Tuesday, June 15, 2010

சரணம் சரணம் ஐயப்பா

சரணம் சரணம் ஐயப்பா
சபரிமலை சாஸ்தாவே ஜோதி நீயப்பா

தந்தனத்தான் பாடும் மலை
சரணகோஷம் முழங்கும் மலை
சஞ்சலங்கள் தீர்க்கும் மலை
ஸ்வாமி வாழும் சபரி மலை

பம்பை நதி ஓடும் மலை
பம்பா வாசன் வாழும் மலை
பாவங்கள் போக்கும் மலை
ஸ்வாமி வாழும் சபரி மலை

---------------------------------------------------------------------------------------------------

கல்லும் முள்ளும் நிறைந்த காடு சபரியென்று சொன்னாங்க! –
ஆமா சபரிமலை என்றாங்க!
கால்வைச்ச இடமெல்லாம் பஞ்சாயிருக்கு என்னாங்க!
கள்ளங்கபடம் இல்லாத உள்ளத்தோடு வந்தாலே
மலையில் உள்ள எல்லாமே மாறும் பாரு தன்னாலே! – (கல்லும்)

கொல்லும் வேங்கை திரியும்காடு சபரியென்று சொன்னாங்க! –
ஆமா சபரிக்காடு என்றாங்க!
அவை எல்லாம் சிலைபோல அமர்ந்திருக்கு என்னாங்க!
விரதம் இருந்து வந்தாலே விலகும் யாவும் தன்னாலே
ஐயனைத் தியானம் செய்தாலே அவனிருப்பான் முன்னாலே! – (கல்லும்)

ஆனைக் கூட்டம் உலவும் காடு சபரிமலை என்றாங்க! –
ஆமா சபரிமலை என்றாங்க!
கணபதியே முன்னாலே காட்சி தந்தது என்னாங்க!
தினமும் பூஜை செய்தாலே தெய்வபலம் தன்னாலே
வணங்கும் தெய்வம் எல்லாமே வந்து நிற்கும் முன்னாலே! - (கல்லும்)

கரிமலையை கடப்பதெல்லாம் கடினமென்று சொன்னாங்க! –
ஆமா கடினமென்று சொன்னாங்க!
மனசுக்குள்ளே அவனிருந்தான் காற்றுப் போல வந்தேங்க!
அவனை நம்பி நின்றாலே கைகொடுப்பான் தன்னாலே
பக்தியோடு வந்தாலே காத்திருப்பான் முன்னாலே! – (கல்லும்)

பனிபெய்யும் இரவினிலே பாதையெல்லாம் கோஷம்தான்! -
பெரிய பாதையெல்லாம் கோஷம்தான்!
மணிகண்டன் அதனைக் கேட்டு ஓடிவரும் நேரம்தான்!
குரலைக் கேட்ட பின்னாலே குதித்திடுவான் முன்னாலே
தஞ்சமென்று நின்னாலே தாங்கிடுவான் முன்னாலே! - (கல்லும்)

மகரஜோதி எல்லோருக்கும் தெரியுமான்னு கேட்டாங்க! –
ஆமா தெரியுமானு கேட்டாங்க!
மனசுக்குள்ளே இருட்டினிலே விண்ணில் ஜோதி கண்டோங்க!
சரணம் சொல்லி நின்னாலே ஜோதி ரூபம் முன்னாலே
வாஞ்சையோடு வந்தாலே வாழ்த்திடுவான் மெய்யாலே! – (கல்லும்)


---------------------------------------------------------------------------------------------

இருமுடி தாங்கியே செல்லுவோம்
இறைவன் ஐயப்பனைக் காணவே!
ஸ்வாமி ஸரணம் ஐயப்ப ஸரணம்
ஸ்வாமியே ஸரணம் ஐயப்ப ஸரணம்

கூட்டம் கூட்டமாய் வருகிறார் - அங்கே
கூடிக் கூத்தாடிச் செல்கிறார் - அவர்
கூறும் மொழியெல்லாம் சரணமே – அந்தக்
கூட்டத்திலும் ஐயப்பனும் இருக்கிறார்!

பாரத்தவர் மறுபடியும் பார்ககிறார் - அதை
பாராதவர் சபரியை நோக்கிறார் - பாராத
சபரியில் ஐயப்பன் அவரைக் காணவே
சபரி மலைக்குச் செல்லுவோம்!

எருமேலி என்னும் வனத்திலே – எங்கள்
இறைவன் ஐயப்பனும் இருக்கிறார் - அவர்
எங்கும் எதிலும் இருப்பவர் - அவர்
எல்லா லீலைகளும் புரிபவர்!


-------------------------------------------------------------------------

 வாறாராம் ஸ்வாமி வாறாராம் - வரிப்புலி தானேறி ஐயப்பன் வாறாராம்
வாறாராம் ஸ்வாமி வாறாராம் - வன்புலி தானேறி ஐயப்பன் வாறாராம்

கன்னிஸ்வாமி பூஜையிலே கலந்துகிட வாறாராம் -
வாறாராம் ஐயப்பன் வாறாராம்
சன்னிதான மேடைவிட்டு சடுதியிலே வாறாராம்
வாறாராம் ஐயப்பன் வாறாராம்
அன்னதானம் எடுப்பதற்கு அன்புடனே வாறாராம்
வாறாராம் ஐயப்பன் வாறாராம்
என்னவரம் வேணுமென்று அள்ளித்தர வாறாராம்
வாறாராம் ஐயப்பன் வாறாராம்

பூஜையிலே கலந்துகிட புண்ணியரு வாறாராம்
வாறாராம் ஐயப்பன் வாறாராம்
பூதகணம் முன்னடக்க புலியேறி வாறாராம்
வாறாராம் ஐயப்பன் வாறாராம்
வில்லெடுத்து தோளில்போட்டு வீரமணி வாறாராம்
வாறாராம் ஐயப்பன் வாறாராம்
கல்லெடுத்த குன்றுதாண்டி கணப்பொழுதே வாறாராம்
வாறாராம் ஐயப்பன் வாறாராம்

தேவாதி தேவருக்கு மூத்தவரு வாறாராம்
வாறாராம் ஐயப்பன் வாறாராம்
தேடினாலும் கிடைக்காத தேவனவர் வாறாராம்
வாறாராம் ஐயப்பன் வாறாராம்
கற்பூர தீபத்திலே கலந்துக்கவே வாறாராம்
வாறாராம் ஐயப்பன் வாறாராம்
காந்தமலை ஜோதி நம்ம கண்களுக்குள் வாறாராம்
வாறாராம் ஐயப்பன் வாறாராம்

------------------------------------------------------------
http://kiruththiyam.blogspot.com/2009/12/blog-post.html

0 comments:

  ©Raka - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo