்தீனி

6) தொடர் இரண்டாம் எழுத்துமா தத்தில் ஒன்று 

18 446 744 073 739 551 615
5.சதுரங்கப் போட்டி ஒன்றில் வெற்றி பெற்ற வீரனொருவனுக்கு, மன்னன் பரிசளிக்க விரும்பினான். அகங்காரத்துடன் வீரனின் விருப்பத்திற்கேற்ப எதைக்கேட்டாலும் பரிசளிப்பதாகக் கூறினான். வீரனோ அதிபுத்திசாலி. "எனக்குப் பொன்னோ மணியோ வேண்டாம். சதுரங்கப் பலகையில் உள்ள முதற்கட்டத்திற்கு 1 தானியமும், இரண்டாவது கட்டத்திற்கு 2 தானியங்களும், மூன்றாவது கட்டத்திற்கு 4 தானியங்களும் என்ற கணக்கில், 64 கட்டங்களுக்கும் அதற்கு முந்தைய கட்டத்தைப் போல் இரண்டு மடங்கு தானியங்கள் மட்டும் தந்தால் போதும்" எனக்கேட்டான்.

மன்னனும், "இவ்வளவுதானா? யாரங்கே தானியக் களஞ்சிய அதிகாரியைக் கூப்பிட்டு இவ்வீரன் கேட்கும் அளவிற்கு தானியங்கள் கொடுக்கச்சொல். இறுதியில் எனது அன்பளிப்பாக இருநூறு மூட்டைகள் அதிகமாகவும் கொடுக்கச் சொல்" என்றான் செருக்குடன்.

பல மணி நேரங்கள் கழிந்தும் பரிசு வந்து சேராததைக் கண்டு, தானே தானியக்களஞ்சியத்திற்குப் புறப்பட்டுச்சென்ற மன்னன் அதிர்ச்சியடைந்தான். பல வீரர்கள் தானியங்களை எண்ணி எண்ணி களைப்படைந்திருப்பதைக் காண்கிறான்.

அந்தத் தொகைதான் எத்தனை இருக்கும்? உங்களில் யாரேனும் கணக்கிட்டுச் சொல்ல இயலுமா?

1 + 2 + 22 + 23 +.................................+263 இதுதான் சரி 
 என வருகின்றது.


6. இந்த இடத்தில் ஆறுகள் இருக்கும். ஆனால், தண்ணீர் இருக்காது. நகரங்கள் இருக்கும். ஆனால், கட்டடங்கள் இருக்காது. காடுகள் இருக்கும். ஆனால், மரங்கள் இருக்காது. அங்கு மலைகள் இருக்கும். அதை நீங்கள் எளிதாகத் தாண்டலாம். இவை எல்லாமே நமது பூமியில் உண்மையில் உள்ளவைதான். அப்படி என்ன இடம் அது? 

Leia mais...

Wednesday, July 25, 2012

கல்வி வள்ளல் காமராசர் நினைவு நாள் இன்று! காணொளி இணைப்பு


காமராசர் சிறுவனாக இருந்த போதே அவரது தந்தை குமாரசாமி நாடார் காலமாகி விட்டார். எனவே தாயார் சிவகாமி அம்மையார்தான் காமராசரையும் அவர் தங்கையையும் வளர்த்தார்.
சிவகாமி அம்மையார் விருது நகரில் குடியிருந்தார். காமராசர் சென்னையில் வாடகை வீட்டில் குடியிருந்தார். முதல்-அமைச்சராக இருந்தபோது தாயாருக்கு மாதம் ரூ. 150 மட்டும் மணியார்டர் மூலம் அனுப்பிவைப்பார்.
காமராசர் விருதுநகருக்கு போகும் போதெல்லாம் தாயாரைச் சென்று சந்திப்பதில்லை. பயணிகள் விடுதியில் தங்கிக் கொள்வார். மதுரையைக் கடந்து விருதுநகர் வழியாக காரில் நெல்லை நாகர்கோவில் போக நேரிடும் போதும் காமராசர் விருதுநகரில் தன் வீட்டுக்குச் சென்றதில்லை.
விருதுநகர் வழியாக ஒருமுறை பிரதமர் ஜவஹர்லால் திறந்த காரில் சென்றார். சாலையின் இருபுறமும் மக்கள் வெள்ளம்! அப்போது கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியம் நேருவின் அருகே சென்று அதோ கூட்டத்தில் நிற்கிறாரே அவர் தான் சிவகாமி அம்மையார் என்று சொல்ல, நேரு காரை விட்டு இறங்கி சிவகாமி அம்மையாரிடம் சென்று நலம் விசாரித்தார்.
காமராசர் 9 ஆண்டுகள் முதல்-அமைச்சராக இருந்தபோது ஒரே ஒருமுறைதான் அவரது தாயார் சென்னைக்கு மகன் வீட்டிற்குச் சென்றார். திருப்பதிக்கு போய் சாமி கும்பிடணும் என்று தாயார் சொல்ல, போயிட்டு வாங்க என்று சொல்லிவிட்டு காமராசர் கோட்டைக்குச் சென்று விட்டார்.
காமராசரின் நேர்முக உதவியாளர் ஒரு தொழில் அதிபரின் காரில் சிவகாமி அம்மையாரைத் திருப்பதிக்கு அனுப்பி வைத்தார். அந்த செய்தி தெரிய வந்த போது காமராசர் கோபப்பட்டு உதவியாளரைக் கடிந்து கொண்டார்.
கோபிச்செட்டிபாளையத்தில் காங்கிரஸ் மகளீர்  மாநாடு ஒன்று நடந்தது. இந்திராகாந்தியும் (அப்போது பிரதமராக அவர் இல்லை)  கலந்து கொண்டார். காமராசருக்குச் தெரியாமல் கோபி காங்கிரஸ் தலைவர்கள் சிவகாமி அம்மையாரையும் அழைத்து வந்திருந்தனர். தட்டுத் தடுமாறி அவர் மேடையில் ஏறும்போதுதான் தாயாரை காமராசர் கவனித்தார்.
தனது நேர்முக உதவியாளரை அழைத்த காமராசர் “இவங்க எங்கே இங்கு வந்தாங்கன்னேன். விழா முடிஞ்சதும் நல்லபடியா அனுப்பி வைங்கன்னேன்’ என்று கூறினார். தாயார் அருகே செல்லவும், இல்லை. பேசவும் இல்லை.
ஒருமுறை முதல்-அமைச்சர் காமராசர் ரெயிலில் பகல் வேளையில் திருநெல்வேலிக்குப் பயணமானார். விருதுநகர் ரெயில் நிலையத்தில் வண்டி நின்றபோது நிறைய பிரமுகர்கள் காமராசரை சந்தித்தனர்.
காமராசரோ வண்டியில் இருந்து இறங்கவே இல்லை. ரயில் பெட்டியின் வாசலில் நின்று அவர்களின் வரவேற்பைப் பெற்றுக் கொண்டார்.
வண்டி நகரும் முன் ஒரு தொண்டர் காமராசரிடம் அய்யா அதோ அம்மா நிக்காங்க என்று காட்ட காமராசர் ஏறிட்டுப் பார்த்தார். கூட்டத்துக்கு அப்பால் அவரது தாயார் நின்று கொண்டு மகனைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தார்.
வண்டி நகரத் தொடங்கியது காமராசர் ரெயில் பெட்டியின் வாசலில் நின்று கொண்டிருந்தார். பெட்டியின் வாசல் அவரது தாயாருக்கு நேர் எதிரே வந்த போது, “சௌக்கியமா அம்மா” என்று காமராசர் கேட்டார்.
தாயாரின் முகம் மேலும் மலர்ந்தது. வண்டி மேலும் நகர்ந்தது. தனது தாயார் தன்னைக் காணவேண்டும் என்பதற்காக தனது முழு உருவமும் வெளியே தெரியும்படி காமராசர் ரெயில் பெட்டி வாசலில் நின்று கொண்டே இருந்தார். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே இருக்க ரெயில் தெற்கு நோக்கி வேகம் எடுத்தது.
முதல்-அமைச்சர் பதவியை விட்டு விலகி, அகில இந்திய காங்கிரஸ் தலைவராகி, 1967 தேர்தலில் காமராசர் விருதுநகரிலேயே தோற்கடிக்கப்பட்டார்.
அதன்பின் நாகர்கோவில் பாராளுமன்ற உறுப்பினரானார். அப்போது சென்னையில் இருந்த காமராசருக்கு, சிவகாமி அம்மையாருக்கு உடல் நலமில்லை என்று சேதி சொன்னார்கள்.
உடனே புறப்பட்டு விருதுநகர் வந்தார். (அப்போது மதுரை நெடுமாறன் பெருந் தலைவருடன் வந்தார்) தாயாரைக் கண்டார். மகனைக் கண்டவுடன் அந்த தாயின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.எனவே காமராசர் சென்னைக்குத் திரும்ப முடிவு செய்தார்.
தாயாரிடம் சொன்னார். போயிட்டு வாப்பா. ஆனால் நம் வீட்டில் சாப்பிட்டு விட்டுப்போ என்றார், அந்த தாயார் படுக்கையில் படுத்தபடி.சரி சொன்ன காமராசர் அன்று தன் வீட்டில் சாப்பிட்டார். தாயாருக்கு அது பரம திருப்தி. தாயிடம் விடை பெற்ற பின் சென்னைக்கு புறப்பட்டார். உடன் பயணம் செய்த நெடுமாறன் “நீங்கள் வீட்டில் சாப்பிட்டு எவ்வளவு காலம் ஆயிற்று?” என்று கேட்டார்.
சற்றே கண்ணை மூடிக்கணக்கு போட்ட காமராசர் நான் என் வீட்டில் சாப்பிட்டு 25 வருடங்களாவது  இருக்கும் என்றார். 1942 ஆகஸ்ட் மாதம் மும்பை மாநகரில் அகில இந்திய செயற்குழு கூடியது. காமராஜ், சத்திய மூர்த்தி, பக்தவச்சலம் முதலியவர்கள் தமிழ் நாட்டிலிருந்து சென்றிருந்தனர். “வெள்ளையனே வெளியேறு” போராட்டம் அந்தச் செயற்குழுவில்தான் அறிவிக்கப்பட்டது.
மறுநாளே காந்தியடிகள், நேரு போன்ற தலைவர்களை வெள்ளைக்கார அரசு கைது செய்தது. மாநிலம் வாரியாக முக்கியமானவர்களை கைது செய்யவும் முடிவு செய்தது.
ரெயிலில் சென்னைக்குப் புறப்பட்ட காமராசர் நேரடியாகச் சென்னை சென்றால் வழியிலேயே கைது செய்யப்படலாம் என எதிர்பார்த்தார். தான் கைதாகும் முன் செயற்குழு முடிவைத் தமிழகம் எங்கும் அறிவித்து விட வேண்டும் என்று முடிவு செய்தார்.
ஆந்திராவில் ரெயிலை விட்டு இறங்கி சில நாட்கள் தங்கினார். பின் சென்னைக்கு ரெயில் ஏறினார். அரக்கோணம் ஸ்டேஷனிலேயே இறங்கினார். ஸ்டேஷன் பிளாட்பாரம் முழுக்க போலீஸ். அவர்கள் காமராஜை எதிர் பார்க்கவில்லை. அவர்கள் வேறு குறியாக இருந்ததால் காமராஜை கவனிக்க வில்லை.
காமராசர் அரக்கோணம் சோளங்கிபுரம் ராணிப்பேட்டை கண்ணமங்கலம், வேலூர், தஞ்சாவூர் வழியாக திருச்சிக்குப் போனார். ஒவ்வொரு ஊரிலும் முக்கிய காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார்.
திருச்சி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி வழியாக ராமநாதபுரம் சென்றார். பின் அங்கிருந்து மானாமதுரை வழியாக விருது நகருக்குச் சென்று தனது தாயாரைச் சந்தித்தார்.
தலைவர், வீட்டுக்கு வந்திருக்கும் விஷயம் வெளியே தெரிந்து பிரமுகர்கள் அவரைத் தேடி வந்தனர். எனவே விருதுநகர் காவல் நிலையம் வரை விஷயம் பரவிற்று. அப்போது விருதுநகர் காவல் நிலையத்தில் எழுத்தச்சன் என்பவர் சப் இன்ஸ்பெக்டர்.
தன்னை எந்த நேரமும் கைது செய்து விடுவார்கள் என்பது காமராசருக்குப் புரிந்தது. தன்னைப் போலீஸ் கைது செய்யும்போது தொண்டர்கள் ஆவேசப் படலாம் என்றும் எதிர் பார்த்தார். உடனே விருதுநகர் காவல் நிலையத்துக்கு “நான் வீட்டில்தான் இருக்கிறேன்! கைது செய்யலாம்” என்று தகவல் அனுப்பினார்.
சப் இன்ஸ்பெக்டர் எழுத்தச்சன் தலைவர் வீட்டுக்கு வந்தார். “ஐயா! கைது செய்யப்பட வேண்டியவர்கள் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறது. நீங்கள் இப்போது அரியலூரில் தங்கி இருப்பதாக காவல் துறைக்கு ஒரு தகவல் வந்தது.
அதன்பேரில் உங்களைக் கைது செய்ய எங்கள் படை அரியலூர் விரைந்துள்ளது. உங்களைக் காணவில்லை என்று அவர்கள் திரும்பி வரச்சில நாட்கள் ஆகலாம். எனவே அதுவரை நீங்கள் விருது நகரில் இருக்கலாம். நாங்களும் கைது செய்ய மாட்டோம். எனவே இப்போது நான் உங்களைக் கைது செய்ய வரவில்லை” என்றார் எழுத்தச்சன்.
“வெளியே என் வேலைகள் முடிந்து விட்டன. இன்றே நான் உள்ளே (சிறைக்கு) வரத்தயார். தாமதிக்காமல் கைது செய்யுங்கள்” என்றார் காமராசர்.
அப்படியானால் சரி என்ற எஸ்.ஐ. காமராசரைக் கைது செய்து அழைத்துப் போனார். அப்போது ஜெயிலுக்கு போனவர் மூன்று ஆண்டுகள் கழித்துத்தான் வெளியே வந்தார். வெள்ளை அரசாங்கம் போட்ட வழக்கில் நீதிமன்றம் காமராசருக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை விதித்தது.(வெளியே வந்த பின்னரும் காமராசர் தனது ஜெயில் வாழ்க்கையைப்பற்றி மேடைகளில் பேசியதில்லை. பத்திரிகைகளில் எழுதியதில்லை. எழுத்தச்சன் பரிவுடன் நடந்து கொண்ட தால் அவரின் பெயரும் காமராசரின் வாழ்க்கை வரலாற்றில் இடம் பிடித்துக் கொண்டது)
ஒரு சமயம் காமராஜரும் நேருவும் தென்மாவட்டத்தில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொள்ள காரில் விருதுநகர் வழியாக சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது ஒரு மூதாட்டி விருதுநகரில் ரோட்டின் ஓரமாக பொதுமக்களோடு நின்று அவர்கள் செல்வதை கவனித்துக் கொண்டிருந்தார்.
அப்போது நேரு தன் அருகே இருந்த காமராஜரிடம் அங்கே ரோட்டின் ஓரமாக நிற்கும் பெண்ணை பற்றி தெரியுமா? என்று கேட்டார். உடனே காமராஜர் அது என் தாய் தான் என்று கூறினார். உடனே நேரு காரை நிறுத்தச் சொல்லி வண்டியை ரிவர்சில் எடுக்கச் சொன்னார். கார் அந்த மூதாட்டி அருகே வந்ததும் காரில் இருந்து இறங்கி காமராஜரின் தாயாரின் (சிவகாமி அம்மாள்) கையை பிடித்து அந்த அற்புத மனிதரை பெற்ற தாயார் நீங்கள் தானா? என்று பாசத்துடன் கேட்டார்.
இதை அங்கு கூடி இருந்தவர்கள் கண்டு பரவசம் அடைந்து ஆனந்த கண்ணீர் வடித்தனர்.
அய்யாவின் இறுதி ஊர்வல காணொளி
இதைப்படிப்பவர்களுக்கு சற்று மணம் கணக்கவேண்டும் …..அந்த தலைவன் வாழ்ந்த மண்ணில் தானே நாமும் வாழ்கிறோம்
.

Leia mais...

முல்லைப் பெரியாறு : முடக்குவது ஏன்? காணொளி இணைப்பு


முல்லைப் பெரியாறு : முடக்குவது ஏன்? காணொளி இணைப்பு

குளிர்ந்த நிலப்பகுதியான தமிழக – கேரள எல்லை தகித்துக் கொண்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக இருக்கும் கேரள அரசியல்வாதி களின் வாய்ச் சவடால்களையும், அநாவசிய வழக்குகளையும்,மூன்று நாட்களுக்கும் மேல் மலையாளிகளின் வன்முறையையும் பொறுத்துக் கொண்டிருந்த தமிழகம் பதில் உணர்வைக் காட்டத் தொடங்கியதும் பதறிப்போயிருக் கிறார்கள் தேசியவியாதிகள்.
தனது உணவுத் தேவை முதற்கொண்டு அன்றாடத் தேவைகள் பலவற்றிற்கும் தமிழகத்தை எதிர்நோக்கும் கேரளா, அங்கிருந்து தமிழகத் துக்கு உரிமையான தண்ணீரைத் தர மறுப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கிக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டிலிருந்து சென்ற வாகனங்களும், அய்யப்பன் கோவிலுக்குச் சென்றவர்களும், கேரளாவில் பணியாற்றும் தமிழர்களும் தொடர்ந்து தாக்கப்பட்டுவந்த நிலையில் தமிழகத்திலும் ஆங்காங்கே பதில் நடவடிக்கைகள் வன்முறை வடிவில் நடைபெறத் தொடங்கி யிருக்கிறது. இது முற்றிலும் ஆபத்தான போக்காகும்.
இந்த நிலைக்கு கேரளமே முழுப் பொறுப்பு!
தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் ஆகிய அனைவரும் ஒன்றுபட்டு தமிழக அரசுக்கு பலமாக நிற்கிறார்கள். இதில் காங்கிரஸ், பா.ஜ.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்ற தேசியக் கட்சிகள் இரட்டை நிலைப்பட்டுடன் நடந்துவருகின்றன என்பதைத் தமிழக மக்கள் கூர்ந்து கவனித்து வருகிறார்கள். 1976-ஆம் ஆண்டு முதல் மெல்ல மெல்ல எழுப்பப்பட்ட இந்தப் பிரச்சினை இவ்வளவு தூரம் வெடித்திருப்பதற்கு கேரளாவின் அரசியல் போட்டியே மூலகாரணம்! ஏற்கெனவே ஆட்சி செய்த இடதுசாரிகளும், இப்போது ஆட்சியைப் பிடித்துள்ள காங்கிரசும் தங்களுக்குள் இருக்கும் அதிகாரப் போட்டிக்கு தமிழக- கேரள உறவைப் பணயம் வைத்துள்ளார்கள். இடதுசாரிகளிடமிருந்து மிகக் குறைந்த வித்தியாசத்தில் ஆட்சியைப் பிடித்திருக்கும் காங்கிரசு அதைத் தக்க வைத்துக் கொள்ளவும், விட்டதைப் பிடிக்க இடதுசாரி களும் ஆடும் அரசியல் சதிராட்டத்தில் இப்போது பகடைக் காயாக உருட்டிவிடப் பட்டிருப்பது மக்களின் அமைதியான இயல்பு வாழ்க்கை. இந்த சந்தில் சிந்து பாடுவதற்குத் தயாராகக் கடப்பாறை, மண்வெட்டி சகிதம் தனது கட்சியின் ஆஸ்தான தளவாடங்களுடன் களம் இறங்கியிருக்கிறது கேரள பாரதிய ஜனதா கட்சி.
இத்தகைய அரசியல் கட்சிகளின் பின்னால் அணிதிரண்டு நிற்கும் கேரள மக்கள் திட்டமிட்ட வகையில் உணர்ச்சிமயப் படுத்தப்பட்டுள்ளனர்; அச்சுறுத்தப்பட்டுள்ளனர். முல்லைப் பெரியாறு அணை உடைந்துவிடும்; 35 லட்சம் மக்கள் பாய்ந்து வரும் வெள்ளத்தில் மூழ்கி இறந்து போவார்கள்; வீடுகள் இடிந்து தரை மட்ட மாகும்; மாபெரும் பேரழிவு நடக்கும் என்கிற ரீதியில் வாய்மொழியாகவும், ஊடகங்களைப் பயன்படுத்தியும், வீடுவீடாக குறுந்தகடுகள் தயாரித்து விநியோகித்தும் பயமுறுத்தியிருக் கிறார்கள். அண்மையில் டேம் 999 என்ற படம் சீனாவில் அணை உடைந்து நடந்த விபத்தை மய்யமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்று சொல்லி, இந்தியா முழுக்க முல்லைப் பெரியாறு அணை தொடர்பான பயத்தை உருவாக்க நடந்த சதியாகும்.
உண்மை நிலை என்ன?
லட்சக்கணக்கான மக்கள் இறந்தாலும் பரவாயில்லை என்று இடிந்துபோகும் நிலையில் உள்ள அணைக்கட்டையா தமிழர்கள் பாதுகாக்கத் துடிக்கிறார்கள்?,
காலங்காலமாக உறவுகொண்டு பழகிவரும் கேரள மக்கள் மடிந்துபோனாலும் எங்களுக்கு அணையின் மீதான உரிமை வேண்டுமென்றா நினைக்கிறார்கள்?,
உண்மையில் முல்லைப் பெரியாறு அணை இடிந்து போகும் நிலையில் இருக்கிறதா?,
வெறும் சுண்ணாம்புக் கலவையால் கட்டப்பட்ட நூறாண்டுகளுக்கும் மேல் பழமையான அணை எப்படி பாதுகாப்பாக இருக்கும்?
கேரள அரசால் புதிய அணை கட்டப்படுவதால் என்ன நட்டம்? இன்னும் பாதுகாப்பு தானே!,
அதுதான் தமிழர்களுக்கு உரிய அளவு தண்ணீரைத் தருவதற்கு எழுத்துமூலம் ஒப்புதல் தரவும், ஆண்டுக்காண்டு குறிப்பிட்ட டி.எம்.சி தண்ணீரைத் தரவும் தயார் என்று கேரள அரசு உறுதி கூறுகிறதே? என்பன போன்ற கேள்விகள் பலருக்கும் எழாமல் இல்லை. ஆனால் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடைதேடிச் சென்றால் இன்னும் கோபம் அதிகமாகும் கேரள அராஜகவாதிகள் மீது!
வீணாகக் கடலில் கலக்கும் நீரைப் பயனுள்ள வகையில் பயன்படுத்தி, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நிலவிய வறட்சிப் பஞ்சத்தைப் போக்கத் திட்டமிட்டது அன்றைய ஆங்கில அரசு. அதன் காரணமாக முல்லைப் பெரியாறு பகுதியில் அணைகட்டத் தீர்மானிக்கப்பட்டது. அவ்விடம் பூனையாறு தமிழ் சமஸ்தானத்துக்குச் சொந்தமான இப்பகுதியை திருவாங்கூர் சமஸ்தானத்தினுடையது என்று கருதி அணை கட்டவும், அதற்கான அனைத்து உரிமைகள் உள்ளிட்டவறிற்குமாக திருவாங்கூருடன் ஆங்கில அரசு 999 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போட்டது.
கர்னல் பென்னிகுயிக் என்பவரின் தளராத தன்னலமற்ற முயற்சியால் புவியீர்ப்பின் அடிப்படையில் கட்டிமுடிக்கப்பட்ட இவ்வணை இன்றும் நல்ல பாதுகாப்புடன் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் உற்பத்தியாகும் பேரியாறு (இது தான் உண்மையான பெயர்) மலைகளின் ஊடாகப் பாய்ந்து இவ்வழியே செல்கிறது. இதனைத் தேக்கி மலைகளைக் குடைந்து உருவாக்கப்பட்ட பாதை வழியாகத் தான் தமிழகத்திற்கு நீர் திருப்பிவிடப்படுகிறது. இதில் மொத்தம் தேக்கமுடிந்த நீரின் அளவு 15.66 டி.எம்.சி. மொத்தம் 176 அடி உயரம் கொண்டது. அதிகபட்சமாக தேக்கப்படும் 156 அடியில் 104 அடி நீர் அணையின் அடியிலேயே இருக்கும். அதற்கு மேல் தேங்கும் 10 டி.எம்.சி நீரைத் தான் நம்மால் பயன்படுத்தமுடியும். இடையில் 1976-ஆம் ஆண்டு இடுக்கியில் மிகப்பெரிய நீர்மின்திட்டத்திற்காக கேரள அரசு கட்டிய இடுக்கி அணை 70 டி.எம்.சி தண்ணீரைத் தேக்கி வைக்கும் கொள்ளளவு கொண்டது. அதன்பின் தான் மெல்ல கேரளம் முல்லைப் பெரியாறு அணை குறித்த தனது போக்கை மாற்றிக் கொள்ளத் தொடங்கியது. அப்பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக 1979-இல் மலையாள மனோரமா ஏடு புரளி கிளப்பியது. அப்போதிலிருந்து இப்போதுவரை ஊடகங்களை மிகச் சரியாக கேரளா பயன்படுத்தி வருகிறது.
அணை உடையுமா?
1979 முதல் இன்றுவரை முல்லைப் பெரியாறு அணை உடைந்துவிடும்; மக்கள் மாய்ந்து போவார்கள் என்று 32 ஆண்டுகளாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் கேரள அரசியல்வாதிகள். ஆனால் அவர்கள் அனை வருக்கும் உறுதியாக நின்று பதில் சொல்லிக் கொண்டிருக்கிறது முல்லைப் பெரியாறு அணை. இதே போல புவியீர்ப்பு அடிப்படையில் கட்டப்பட்ட அணைதான் கரிகாலன் கட்டிய கல்லணை. அதுவும் காலம்தோறும் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சரியாகப் பராமரிக்கப்படுவதால், 1800 ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்து நின்றுவருகிறது.
முல்லைப் பெரியாறு அணையில் ஆபத்து என்று கேரளா சொன்ன பிறகு, மத்தியக் குழு ஆய்வு செய்து அணையின் உறுதித் தன்மையை உறுதிப்படுத்தியது. இருப்பினும் பலப்படுத்து வதற்கு வழங்கிய யோசனைகளின்படி, அணையின் மேற்பகுதி முழுக்க கான்கிரீட்டும், உள்பகுதியில் துளையிட்டு கனமான கம்பிகளைச் செலுத்தி அதற்குள் தரமான கான்கிரிட்டும், அணையின் சாய்வுப்பகுதி அடி முதல் நுனிவரை பலமான கான்கிரீட்டும் போடப்பட்டு புதிதினும் புதிதாய்த் திகழ்கிறது. இதனை ஆய்வு செய்தபின் அணை வலுவுள்ள தாக இருக்கிறது என்பதோடு தமிழகம் தனக்குத் தேவையான 142 அடி வரை நீரைத் தேக்கிக் கொள்ள அனுமதியளித்து உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. இதற்குப் பின்னரும் தான் அடம்பிடிக்கிறார்கள் கேரளர்கள்.
வெள்ளத்தில் மக்கள் மடிவார்கள் என்பது பொய்!
அணை உடைவதற்கான வாய்ப்பே இல்லை என்பதைக் கண்டோம். அப்படியே ஒருவேளை கேரளாக்காரர்கள் சொல்வது போல் அணை உடைபட்டு வெள்ளம் ஏற்பட்டால் 35 லட்சம் மக்கள் மடிந்துபோவார்கள் என்பது உலக மகாப் பொய். ஏனெனில் முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் வெளியேறும் நீர் 45 கிலோமீட்டர் வசிப்பிடமல்லாத மலை, காட்டுப்பகுதியைக் கடந்து, பள்ளத்தாக்குகள் வழியாக மலையின் கீழ்ப்பகுதியில் உள்ள இடுக்கி அணையில் போய்ச் சேரும். முல்லைப் பெரியாறு அணையை விட 7 மடங்கு அதிகக் கொள்ளளவு கொண்ட இடுக்கி அணையில் இந்த நீரைச் சேமிப்பது எளிது. அப்படியே இடுக்கி அணை ஏற்கெனவே நிரம்பி இருந்தாலும், தேவையான அளவு நீரை விநாடிக்கு 4 லட்சம் கன அடி நீர் என்ற அளவில் வெளியேற்றும் வசதி இடுக்கியில் உண்டு. ஒரு வேளை மொத்த நீரும் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வெளியேறினாலும் அது இடுக்கி வந்து சேர 4 மணிநேரத்திற்கும் மேல் ஆகும். அதற்குள் எத்தகைய பாதுகாப்பு வசதிகளையும் செய்து கொள்ள முடியும். இடுக்கி அணையைத் தாண்டி தான் மக்கள் வசிப்பிட மாகும். அப்படி இடுக்கி அணை இந்த நீரைத் தாங்காது என்று கருதுவார்களேயானால் முதலில் இடிக்கப்பட வேண்டியது இடுக்கி அணை தான்!
புதிய அணை கட்டினால் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்குமா?
கேரள அரசு கட்டத் திட்டமிட்டிருக்கும் அணை அமையும் பகுதி. முல்லைப் பெரியாறு அணையிலிருந்து 150 அடி கீழாக உள்ளது. அங்கு அவர்கள் கட்டத் திட்டமிருப்பதே 140 அடி உயர அணைதான். அணை முழுவதும் நிரம்பினாலும், கேரளமே தண்ணீர் தர முழுமனதுடன் ஒப்புக் கொண்டாலும் சர்வநிச்சயமாக ஒரு சொட்டு தண்ணீர்கூடத் தரமுடியாது. எனவே புதிய அணை கட்டி அதே அளவு தண்ணீரைத் தமிழகத்திற்குத் தருகிறோம் என்பது முழுப் பொய்.
இப்படி முழுக்க முழுக்க நடக்காத விசயங்களையே பேசி, தமிழகத்தின் தென் மாவட்டங்களை வஞ்சிக்க நினைக்கும் போக்கைத்தான் கேரள அரசும், அரசியல் வாதிகளும் கடைப்பிடித்துவருகிறார்கள். இப்போதைக்கு முல்லைப் பெரியாறு அணை அமைந்திருக்கும் இடம் மட்டும்தான் கேரளாவில் உள்ளது. அதன் பயன்பாட்டுக்கான உரிமை முழுமையாக தமிழகத்திடம் உள்ளது. தமிழகத்தில் உற்பத்தியாகும் ஆற்றிலிருந்து, தமிழகத்திற்கு சொந்தமான, தமிழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அணையில் நீர்தேக்கி அதைத் தமிழகத்திற்குக் கொண்டுவருவதற்கே கேரளம் இத்தனை போங்காட்டம் ஆடுகிற தென்றால், முழுக்குடுமியையும் நம்பூதிரிகளிடம் கொடுத்துவிட்டால் நிலைமை என்னவாகும்? தமிழகம் அய்ந்தாம் வகை நிலமான பாலைவன மாகும். அதைத்தான் கேரள அரசியல்வாதிகள் விரும்புகிறார்களா?
கர்நாடகாவிடம் காவிரிக்கும், ஆந்திராவிடம் பாலாற்றுக்கும் போராடும் தமிழன் தன்னிடமும் பெரியாற்றுக்காகக் கெஞ்சி நிற்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது கேரளம்.

பாலம் பாலமாய்
விரிசல்
ஆற்றில் மட்டுமல்ல
இந்திய தேசியத்திலுமே…” 
என்றெழுதுகிறார் கவிஞர் மணிவர்மா.
ஆற்றில் நீர்வரத்து இல்லையென்றால் விரிசல் விழத்தான் செய்யும். என்ன செய்யப்போகிறது மத்திய அரசு


?

Leia mais...

Friday, July 20, 2012

உலகில் முன்தோன்றிய தமிழனின் குமரி கண்டம் நாகரீகம்

நம்மில் பல பேருக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை, தமிழர்கள் ஒரு கண்டத்தை ஆண்ட வரலாறு. ஒரு காலத்தில் பாண்டிய ராஜ்ஜியம், மேற்கில் மடகாஸ்கர் முதல் கிழக்கில் ஆஸ்திரேலியா, தெற்கில் தென்தமிழகம் முதலியன உள்ளடக்கிய ஒரு கண்டம் பாண்டிய மன்னனால் ஆளப்பட்டது.




௧. முதலில் விக்கிபீடியாவில், குமரி கண்டம் பற்றிய தகவல்கள் பெற கீழே சொடுக்கவும்,
குமரி கண்டம்-விக்கிபீடியா

௨. சமீபத்தில் "History Channel" என்ற தொலைக்காட்சி, "The Lost Lemuria Continent " என்ற ஆவணபடத்தை வெளியிட்டது. அதன் பகுதி உங்கள் பார்வைக்கு,




௩. சில வலைத்தளங்களில் மற்றும் மின்னஞ்சல் மூலமும் திரட்டிய சில தகவல்கள், 




தமிழ்இனம் தனது மொழி கலாச்சார பெருமைகளை மறந்தது மட்டும் அன்றி இழந்த பெருமைகளைப் பற்றி அறிய கூட ஆர்வம் காட்டாதவனாய் இருக்கிறான்.



தமிழனின் மறதியை பயன்படுத்திக் கொண்டு வரலாற்றின் பல உண்மைகள் மறைக்கப்பட்டுவிட்டன. இந்தியாவை பொறுத்தவரை சிந்துவெளி நாகரீகம் மிகவும் பழமையானது என்கிறது வரலாறு.அதற்கெல்லாம் முன்தோன்றிய மூத்த நாகரீகம் தமிழனின் நாகரீகம். இதற்கான ஆதாரங்களைத் தான் கடல் கொண்டு விட்டது.



குமரி கடலின் அடியில் உள்ள லெமூரியா கண்டம் என்ற குமரிக் கண்டத்தில் தான் உலகின் முதல் மனிதன் தோன்றினான். லெமூர் என்றால் குரங்கிற்கும் மனிதனுக்கும் இடைப்பட்ட பரிணாம வளர்ச்சி என்று பொருள். ஆக உலகின் முதல் பரிணாம வளர்ச்சி குமரிக் கண்டத்தில் நடந்திருக்கிறது.

குமரிக்கண்டமும் அதன் எல்லைகளும்

49 ஆயிரம் சதுர மைல் என்கிறார்கள்.பழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டம் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது. ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டம் என்கிறார் ஹிராடடஸ், இக்கருத்தை பேரறிஞர்கள் திலு.ஓல்டுகாம், திரு. எக்கேல், திரு. கிளேற்றர், திரு. கட்டு எலியட், திரு. தேவநேயப் பாவாணர் போன்றோர் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். மேலும் ஹிராடடஸ் அவர்கள் குமரிக் கண்டத்தின் எல்லையைக் குறிப்பிட்டுள்ளார்.

1. தொலைமேற்கில் – கிரேக்க நாடு
2. மேற்கில் – எகிப்து மற்றும் ஆப்பிரிக்கா
3. வடமேற்கில் – மென் ஆப்பிரிக்கா
4. தொலை கிழக்கில் – சீன நாடு
5. கிழக்கில் – பர்மா, மலேசியா, சிங்கப்பூர்
6. தெற்கில் – நீண்ட மலைத் தொடர்

இம்மலைத் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவில் முடிவடைகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். இவற்றின் மையத்தில் அமைந்த மிகப் பெரிய கண்டமே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டமாகும்.

இக்கண்டத்தை பதினான்கு மாநிலங்களாக அதாவது ஏழு தெங்கு நாடு, ஏழு பனை நாடு என பிரித்திருந்தனர். அந்நாட்டில் வாழ்ந்தவன் தான் தமிழன். அவன் கையாண்ட நாகரிகம்தான் திராவிட நாகரிகம். அவனுடைய வரலாறும் நாகரிகமும் தான் உலகிலேயே முதன்மை வாய்ந்தது. இவனுடைய மொழி தமிழ், தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாகவும், தரை மார்க்கமாகவும் உலகெங்கும் சென்று குடியேற்றங்களை அமைத்து தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் பாரெங்கும் பரப்பானர் என்பதே உண்மை. இதற்குச் சான்றாக பினீசியர்களின் நாணயங்களும், கல்வெட்டுக்களும் உதவுகின்றன.


ஆதாரங்கள் .............

ஒரு காலத்தில் சுமார் கி.மு.5,00,000 ஆண்டுகளுக்கு முன்பு,ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டு ஒரு நீண்ட நிலப்பரப்பு இருந்தது என்கிறார், அறிஞர் ஓல்டுகாம் அவர்கள்.

பேரறிஞர் எக்கேல் மற்றும் கிளேற்றர் இருவரும் ஒருமனதாக “சந்தாத் தீவுகளிலிருந்து” தொடங்கி ஆசியாவின் தென்கரை வழியாக ஆப்பிரிக்காவின் கீழைக்கரை வரை ஒரு பெரிய நிலப்பரப்பு பரவியிருந்த தாகவும், அங்கே குரங்கையொத்த உயிரினம் “இலமுரியா” (Lemuria) வாழ்ந்தன எனக் கூறுகின்றனர்.

பேரறிஞர் திரு. கட்டு எலியட் என்பவர் தாம் எழுதிய “மறைந்த இலமுரியா” (Lost Lemuria) என்ற நூலில் காட்டியுள்ள நில வரைபடத்தில் ஒரு பெரிய மலைத் தொடர் மேடைக்கடலில் தொடங்கித் தென் வடக்காகக் குமரிமுனை வரை சென்று பின்பு தென் மேற்காகத் திரும்பி மடகாசுக்கர் என்னும் ஆப்பிரிக்கத் தூவு வரை சென்றது எனச் சுட்டிக் காட்டுகிறார் என பேராசிரியர் திரு. கா. சுப்பிரமணியப்பிள்ளை அவர்கள் கூறுகின்றார்.

ஆஸ்திரேலியா, சாலித்தீவையும், தென்னாப்பிரிக்காவையும் தன்னுடன் இணைத்துக் கொண்டிருந்த நாடே “குமரி கண்டம்” என்கிறார் திரு. தேவநேயப்பாவாணர். இக்கண்டத்தில் தோன்றியவன் தான் “மாந்தன்” இவனை குமரிமாந்தன் என்பர். இவனுடைய நிலை மொழியற்ற ஊமையர் நிலை தோரா. கிமு.500000-100000 வரையாகும்.


அதே வேளை எகிப்து நதி பகுதிகளிலும், யூப்ரட்டீஸ் நதிகரையிலும் கண்டெடுக்கப்பட்ட புராதன பொருட்களை பார்க்கையில் அதில் எழுதப்பட்டிருக்கும் எழுத்துக்களானது திராவிட மொழிக்குடும்பத்தை சார்ந்த எழுத்துக்களாக உள்ளது என நிரூபிக்கப்பட்டுள்ளது. ( முன்னர் சுமேரிய எழுத்துக்கள் என கருதப்பட்டு வந்தது. எனினும் பின்னைய ஆராச்சிகளின் மூலம் அது அதிகமாக திராவிட எழுத்துக்களை, சொற்களை ஒத்துப்போவது அறியப்பட்டது. பொதுவாக இடத்தை குறிப்பதற்கு ஊர் எனும் சொல் பாவிக்கப்பட்டுள்ளது.( இன்னும் பல சொற்றகள் உதாரணமாக போட்டிருந்தார்கள்  எனக்கு மறந்துவிட்டது.) ஈரானில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளின் போதும், திராவிட, தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட அன்றாட பாவணைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது.





இன்னொரு விடையம்... உலக வரை படத்தில் தெற்கு நோக்கி செல்லச்செல்ல திராவிடத்தன்மை அதிகரிப்பதை காணமுடியும். ( நிரூபனமானது.)
ஆகவே... இந்து சமுத்திரத்தில் ஒரு கண்டம் இருந்தது... அங்கு திராவிட மொழிக்கு நிகரான மொழி பேசப்பட்டது எனும் வாதம் நிரூபனமாகிறது.



கடலில் மூழ்கிய தமிழகத்தின் தென்திசைக் குமரிக் கண்டம்


குமரியில் கடல் கொண்ட இடம் 49 ஆயிரம் சதுர மைல் என்கிறார்கள். கடல் கொண்ட குமரிக் கண்டத்தின் மேற்கு எல்லை ஆஸ்திரேலியா. கிழக்கு எல்லை ஆப்பிரிக்கா. தெற்கு எல்லை அண்டார்டிகா.

ஒரு காலத்தில் இவை அனைத்தும் ஒன்றாக இருந்திருக்கின்றன. நாளாவட்டத்தில் கடல் கொண்டு அவற்றை பிரித்திருக்கிறது. இதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. குறிப்பாக மனிதயியல் ஆராய்ச்சியாளர்கள் தமிழர்களுக்கும் ஆஸ்திரேலியா ஆப்பிரிக்கா பழங்குடிகளுக்கும் பல ஒற்றுமைகளை கூறுகிறார்கள்.

குறிப்பாக ஆஸ்திரேலியா நாட்டின் பழங்குடியினர் இன்னும் 'சிவா நடனம்' என்ற பழம்பெரும் தமிழர் நடனத்தை ஆடுகிறார்கள். நெற்றியில் கண் வைத்துக் கொண்டு முக்கண்ணுடன் ஆடுகிறார்கள். வன உயிர்களை வேட்டையாட அவர்களை 'பூமராங்' என்ற ஆயூதத்தை பயன்படுத்துகிறார்கள். இது எதிரியை தாக்கி விட்டு திருப்பி வந்து விடும். இந்த பூமராங்கை இன்னும் ஊட்டி கொடைக்கானல் பழங்குடியினர் பயன்படுத்துகிறார்கள். 

எனவே ஆஸ்திரேலியா ஆப்பிரிக்கா பழங்குடியினர் கலாச்சார ரீதியாக நம்முடன் ஒத்திருக்கிறார்கள். மெக்சிகோ நகரில் சிவப்பு இந்தியர்கள் (மயன்) சிறுபயற்றை விரும்பி சாப்பிடுகிறார்கள். நாம் அனைத்து விழாக்களிலும் தாய் மாமனுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் அவர்களும் கொடுக்கிறார்கள். தமிழன் பயன்படுத்தும் அம்மியும்இ உரல்களும் அங்கு சகஜம். இவையெல்லாம் ஒரு காலத்தில் அனைத்து பகுதிகளும் ஒன்றாக இருந்திருக்கிறது என்ற வாதத்திற்கு வலுவூட்டுவதாய் அமைந்திருக்கிறது.

குமரிக் கண்டத்தில் குமரிகோடு என்ற இடம் இருந்ததாக வரலாறு. இதையொட்டிதான் தற்போதைய குமரி மாவட்டத்தில் விளவன் கோடு அதன்கோடு ஆண்டுகோடு இடைகோடு மெக்கோடு நெட்டன்கோடு திருவிதாங்கோடு பரகோடு வெள்ளைக்கோடு கட்டிமன்கோடு என்று ஊர்களுக்கு பெயரிடப்பட்டது. சங்கம் வளர்த்த தமிழ் குமரிக் கண்டம் தான் உலகில் முதன் முதலில் தோன்றியது என்பதற்கு இன்னொரு அடையாளம் குமரி என்ற பெயர் பல கண்டங்களில் இருப்பது. குறிப்பாக ஆப்பிரிக்கா அருகே மடகாஸ்கர் தீவிற்கு குமர் என்று பெயர். இங்கு வாழும் மக்கள் கொம்ரி என்று அழைக்கப்படுகிறார்கள்.

ஆப்பிரிக்கா மடகாஸ்கர் மொசாம்பி ஆகிய இடங்களுக்கு இடையேயுள்ள தீவை கோமர் அல்லது கோம்ரான் என்று அழைக்கிறார்கள். மேற்கு ஆப்பிரிக்காவின் ஒரு பகுதி கோம்ரூல் என்றே இன்றும் அழைக்கப்படுகிறது. எனவே இவற்றிற்கெல்லாம் தோற்றுவாய் குமரிதான் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
இப்படி உலகில் முதல் மனிதன் தோன்றிய இடத்தை சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தமிழனின் பூர்வீக இடத்தை இன்னும் ஆராய்ச்சி செய்ய வேண்டும். 19-ம் நூற்றாண்டில் சேலஞ்சர் என்ற கப்பல் கடலாய்வு செய்தது. 1889-ம் ஆண்டு ஜெர்மனின் பேஷல் என்ற கப்பலும்இ ரஷ்யாவின் வித்யசு என்ற கப்பலும் கூட கடலாய்வு செய்தது.

1960 ஆம் ஆண்டில் அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் நிதிக்கொடை அளித்து, இந்து மாக்கடலில் கடற்தள ஆராய்ச்சியாளர் செய்த உளவில், தமிழகத்தின் கன்னியா குமரிக்குத் தெற்கே இரண்டு கண்டங்கள் இருந்திருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். முதலாக கப்பலில் சென்று ஒலிச் சமிக்கை அனுப்பி உளவு செய்ததில் [Ultra-Sonic Probing] தென்பகுதிக் கடலடியில் நீண்ட மலைத்தொடர் ஒன்று இருப்பதைக் கண்டார்கள். அத்திட்டம் ஏனோ 1960 ஆண்டுக்குப் பிறகு தொடரப்பட வில்லை! 1960-1970 ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட இந்து மாக்கடல் கடற்தள வரைபடங்களில், குமரிக் கண்டத்தின் பூர்வீக அமைப்பு நிலை காணப்படுகிறது. அரபிக் கடலுக்குத் தெற்கில், லட்சத் தீவுகள் நீட்சியில் மால்டிவ் தீவின் வடக்குப் பகுதியுடன் பிணைந்து, தெற்கில் சாகோஸ் ஆர்கிபிலாகோ [Chagos, Archipelago] வரை சுமார் 2000 மைல் தூரம் வரைக் குமரிக் கண்டம் இருந்திருப்பதாகத் தெரிகிறது. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த [கி.மு.8000] பனி யுகத்தின் போது [During the Ice Age] இந்து மாக்கடலில் கடல்நீர் மட்டம் குன்றிக் குமரிக் கண்டம் முழுவதும் புறத்தே தெரியும்படி மேலாக உயர்ந்திருந்தது.

பனி யுகத்தில் எங்கோ பனி திரண்டு நீர் சுண்டிப்போய் உலகெங்கும் கடல் மட்டநீர் தணிவாக இருந்தது. அப்போது உலகத்தில் கண்டங்கள், தீவுகள் பல பகுதிகளில் பிணைந்திருந்தன! ஐரோப்பாவுடன் இங்கிலாந்து, பிளாரிடாவுடன் கியூபா தீவு, ஆஸ்திரேலியாவுடன் பப்பா நியூகினி தீவு, தமிழகத்துடன் இலங்கைத் தீவு, சுமாத்திரா ஜாவா போர்னியோ தீவுகள் தென் கிழக்காசியாவின் பெருந்தளத்துடன் இணைந் திருந்தன என்று கருதப்படுகிறது! இலங்கை தமிழகத்துடன் இணைந்திருந் ததற்கு, இப்போதும் தெரியும் தணிவாக உள்ள கடல்மட்ட நீர் நிலையே சான்றாக இருக்கிறது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்து வால்மீகி முனிவர் எழுதிய இராம கதையில், அனுமார் படையினர் பாறாங் கற்களைக் கொண்டு வந்து, ஈழத்தின் தணிந்த கடற்தள மீது கற்பாலம் கட்டிக் கடந்திருப்பது அறியப்படுகிறது. பனியுகம் மாறி வெப்பம் மிகையான காலத்தில் பனிப் பாறைகள் உருகி கடல் மட்டம் மெதுவாக படிப்படியாக உயர்ந்து குமரிக் கண்டம் மூழ்கிப் போயிருக்கலாம் என்று உறுதியாக நம்ப இடமிருக்கிறது. அதன் விளைவில் குமரிக் கண்டம் சிதறி ஆஃபிரிக்கா முதல், ஆஸ்திரேலியா வரை உள்ள மடகாஸ்கர், லட்சத் தீவுகள், அந்தமான் தீவுகள், இந்தோனியாவின் தீவுகள் போன்றவை பிரிவு பட்டன என்று ஒரு சாரார் குறிப்பிட்டுள்ளார்கள்.
‘லெமூரியா கண்டம் ‘ இந்து மாக்கடல் பகுதியில் இருந்திருக்க வேண்டும் என்று முதலில் கூறியவர் 19 ஆம் நூற்றாண்டு பூதளவாதி பிலிப் ஸ்கிலேட்டர. விக்டோரியன் டார்வின் நியதியைப் பின்பற்றுவோர் மடகாஸ்கர் தீவில் மட்டும் தனித்து வாழும் லெமூர் குரங்குகளை எடுத்துக் காட்டி யிருக்கிறார்கள். அவற்றின் பூர்வப்படிவப் பிரதிகள் ஆஃபிரிக்காவிலும், தென் கிழக்காசியாவிலும் தற்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. ஜெர்மன் டார்வின்வாதியான ஏர்னெஸ்ட் ஹேக்கல் ஆதி லெமூரியாவின் உயிர் மூலவிகயாவும் இந்து மாக்கடலில் மூழ்கி மடிந்ததால் காணாமல் போயின என்று கூறியதை எடுத்துக் கொண்டு பிலிப் ஸ்கிலேட்டர் லெமூரியா கண்டம் (குமரிக் கண்டம்) ஒன்று ஆங்கே இருந்திருக்க வேண்டும் என்று அறிவித்திருக்கிறார்.


குமரிக்கண்டப் பழங்குடிமக்கள் தமிழர்களே!
குமரிக்கண்டத்தின் பெரும் பகுதியாகிய பழந்தமிழ் நாட்டை ஆண்டவன் தமிழனே! அம்மொழியும் தமிழ் மொழியே! கடல் கோள்களால், தமிழனின் புகழும், நாடும், மொழியும் அழிவுற்றன. பழந்தமிழ் இலக்கியங்களில் கூறப்படும் கடல்கோள்கள் ஒன்றல்ல, இரண்டல்ல, பலப் பல. நான்கு முறை ஏற்பட்ட பெரும் கடல் கோள்கள் குமரிக் கண்டத்தை அழித்து நாசமாக்கியது.

நான்கு பெருங் கடல் கோள்கள்

1. முதல் சங்கம் – தென்மதுரை – கடல் கொண்டது
2. இரண்டாவது – நாகநன்னாடு – கடல் கொண்டது
3. மூன்றாவது இடைச்சங்கம் – கபாடபுரம் – கடல் கொண்டது
4. நான்காவது – காவிரிப்பூம்பட்டிணம் – கடல் கொண்டது.

சிறுகடல் கோள்கள் எண்ணில் அடங்காது.

தொல்காப்பியம்
பழந்தமிழ் நாட்டில் வாழ்ந்த குமரிமாந்தனின் காலத்தைவிட பல்லாயிரம் ஆண்டுகள் பிந்தியதே தொல்காப்பியம். தொல்காப்பியம் தோன்றிய காலம் கி.மு. 3-ஆம் நூற்றாண்டிற்கும், கி.மு 5-ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலமாகும். தொல்காப்பியர் காலத்திற்கு வெகு காலத்திற்கு முன்பே தமிழ் மொழி மிகச் சிறப்புற்றிருந்தது. சிறப்பு மிக்க தமிழ் இலக்கியங்கள் பல இருந்தன. ஆனால் அவைகள் அனைத்தும் நான்குமுறைகள் ஏற்பட்ட கடல் கோள்களால் முழுமையாக அழிவுற்றன.

மூன்று தமிழ் : தமிழ் மொழி தோற்றத்தையும் வரலாற்றுக் காலத்தையும் பல பகுதிகளாக பிரித்துக் கொள்ளலாம்.

1. பழந்தமிழ்
2. இடைக்காலத்தமிழ்
3. தற்காலத்தமிழ்

1. பழந்தமிழ் (Ancient Tamil)

உட்பிரிவுகள் மூன்று.

அ. முன்பழந்தமிழ் – தொல்பழந்தமிழ்

Early ancient Tamil (or) Proto Ancient Tamil

ஆ. மத்திய பழந்தமிழ் – Medieval Ancient Tamil

இ. பின்பழந்தமிழ் – Later Ancient Tamil

2. இடைக்காலத் தமிழ் (Medieval Tamil)

உட்பிரிவுகள் மூன்று.

அ. முன்இடைக்காலத் தமிழ் – Early Medieval Tamil

ஆ. மத்தியஇடைக்காலத் தமிழ் – Medium Mediaval Tamil

இ. பின்இடைக்காலத் தமிழ் – Later Medieval Tamil

3. தற்காலத் தமிழ் (Modern Tamil)

உட்பிரிவுகள் மூன்று.

அ. முன் தற்காலத் தமிழ் – Early Modern Tamil

ஆ. பின் தற்காலத் தமிழ் – Later Modern Tamil

முன்பழந்தமிழ் அல்லது தொல்பழந்தமிழ்
Early ancient Tamil (or) Proto Ancient Tamil
திராவிட மொழிகள் பல உள்ளன. அவைகள் அனைத்தும் தமிழ் என்ற ஒரு மூல மொழியிலிருந்து உருவானவைகள். தொல்பழங்காலத்தில் திராவிட மூல மொழியாக இருந்த தமிழ் மொழியிலிருந்து பிரிந்து, காலத்தாலும் இடமாற்றங்களாலும் வெவ்வேறு மாற்றமடைந்து வளர்ந்தவைகளே பிறமொழிகள். அவற்றை நாம் ” திராவிட மொழிக் குடும்பம்” என்று அழைக்கிறோம். பல மொழிகள் உருவாக மூலமாக, கருவாக இருந்த மொழியினைத் தொல்திராவிட மொழி அல்லது மூலத்திராவிட மொழி (Proto Diravidan Language) என்கிறோம்.

திராவிட மொழிக் குடும்பம்
மூலத்திராவிட மொழி அல்லது தொல் திராவிட மொழியாகத் திகழ்ந்த தமிழ் மொழியிலிருந்து பிரிந்து சென்ற மொழிகளைத் திராவிட மொழிக் குடும்பம் என்கிறோம். தமிழ், கோண்டி, கூயி, கூவி, கோவாமி, மண்டா, கொண்டா, நாயக்கி, குருக், மால்தோ, பிராகூய் போன்றவைகளோடு இன்னும் பல பல உண்டு. திராவிட மொழிகளை மூன்று பிரிவுகளாகப் பிரித்துள்ளனர்.

1. தென் திராவிட மொழிகள் – தமிழ், மலையாளம், கன்னடம்.
2. நடுத்திராவிட மொழிகள் – தெலுங்கு, கோண்டி, கூயி, கூவி மேலும் பல உள்ளன.
3. வடதிராவிட மொழிகள் – குருக், மால்தோ, பிராகூப் மேலும் பல உள்ளன.

தமிழ்மொழியின் பெரும்புகழ்
திராவிட மொழிகளில் மிகப் பழமை வாய்ந்த மொழி தமிழ். சுமார் ஐந்தாயிரம் (5000) ஆண்டுகளுக்கு முன்பே இலக்கண நூல்களையும் பல இலக்கியங்களையும் பெற்று பாரெங்கும் புகழ்பரவ, பெரும் வளர்ச்சி பெற்றிருந்த ஒரே மொழி தமிழாகும். திராவிட மொழியை ஆய்வு செய்த பேரறிஞர்கள் திரு. பர்ரோவும், திரு. எமனோவும் இணைந்து “திராவிடச் சொற்பிறப்பியல் அகராதி” (Diravidan Etymological Dictonary) வெளியிட்டனர் என்றால், தமிழ் மொழியின் வளர்ச்சியை உணருங்கள்.

இத்தமிழ் மொழி, இன்றைய தமிழ் நாட்டில் மட்டும் அல்ல அன்றைய குமரிக் கண்டமாகிய பழந்தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் பாரெங்கும் பரவியிருந்தது. பர்மா, மலேசியா, சிங்கப்பூர், பிஜித்தூவு, இலங்கை, தென் ஆப்பிரிக்கா, பிரிட்டிஷ், கயானா, மடகாஸ்கர், கிரினிடால் போன்ற உலகின் பல பகுதிகளிலும் பரவி மலர்ந்திருந்தது.

தமிழினம் மற்றும் மொழிச் சிதைவு
உலகெங்கும் தன்னிகரற்ற பேரரசனாகக் கொடிகட்டிப் பறந்த தமிழினமும், அவன் தாய் மொழியாகிய தமிழ் மொழியும், நான்குமுறை ஏற்பட்ட பெரும் கடல் கோள்களால் அழிவுற்றது. அப்பெரும் கடல் கோள்களால் குமரிக்கண்டம் மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்திலுமே பேரழிவுகளால் மலை மடுவானது, உலகின் பல நாடுகள் அழிவுற்றன. உயிரினங்கள் மாண்டன, மொழிகளும் சிதைவுற்றன. அவ்வாறே குமரிக்கண்டமும் நீரில் மூழ்கி அழிவுற்றது. இந்த அழிவுகளால் தமிழின் மரபு, பண்பாடு, கலாச்சாரம், தமிழ் இலக்கணங்கள், இலக்கியங்கள் அத்தனையும் சிதைந்து நாசமாகியது. உலகின் பூகோள வடிவமே மாற்று வடிவம் பெற்றது.

வரலாற்றுச் சான்றுகள்
வரலாறு பலவகை உண்டு. அவற்றில் மொழிவரலாறும் ஒன்று. மொழி வரலாறு என்பது மொழியின் தோற்றம், வளர்ச்சி, காலங்கள் தோறும் ஏற்படும் மொழியின் மாற்றங்கள், பிறமொழிக் கலவை, வரிவடிவ மாற்றங்கள் இப்படிப் பல மொழிச் செய்திகளை நமக்குத் தருவது மொழி வரலாறு. ஒரு மொழியின் வரலாற்றைப் படைக்க, சான்றுகளே முக்கியப் பங்கேற்கிறது. சான்றுகளின்றிப் படைக்கப்படும் வரலாறுகள் வரலாறுகள் அல்ல, அவைகள் கதைகளாகக் கருதப்படும்.

தமிழ் மொழி வரலாற்றுச் சான்றுகள்
மொழிகள் காலத்திற்குக் காலம் மாற்றம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. மொழிகள் தோன்றிய காலம் எதுவென்று சரிவரக் கூறமுடியாத நிலை இன்னும் நீடிக்கிறது மனிதன் என்று தோன்றினான்? உயிரின வளர்ச்சிகள், மொழிகளின் இயற்கைத் தோற்றம், அவற்றின் வளர்ச்சிகள், போன்ற பலதலைப்புகளில் சிந்தனையைச் செலுத்தவும், ஆய்வினைக் கொள்ளவும், முதல் முதலில் தோன்றியது “டார்வினின் பரிணாமக் கொள்கையே” ஆகும். தமிழ் மொழியின் ஆய்வினைக் கொண்ட பேரறிஞர்கள் தமிழ் இலக்கியங்கள், இலக்கணங்கள், அகராதிகள், கல்வெட்டுகள், பிறமொழிக் கல்வெட்டுக்கள், அயல்நாட்டினர் குறிப்புகள், நடுகற்கள், அரசுச் சாசனச் செப்பேடுகள், தொல் பொருட்களின் மீது எழுதப்பட்ட வரி வடிவங்கள் போன்ற பல மொழி வரலாற்றுச் சான்றுகளைப் பயன்படுத்தி மொழி வரலாற்றைப் படைக்கின்றனர்.

ஆற்றுச் சமவெளி நாகரிகங்கள்
ஒரு வரலாற்றைப் படைக்க, ஒரு நாட்டைப் பற்றித் தெரிந்து கொள்ள, ஒரு மொழியை அறிந்துகொள்ள அடிப்படையாக அமைவது ஆற்றுச் சமவெளி நாகரிகங்களே! இத்தோடு ஒத்துழைப்புத் தருபவைகள் மொழி இலக்கணங்களும், இலக்கியங்களும், அனைத்து விதமான ஆதாரங்களைக் கொண்டு உலக வரலாற்றைக் கண்டறிந்த ஆய்வு நிபுணர்கள், மொழி வரலாற்றையும் கண்டறிந்துள்ளனர். தமிழ்மொழியின் தொன்மையையும், தோற்றத்தையும் மாற்றத்தையும் வளர்ச்சியையும் பின்வரும் பகுதிகளில் நன்கு அறிவோம்.

சார்லஸ் டார்வின்
இங்கிலாந்து நாட்டின் வரலாற்று மேதை திரு. சார்லஸ் டார்வின் எழுதிய “உயிரினத்தோற்றம்” வாயிலாக கடல் வாழ் உயிரினங்கள், மற்றும் குரங்கையொத்த உருவைக் கொண்ட “மாந்தன் (Lemuria)” போன்ற உயிரினத் தோற்றங்களை அறிகின்றோம். மேலும் “மனிதனின் பாரம்பரிய வளர்ச்சி” என்னும் நூலின் வாயிலாக குமரிமாந்தனையும், மனித இன பரிணாம வளர்ச்சியையும் உணரமுடிகிறது.



இலக்கியங்களில் குமரிகண்டம் பற்றிய குறிப்புகளை இங்கே காணலாம் :

சிலப்பதிகாரம் : “குமரிக்கோடும் கொடுங்கோளால் கொல்லா” இதில் இளங்கோவடிகள் குமரி கண்டத்தின் பெரிய நகரங்களில் ஒன்றான புகார் நகரம் கடலில் மூழ்கி அழிந்ததைப் பற்றி பேசியுள்ளார்.மேலும் இது பஹுருலி ஆற்றையும் பன்மலை அடுக்கத்தையும் விழுங்கி விட்டது என்று ஆழிப்பேரலையின் சீற்றத்தை விவரிக்கின்றார்.

மணிமேகலை : இதிலும் புகார் நகரம் அழிந்ததைப் பற்றியும் ,கடற்கோள் ஏற்பட்டதைப் பற்றியும் விவரிக்கப்பட்டுள்ளது.

களித்தொகை : இதில் பாண்டிய மன்னன் ,கடற்கோளால் தன்னுடய நாட்டின் பெரும்பான்மையான பகுதிகள் அழிந்ததைப் பற்றி பெரிதும் கவலைப்படாமல், அதை ஈடுகட்ட சேர,சோழ மன்னர்களின் மீது படை எடுத்து, அவர்கள் நாட்டைக் கைப்பற்றினான் என்று கூறப்பட்டுள்ளது.

சிங்கள இலக்கியம் : கி.மு .320 ஆம் ஆண்டு வாழ்ந்த சிங்கள இலக்கியவாதி மஹாவம்சர் தன்னுடைய ராஜ்யவலிகதா என்ற நூலில் இப்படி குறிப்பிடுகிறார். இந்தியாவின் தென்பகுதி கடல்எழுச்சியில் மூழ்கியது.


உலகில் ஆழமாக பதிந்த அபூர்வங்கள்.............

 குமரிக் கண்ட ஆய்வில் பரிமாணங்கள்.

இப்போது குமரிகண்டம் என்று எதுவுமில்லை, அதைப் பற்றிய கடல் ஆரய்ச்சி மேற்கொள்ள இந்திய அரசும் தயாரில்லை. திராவிட கழகங்களும் இதைப்பற்றி முற்றிலும் மறந்துவிட்ட நிலையில்..........

வரலாறு:

கி.மு 14 பில்லியன்
பெரும் வெடியில் உலகம் தோன்றியது.

கி.மு 6 - 4 பில்லியன்
பூமியின் தோற்றம்.

கி.மு. 2.5 பில்லியன் 
நிலத்தில் பாறைகள் தோன்றிய காலம். முதன் முதலில் தமிழ் நாட்டில் மனித இனம் தோன்றியது. தென் குமரிக்குத் தெற்கே இலெமூரியா கண்டத்தில் முதலில் மனித இனம் தோன்றியது.

கி.மு. 470000
இக்கால இந்தியாவின் தமிழ் நாடு, பஞ்சாப் ஆகிய இடங்களில் மனித இனம் சுற்றித் திரிந்தது.

கி.மு. 360000
முதன் முதலாக சைனாவில் யோமோ எரக்டசு நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கி.மு. 300000
யோமோ மனிதர்கள் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் சுற்றித் திரிந்தனர்.

கி.மு. 100000
நியாண்டெர்தல் மனிதன்
கிழக்கு ஆப்பிரிக்காவில் தற்கால மனிதனின் மூளை அளவு உள்ள மனிதர்கள் வாழ்ந்தனர்.

கி.மு. 75000
கடைசி பனிக்காலம.். உலக மக்கட் தொகை 1.7 மில்லியன்.

கி.மு. 50000
தமிழ்மொழியின் தோற்றம்.

கி.மு. 50000 - 35000
தமிழிலிருந்து சீன மொழிக் குடும்பம் பிரிவு.

கி.மு. 35000 - 20000
ஆஸ்திரேலிய, ஆப்பிரிக்க சிந்திய மொழிகள் தமிழிலிருந்து பிரிந்ந காலம்.

கி-மு. 20000 - 10000
ஒளியர் கிளைமொழிகள் தமிழிலிருந்து பிரிந்தகாலம் ( இந்தோ ஐரோப்பிய மொழிகள் )

கி-மு. 10527
முதல் தமிழ்ச்சங்கத்தை பாண்டிய மன்னன் காய்கினவழுதி தோற்றுவித்த காலம். 4449 புலவர்கள் கூடினர். முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை முதலிய நூல்கள் இயற்றப்பட்டன.

கி.மு. 10527 - 6100
பாண்டிய மன்னர்கள் காய்கினவழுதி வடிவம்பலம்ப நின்ற நெடியோன், முந்நீர்ப் விழவின் நெடியோன், நிலந்தரு திருவிற் பாண்டியன் செங்கோன், பாண்டியன் கடுங்கோன்.

கி.மு. 10000
கடைகி பனிக்காலம் முற்றுப்பெற்றது. உலக மக்சுள் தொகை 4 மில்லியன். குமரிக்கணடம் தமிழர் 100000.

கி.மு. 6087
கடல் கொந்தளிப்பில் குமரிக் கண்டம் மூழ்கியது.

கி.மு 6000 - 3000
கபாடபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டவன் பாண்டிய மன்னன் வெண்தேர் செழியன். இரண்டாம் தமிழ்ச்சங்கத்தை நிறுவினான். 3700 புலவர்கள் இருந்தனர். அகத்தியம், தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்கள் எழுந்தன. பாண்டிய மன்னர்கள் செம்பியன் மந்தாதன், மனுச்சோழன், தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன் அதியஞ்சேரல், சோழன் வளிதொழிலாண்ட உரவோன், தென்பாலி நாடன் ராகன், பாண்டியன் வாரணன், ஒடக்கோன், முட்டதுத் திருமாறன் ஆண்டகாலம்.

கி.மு. 5000
உலக மக்கள் தொகை 5 மில்லியன். சிந்து சமவெளி நாகரிகம் தொடக்கம். முகஞ்சதாரோ, ஹரப்பா.

கி.மு. 4000
சிந்து சமவெளி மக்கட் தொகை 1 மில்லியன்.

கி.மு - 4000
கிருத்துவ உலக நாட்குறிப்பு ஆரம்பம். சுமேரியாவில் புதை பொருளாராய்ச்சி சிந்து சமவெளி வணிகப் பொருள் கண்டது.

கி.மு - 3200
சிந்து சமவெளியினர் 27 விண்மீன்கள் இடைத்தொடர்பு நோக்கி சூரிய, சந்திரனின் முழு மறை வடிவங்கள் நிலைபபாடு கண்டனர்.

கி.மு - 3113
அமெரிக்க- தமிழினத்தவராகிய மாயர்கள் தொடங்கிய மாயன் ஆண்டுக் கணக்கு ஆரம்பம்.

கி.மு - 3102
சிந்து சமவெளிக் தமிழர்களின் "கலியாண்டு" ஆண்டு தொடக்கம், சிந்து சமவெளியில் தமிழர்களின் நாகரிகம் தழைத் தொடங்கியது.

மண்டையோட்டு வடிவங்களின் வகைகள்

இடமிருந்து வலம்: நெடுமண்டை நீள்வட்ட வடிவம்; இரண்டு குட்டைமண்டை வடிவங்கள்- நீளுருண்டை வடிவமும் ஆப்பு வடிவமும்; நடுமண்டை ஐங்கோண வடிவம்.

கி.மு - 3100 - 3000
ஆரியர்கள் சிந்து சமவெளி வழி நுழைந்தனர். துணி நெய்தல் ஐரோப்பா சிந்து சமவெளியில் ஆரம்பித்தது. தென்னிந்தியாவில் குதிரைகள் இருந்தது. சைவ ஆகமங்கள் முதல் தமிழ்ச் சங்க காலத்தில் பொறிக்கப்பட்டன.

கி.மு - 2600
எகிப்திய பிரமிடுகள் வேலை ஆரம்பம்.

கி.மு - 2387
இரண்டாம் கடல் கொந்தளிப்பால் கபாடபுரம் அழிந்தது. ஈழம் பெருநிலப் பகுதியிலிருந்து பிரிந்தது.

கி.மு - 2000 - 1000
காந்தாரத்தில் இருந்த ஆரியர்களுடன் வடபுலத் தமிழ் மன்னர்களும் சிந்து வெளி தமிழர்களும் போர் புரிந்த காலம். கடற்பயணங்களில் புதியன கண்டுபிடித்த சேர இளவரசர்கள் ஈழத்தில் ஆண்டகாலம். கங்கைவெளி - சிபி மரபினர் ஆட்சி. சிந்து வெளி - சம்பரன் ஆட்சி.

கி.மு - 1915
திருப்பரங்குன்றத்தில் மூன்றாம் தமிழ்ச் சங்கம் நடந்தது.

கி.மு. - 1900
வேத கால முடிவு. சரசுவதி ஆறு வற்றியதினால் மக்கள் தொகை கங்கை ஆறு நோக்கி நகர்ந்தது.

கி.மு. 1500
முக்காலத்து பிராமி மொழி வழக்கத்தில் இருந்த துவாரக நகர் வெள்ளத்தில் மூழ்கியது. இரும்பின் உபயோகம். கிராம்பு சேர நாட்டிலிருத்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

கி.மு. - 1450
உபநிசத்துக்களும் வேதங்களும் உண்டாக்கப்பட்டன.

கி.மு. - 1316
மகாபாரத கதை வசிஸ்டரால் அமைக்கப் பட்டது.

கி. மு. 1250
மோசஸ் 600,000 யூதர்களை எகிப்திலிருந்து வெளியேற்றினார்.

கி. மு . 1200
ஓமரின் இல்லயாய்டு, ஓடசி பாடல்கள் மேற்கோற்படி கிரேக்க துரோசன் சண்டை.

கி. மு. 1000
உலக மக்கள் தொகை 50 மில்லியன்.

கி. மு. 1000-600
வடக்கில் சிபி மரபினர், தெற்கில் திங்கள் மரபினர் ஆட்சி நிலவியது.

கி. மு. 950
அரசன் சாலமன் வர்த்தகக் கப்பலில் யூதர்கள் இக்காலத்து கூறப்படும் இந்தியா வருகை.

கி. மு. 950
வடமொழி முழு வளர்ச்சியடையாது பேச்சு மொழி உருவெடுத்தக் காலம்.

கி. மு. 925
யூதர்களின் அரசன் தாவிது இப்போதைய இசுரேல், லெபனானை பேரரசாகக் கொண்டிருந்தான்.

கி. மு. 900
இப்போதைய இந்தியாவில் இரும்பின் உபயோகம்.

கி. மு. 850பின்
இபபோதைய இந்தியாவின் பொதுவான மொழி தமிழ், வடமொழி, (வடதமிழ், தென்தமிழ்) என மொழிகள் உருவாயின. வடபுலத்தில் பிராமி எனவும் தென்புலத்தில் தமிழி எனவும் பெயர்பெற்றன. பிராமிக்கும், தமிழுக்கும் எழுத்திலக்கண ஒற்றுமை உண்டு. வடமொழி பாகதமாகவும், தென்மொழி தமிழாகவும் பெயற்பெற்றன. (சமசுகிருதம் வடமொழி அல்ல. காரணம் அது போதுமான வளர்ச்சி அடைந்திருக்கவில்லை.) தொல்காப்பியம்- பிராகிருதப் பிரகாசா இலக்கண நூற்கள் எழுதப்பட்டன, கடைச் சங்க காலத்தில் நற்றினை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், பத்துபாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, கூத்தராற்றுப்படை, மருதக்காஞ்சி, முல்லைப்பட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, நெடுநல்வாடை, முதலிய நூல்கள் தோன்றின. திருக்குறள் தலையாய நூல், பின்னர் சங்க கால முடிவுக்குப் பின் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி முதலிய ஐம்பெரும்காப்பியங்களும், முதுமொழிக்காஞ்சி, களவழி நாற்பது, கார்நாற்பது, நாலடியார் திரிகடுகம், நான்மணிக்கடிகை, சிறுபஞ்ச மூலம், ஏலாதி, ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, முத்தொள்ளாயிரம் முதலிய நூல்களும் தோன்றின.

கி. மு. 776
கிரேக்கத்தில் (கிரிஸ்) முதல் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி.

குழந்தைகள் குகையில் கண்டு எடுக்கப்பட்ட மண்டையோடு. மென்டோனா, இத்தாலி. பித்திக்காந்திரோப் பஸ் 1 யின் மண்டையோடு. (தூபுவா 1891ல் கண்டு எடுத்தது) சீனாந்திரோப்பஸின் மண்டையோடு (மீட்டமைப்பு: கெராஸிமவ்)

கி. மு. 750
பிராகிருத மொழி மக்கள் மொழியாக ஆரம்பித்தது.

கி. மு. 700
சொரோஸ்டிரேணியிசம் பெர்சியாவில் சொரோஸ்டரால் துவக்கப்பட்டது, இவருடைய மதப்புத்தகம் செண்டு அவெசுடா.

கி. மு. 623- 543
கெளதம புத்தர் காலம், தற்போதைய உத்திரப்பிரதேசத்தில் பிறந்தார்.

கி. மு. 600
லாவோ - துசு காலம். துவோசிசம் சைனாவில் புழக்கம், எளிமை, தன்னலமின்மை சீனர்கள் வாழ்வானது.

கி. மு. 600
கோதடிபுத்தர் அறிந்த மொழிகளில் தமிழும் ஒன்று, கி.மு. நான்கு, ஐந்து, ஆறாம், நூற்றாண்டுகளில் குறிப்பிடத்தக்க மன்னர்கள் இளைஞன் கரிகாற்சோழன், பெருஞ்சோற்று உதயஞ்சேரலாதன். பழந்தமிழ் இசைக்கருவிகள் வடநாடு முழுவதும் வழக்கில் இருந்தன. (தோற்கருவிகள்) தமிழிலக்கணத்தைப் பின்பற்றி சமஸ்கிருதத்திலும் எழுத முயற்சி மேற்கொள்ளபட்டது. புணர்ச்சி இலக்கணம் சமஸ்கிருதத்தில் திணிக்கப்பட்டுள்ளது.

கி. மு. 599 - 527
மகாவீரர் காலம். ஜெயின மதம் தோற்றம் உயிர்த்துண்பம் தவிர்த்தல் இவரின் பெருங்கருத்து.

கி. மு. 560
பித்தகோரசு கிரேகத்தில் (கீரிஸ்) கணிதம், இசைக் கற்றுக் கொடுத்தக் காலம். மரக்கறி உண்ணல், யோகாசனம், ஓவியம் தமிழ் நாட்டில் கற்பிக்கப்பட்டன.

கி. மு. 551-478
கன்பூசியஸ் காலம். சீனர்களின் கல்விக்கு அடிப்படையே இவருடைய சமுதாய கல்வி, மக்களின் வாழ்முறை, மதம் யாவும்.

கி. மு. 500
கரிகாற் சோழன் காலம். உலக மக்கள் தொகை 100 மில்லியன். இப்போதைய இந்திய மக்கள் தொகை 25 மில்லியன்.

கி. மு. 478
இளவரசன் விசயா 700 துணையாளர்களுடன் இலங்கையில் சிங்கள அரசு ஏற்படுத்தல்.

கி. மு. 450
ஏதேன்சில் சாக்கரடீஸ் புகழோடு இருந்த காலம்.

கி. மு. 428 - 348
சாக்கரடீஸ் மாணவர் புளுட்டோவின் காலம்.

கி. மு. 400
கிரேக்கத்தில் மருத்துவமேதை இப்போகிரட்டீசின் காலம். பனினி வடமொழி இலக்கணம் அமைத்தார்.

கி. மு. 350 - 328
உதயஞ் சேரலாதன் காலம் (செங்குட்டுவன் நெடுஞ்சேரலாதன்)

கி. மு. 328 - 270
மகன் இமயவரம்பன் - நெடுஞ்சேரலாதன் ( ஆரியரை வென்றவன் - கிரேக்க யவனரை அடக்கியவன்)

கி. மு. 326
அலெக்சாண்டர் சிந்துப் பிரதேசத்தின் மீது படையெடுப்பு. வெற்றி அமையவில்லை.

கி. மு. 305
சந்திரகுப்த மெளரியரின் அட்சிக்காலம். கிரேக்க பேரரசு அமைத்த செலுக்கசை தோற்க்கடித்தவர்.

கி. மு. 302
சந்திரகுப்தரின் அமைச்சர் கெளடில்யர் அர்த்தசாத்திரம் எழுதல்.

கி. மு. 300
சீனர்கள் வார்த்த இரும்பு கண்டுபிடித்தல்.

கி. மு. 300
கல்வெட்டுகளில் சோழ, பான்டிய, சத்தியபுத்திர, சேர அரசுகள் இருந்தன. கி.மு. இரண்டாம் நூற்றாண்டு வரை தமிழ், பிராகிருதம் இரண்டும் எழுத்து மொழியாகவும் பேச்சு மொழியாகவும் விளங்கின. பிராகிருதம் - மக்களின் மொழி. நாணயங்களின் ஒரு பக்கம் தமிழ், மறுபக்கம் பிராகிருதம் என அமைந்திருந்தன.

கி.மு. 273-232
மெளரிய பேரரசர் அசோகர் காலம். தமிழ்நாடு தவிர மற்றவை இவர் வசம் இருந்தது. கலிங்க போர் இவரை புத்த மதத்திற்கு மாற வைத்தது. இவரது அசோக சக்கரம் இன்று இந்தியக் கொடியில் உள்ளது.

கி.மு. 270-245
சேரன் பல்யானை செல்கெழு குட்டுவன், சோழன் பெரும்பூண் சென்னி, பாண்டியன் ஒல்லையூர் பூதப் பாண்டியன், ஆகியோரின் காலம்.

கி.மு. 251
புத்த மதம் பரப்ப அசோகர் தன் மகனை இலங்கைக்கு அனுப்பினார்

கி.மு. 245-220
சேரன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் காலம்.

கி.மு. 221
புகழ் வாய்ந்த சைனாவில் 2600 கல் நீளமுள்ள பெரும் சுவர் கட்டப்பட்டது.

கி.மு. 220 - 200
கரிகாற்சோழனுக்கும் பெருஞ் சேரலாதனுக்கும் போர்.

கி.மு. 220-180
குடக்கோ நெடுஞ்சேரலாதன் ஆட்சி. உறையூர்ச் சோழன் தித்தன், ஆட்டணத்தி, ஆதிமந்தி, ஆகியோர் வாழ்ந்த காலம்.

கி.மு. 200
முனிவர் திருமூலர் காலம். 3047 சைவ ஆகமங்களின் தொகுப்பான திருமந்திரம் எழுதினார்.

கி.மு. 200
தமிழ்நாட்டில் பதஞ்சலி முனிவர் யோக சூத்திரங்கள் எழுதினார். 18 சித்தர்களில் ஒருவரான போகர் முனிவர் பழனி முருகன் கோவிலை ஏற்படுத்தினார்.

கி.மு. 125-87
ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் காலம்.

கி.மு. 87-62
செல்வக் கடுங்கோ வாழியாதன் ஆட்சி. பாரி, ஒரி, காரி, கிள்ளி, நள்ளி முதலிய குறுநில மன்னர்கள் ஆட்சி

கி.மு. 62-42
யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஆட்சி, சேரமான் மாரி வெண்கோ தொண்டியில் ஆட்சி. இக்காலத்தில் வாழ்ந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், மாங்குடி மருதனார் கல்லாடனார்.(கல்லாடம்)

கி.மு. 42-25
பெருஞ்சேரலிரும்பொறை ஆட்சி, சேரமான் மாரிவென்கோ இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, கானபெரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி ஒற்றுமையாய் இருந்தார்கள். இவர்களை இன்றே போல்கநும்புணர்ச்சி என அவ்வை பாராட்டினார், மோசிக்கீரனார், பொன்முடியார் கொண்கானங்கிழான் நன்னன், கரும்பனூர்கிழன், நாஞ்சில் வள்ளுவன் குறிப்பிடத்தக்கவர்கள்.

கி.மு. 31
உலகப் பொது மறையாம் தமிழனின் நன்கொடையாம் திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் பிறந்த ஆண்டு.

கி.மு. 25-9
இளஞ்சேரல் இரும்பொறை ஆட்சி. பாண்டியன் பழையன் மாறன். கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார், பொத்தியார், புல்வற்றூர் ஏயிற்றியனார் ஆகியோரின் காலம்.

கி.மு. 9-1
கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை, பாண்டியன் கீரன் சாத்தன் வாழ்ந்த காலம்.

கி.மு. 4
ஏசுநாதர் - கிருத்துவர் மதம் கண்டவர் பெத்தலயேமில் பிறந்தார்.

Leia mais...

  ©Raka - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo