மருத்துவம்

மருத்துவம் மூலிகை


  • # இருமல் (21)
  • # வாதம் (17)
  • # மலச்சிக்கல் (15)
  • # காச்சல் (14)
  • # சொறிசிரங்கு (13)
  • # தலைவலி (13)
  • # மாதவிடாய் (13)
  • # சர்கரைநோய் (11)
  • # சளி (11)
  • # மூலம் (11)
  • # கண்வலி (10)
  • # கபம் (10)
  • # குஸ்டம் (10)
  • # தோல்நோய் (10)
  • # வயிற்று நோய் (10)
  • # வயிற்றுப்போக்கு (10)
  • # வாயுத்தொல்லை (10)
  • # ஆண்மைநீடிக்க (9)
  • # ஆஸ்த்மா (9)
  • # காமாலை (9)
  • # சீதபேதி (9)
  • # பல்வலி (9)
  • # பித்தம் (9)
  • # வயிற்றுப்புண் (9)
  • # வாந்திபேதி (9)
  • # காதுவலி (8)
  • # குடல்புண் (8)
  • # சுரம் (8)
  • # வீக்கம்குறைக்க (8)
  • # சிறுநீரகநோய் (7)
  • # புண் (7)
  • # மூட்டுவலி (7)
  • # வெள்ளை. (7)
  • # உடல்பருமன் (6)
  • # கரப்பான் (6)
  • # காமம் பெருக்கி (6)
  • # தாதுவிருத்தி (6)
  • # படை (6)
  • # பாண்டு (6)
  • # பித்தம்தணிக்க (6)
  • # மாந்தம் (6)
  • # விஷக்கடி (6)
  • # கல்லீரல் பழுது (5)
  • # நமச்சல் (5)
  • # உட்சூடு (5)
  • # கழிச்சல் (5)
  • # ஜன்னி (5)
  • # நெஞ்சுவலி (5)
  • # பசிதூண்டும் (5)
  • # பயித்தியம் (5)
  • # பாம்புக்கடி (5)
  • # பால்வினை நோய் (5)
  • # பாஷாணங்களின் வீறை அடக்கும் (5)
  • # பெரும்பாடு (5)
  • # ரத்தஅழுத்தம் குறைய (5)
  • # இடுப்புவலி (4)
  • # இரைப்பு நோய் (4)
  • # எரிபுண் (4)
  • # சூட்டுநோய் (4)
  • # நீர்அடைப்பு (4)
  • # நீர்கடுப்பு (4)
  • # முடிவளர (4)
  • # ஆசனக்கடுப்பு (3)
  • # இரத்த அழுத்தம். (3)
  • # இளநரை (3)
  • # எலும்புருக்கி (3)
  • # கண்மை (3)
  • # கால்ஆணி (3)
  • # கிருமிநாசினி (3)
  • # கேன்ஸர் (3)
  • # தேமல் (3)
  • # தேள்கடி. (3)
  • # நகச்சுற்று (3)
  • # நீர்வேட்கை அடக்க (3)
  • # பால்சுரப்பைஅதிகரிக்க (3)
  • # பெண் வயதுக்கு வர. (3)
  • # பொருமல் (3)
  • # முடிஉதிர்தல் (3)
  • # சுகப்பிரசவம் ஆக (2)
  • # இரத்தபேதி (2)
  • # உடல் பலவீனம். (2)
  • # எலும்புகூட (2)
  • # கண்படலம் (2)
  • # கருப்பைகுற்றம் (2)
  • # கழுத்துவலி (2)
  • # காலரா (2)
  • # குன்மம் (2)
  • # குமட்டல்நிற்க (2)
  • # சுவையுணர்வு ஒழுங்கு படுத்த (2)
  • # செரிப்பு (2)
  • # துடைவாழை (2)
  • # பில்லிசூனியம் (2)
  • # பீனிசம் (2)
  • # பேய்குணம் (2)
  • # பொடுகு (2)
  • # மலடுநீங்க (2)
  • # மலேரியா (2)
  • # மாலைக்கண் (2)
  • # முகப்பரு (2)
  • # வசியம் செய்ய (2)
  • # வயிற்றுப்பூச்சி (2)
  • # வாய்புண் (2)
  • # விக்கல் (2)
  • # விதைவீக்கம். (2)
  • # வெப்பம் குறைக்க (2)
  • # அஜீரணம் (1)
  • # அதிகவியர்வை (1)
  • # ஆண்குழந்தை பிறக்க (1)
  • # இரத்தமூலம் (1)
  • # ஈரல்வீக்கம் (1)
  • # உதடு வெடிப்பு (1)
  • # உறக்கமின்மை (1)
  • # உள் மூலம் (1)
  • # ஊதுகாமாலை (1)
  • # ஊறல் (1)
  • # கக்குவான் (1)
  • # கண் சதைவளர்ச்சி (1)
  • # கண்டமாலை (1)
  • # கல்லடைப்பு (1)
  • # குடல் தள்ளல் (1)
  • # குதிங்கால்வலி (1)
  • # குரல்வளமாக (1)
  • # குளிர்ச்சி (1)
  • # கோழையகற்றி (1)
  • # சரீரத்துடிப்பு (1)
  • # சுக பேதி (1)
  • # ஞாபகசத்தி (1)
  • # தொந்தியைக்கரைக்க (1)
  • # நமச்சல் (1)
  • # நரம்புப்பிடிப்பு (1)
  • # நாய்கடி (1)
  • # பசிக்காமல் இருக்க (1)
  • # படுக்கைபுண் (1)
  • # பார்வை மந்தம் (1)
  • # பிரசவபெண்களின் நஞ்சுக்கொடி (1)
  • # புத்திரபாக்கியம் (1)
  • # பேதி நிற்க (1)
  • # பேதிஆக (1)
  • # மதுமேகம் (1)
  • # மயக்கம் (1)
  • # மார்புச்சளி (1)
  • # முதுகுவலி (1)
  • # மூத்திரப்பாதை (1)
  • # மேகநோய் (1)
  • # வயிற்றுக் கடுப்பு (1)
  • # வாய்நாற்றம் (1)
  • # விப்புருதி (1)
  • # வெட்டுக் காயம் (1)
  • # வெளி மூலம் (1)
  • #நரம்புத்தளர்ச்சி (1)
  • . எலுமிச்சைப்புல். (1)
  • . இண்டு. (1)
  • .வேலிப்பருத்தி. (1)
  • 87.குண்டுமணியிலை. (1)
  • 88. ஆற்றுத்தும்மட்டி. (1)
  • 89. விராலி. (1)
  • 90.எலுமிச்சை. (1)
  • 91. அத்தி. (1)
  • 92. நல்ல வேளை. (1)
  • 93. இலந்தை. (1)
  • அக்கரகாரம். (1)
  • அந்தரத்தாமரை. (1)
  • அம்மான்பச்சரிசி (1)
  • அரிவாள்மனைப் பூண்டு. (1)
  • அருவதா. (1)
  • அழிஞ்சில். (1)
  • அஸ்வகந்தா. (1)
  • ஆடாதோடை (1)
  • ஆவாரை. (1)
  • இசப்கோல். (1)
  • இன்சுலின் செடி. (1)
  • ஊமத்தை (1)
  • எட்டி மரம். (1)
  • எருக்கன் (1)
  • எழுத்தாணிப் பூண்டு. (1)
  • ஐயம்பனா (1)
  • கட்டுக்கொடி. (1)
  • கண்டங்கத்திரி. (1)
  • கண்வலிக்கிழங்கு (1)
  • கரிசலாங்கண்ணி. (1)
  • கருவேல். (1)
  • கறிவேம்பு. (1)
  • கற்பூரவல்லி (1)
  • கல்யாண முருங்கை. (1)
  • களா (1)
  • கள்ளிமுளையான். (1)
  • காட்டாமணக்கு. (1)
  • கார்போகரிசி (1)
  • கீழாநெல்லி (1)
  • குப்பைமேனி (1)
  • குமரி (1)
  • கேன்சர் செடி. (1)
  • கொடிப்பசலை. (1)
  • கொன்றை. (1)
  • கொள்ளுக்காய் வேளை. (1)
  • கோடம்புளி. (1)
  • கோவை. (1)
  • சங்கிலை. (1)
  • சங்குப்பூ. (1)
  • சதாவேரி (1)
  • சந்தனம். (1)
  • சர்கரைத்துளசி. (1)
  • சர்க்கரைக்கொல்லி (1)
  • சர்ப்பகந்தி. (1)
  • சிறியாநங்கை (1)
  • சிறுபீளை (1)
  • சிலந்தி நாயகம். (1)
  • சீந்தில் கொடி. (1)
  • சீமைஅகத்தி. (1)
  • சென்னா. (1)
  • செம்பருத்தி (1)
  • செம்பருத்திப்பூ. (1)
  • செம்மொழி மாநாடு (1)
  • செம்மொழி மாநாடு. (1)
  • ஜாதிக்காய் (1)
  • திருநீற்றுப்பச்சை. (1)
  • துத்தி (1)
  • தும்பை. (1)
  • துளசி (1)
  • தூதுவேளை (1)
  • தொட்டால் சிணுங்கி. (1)
  • நந்தியாவட்டை. (1)
  • நன்னாரி (1)
  • நாயுருவி. (1)
  • நாவல் (1)
  • நித்தியகல்யாணி. (1)
  • நீர் முள்ளி. (1)
  • நுணா. (1)
  • நெருஞ்சில். (1)
  • நெல்லி. (1)
  • பச்செளலி (1)
  • பதிமுகம் (1)
  • பனை. (1)
  • பப்பாளி. (1)
  • பாவட்டை. (1)
  • பிரண்டை (1)
  • பிரமந்தண்டு. (1)
  • புங்கமரம். (1)
  • பூனைக்காலி (1)
  • பூவரசு. (1)
  • பேய்மிரட்டி. (1)
  • மகிழமரம் (1)
  • மருதாணி. (1)
  • மருந்துக்கூர்க்கன். (1)
  • மிளகு. (1)
  • முடக்கற்றான். (1)
  • முருங்கை. (1)
  • ரோஸ்மேரி. (1)
  • லாவண்டர். (1)
  • வசம்பு. (1)
  • வல்லாரை. (1)
  • வாதநாராயணன். (1)
  • வாலுழுவை. (1)
  • வில்வம். (1)
  • வெட்டி வேர் (1)
  • வெற்றிலை. (1)
  • ஒற்றைத் தலைவலி


    உலகில் 70 சதவீதம் பெண்கள் ஒற்றைத் தலைவலியால் அவதிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். முறையான வழிகாட்டுதல்களும் சிகிச்சைகளும் இல்லாததால், அல்லது இருந்தும் எடுத்துக் கொள்ளாததால் பலர் தலைவலியை முற்றவிட்டு, பக்கவாதம் உட்பட வேறு சில ஆபத்தான நோய்களுக்கும் ஆட்படுகிறார்கள். சிலருக்குக் கண்பார்வை கூட மங்கிப் போகக்கூடும்.

    அறிகுறிகள்:
    தலைவலி விட்டுவிட்டு ஒரே பக்கத்தில் வரும். வலி கடுமையாக இல்லாவிட்டாலும் தொடர்ச்சியாக செய்ய வேண்டிய வேலைகளை பாதிக்கும். தலையின் இரண்டு பக்கங்களில் அல்லது ஒரே பக்கத்தில் தோன்றி இன்னொரு பக்கத்திற்குப் பரவும். விண்விண் என அதிர்வோடு, பிசைவது போன்று, கண்ணையும் நெற்றியையும் அமுக்குவது போன்ற உணர்வுகளும், தலையில் ஏதோ ஒன்று கிளறுவது போனற உணர்வும் இருக்கும். வெளிச்சத்தை உற்றுப் பார்க்க முடியாது. சத்தம் கேட்டால் மிரட்சி உண்டாகும். திடுக்கிட வேண்டியிருக்கும். வாசனைகளை முகர்ந்தால் உடனடியாக அதிக உணர்ச்சி வசப்படும் நிலை. அதிகப்பசி, பசியின்மை, பார்வை மங்குதல், மூக்கடைப்பு, அடிவயிற்றில் வலி, சிறுநீர் அதிகரித்தல், மற்றும் முகச் சோகையால் தோலின் நிறம் மங்குதல் ஆகியவை காணப்படும்.படிக்கட்டில் ஏறும்போது, வீட்டு வேலைகளைச் செய்யும் போது வலி கூடும். கூடவே குமட்டலும் வாந்தியும் வரும்.

    வகைகள்
    ஒற்றைத் தலைவலி இரண்டு முக்கிய வகைப்படும்

    1. கிளாசிக் மைக்ரேன் (Classic Migraine)

    தலைவலியின்போது நரம்பு தொடர்பான அறிகுறிகள் தென்படுவதை (avra) இது குறிக்கும். அதாவது தலைவலி வருவதற்கான அறிகுறிகள் இல்லாமல், நோய் வருவது போன்ற உணர்வு மட்டும் எழுவது.

    தலையில் நெற்றிப்பொட்டில், பொட்டெலும்பு, பின்பக்கத் தலை போன்ற இடங்களில் இதன் வலி தெரியும். கண்களிலும், தாடையிலும், முதுகிலும்கூட வலி தெரியலாம். பேச்சு குழறுதல், கவனமின்மை, மனநோய் போன்றவை இதனால் வர வாய்ப்புண்டு. தற்காலிகமாக பார்வையில் கோளாறு, உணர்வில் கோளாறு, கண்களுக்குள் மின்னல் போன்ற ஒளிக்கீற்று வந்து மறைதல் போன்றவை ஏற்படும்.

    நெற்றிப் பொட்டிலும், கண்ணிலும் வலி ஏற்பட்டு, வலி அதிகரிப்பதால் சிலர் தாங்க முடியாமல் தவிப்பார்கள். சிலர் எதிலாவது தலையை முட்டிக்கொண்டு அழுவது கூட உண்டு.

    கை, கால்களைப் பலவீனப்படுத்தும் இந்தவலி இரண்டு நாட்களுக்கு ஒருமுறைகூட வரலாம்.

    பொதுவான மைக்ரேன்: (Common migraine)

    மனநிலையில் பாதிப்பு, அடிக்கடி மூடு மாறுதல், சோர்வுறுதல், மனப்பதட்டம் ஆகியவற்றால் இத்தலைவலி ஏற்படும். இது தொடர்ந்து மூன்று நான்கு நாட்களுக்கு இருந்தால் குமட்டல், வாந்தி, வயிற்றுப் போக்கு, சிறுநீர் அதிகரித்தல் ஆகியன உண்டாகும்.

    ஒற்றைத் தலைவலி எதனால் வருகிறது?

    மூளை இயங்குவதற்குத் தேவைப்படும் செரடோனின் என்ற வேதியியல் திரவத்தின் அளவு குறையும் போதுதான் இந்த ஒற்றைத் தலைவலிகள் ஏற்படுகின்றன.புதிய கண்டு பிடிப்புகளின்படி, மூளையைச் சேர்ந்த சில செல்களில் ஏற்பட்டுள்ள பரம்பரைக் குறைபாடுகள் தான் காரணம் (gentic disorder) என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். மூளைக்குச் செல்லும் இரத்தக் குழாய்கள் திடீரென சுருங்குவதால் இரத்தக்குழாய் சுவர்களில் உண்டாகும் அழுத்தம் காரணமாக சுரக்கும் ரசாயனங்களால் மூளை வலியை உணர்கிறது.
    ஒளிப்பட விளக்கம் இங்கே காண்க.

    சிலர் ஒற்றைத் தலைவலி வரப்போவதை முன்பே எதிர்வு கூறுவார்கள், இதற்கு முன்னறிகுறியாக பார்வைப்புலன் தளத்தில் பளிச்சென்ற ஒளிக்கீற்றுக்கள், ஒளிவட்டம், குறுக்கு மறுக்கான ஒளிக்கோடுகள் அல்லது தற்காலிகமான பார்வையிழப்பு போன்றன தோன்றுவதாக கூறுவார்கள். பலருக்கு இந்த ஒளிக்கீற்றுகள்தோன்றாமலே தலைவலி தோன்றுகின்றது.இத்தலையிடி வருபவர்களுக்கு இது திரும்ப திரும்ப வருவதாக காணப்படுகிறது. அத்துடன் போதியளவு உணவு, உறக்கமின்மை, சில உணவுகளில் ஒவ்வாமை, ஏற்றுக்கொள்ளாமை, ஒளியின் அளவு ஹார்மோன்களினால் ஏற்படும் ஒழுங்கீனங்கள் (பெண்களில் மட்டும்) போன்றவை இதைப் பொறிதட்டிவிடும் . மேலும் மனவெழுச்சி (Anxeity), மனவழுத்தம் (stress) ஆகியனவும் காரணமாகலாம்.

    அதிக சூரியவெம்பம், வானிலை அழுத்த மாற்றங்கள், காற்றோட்ட மற்ற புழுக்கமாக அறைகளில் தங்குதல், அடிக்கடி உறங்கும் முறையை மாற்றிக் கொள்ளுதல், வேலையிலும் ஓய்விலும் மாறுதல்களை உண்டாக்கிக் கொள்ளுதல், ஏதாவது ஓரிடத்திற்கு சென்றிருந்த போது தலைவலி வந்திருந்தால், அதே இடத்தில் வேறு ஒரு சூழ்நிலையில் செல்ல நேர்ந்தாலும் தலைவலி வருதல் மதுவகைகள் சில கீரைகள், பாலடைக்கட்டி, தயிர்,வினிகர்,சாக்லேட், ஆடு மற்றும் கோழி போன்றவற்றின் ஈரல், ஈஸ்ட்ரோ ஜென் ஹார்மோன், மிக அதிகமான உறக்கம், உறக்கமின்மை, மிகைபசி, இறைச்சி, தலைவலி அடிபடுதல், உடலின் உட்புற உறுப்புகளில் உண்டாகும் நோய்கள், அதிக மருந்து சாப்பிடுதல், மாதவிலக்கு, கர்ப்பம். மோசோசோடியம் குளுட்டாமேட், கவலை, மனஇறுக்கம், அசதி, வாய்வழி சாப்பிடும் கருத்தடை மாத்திரைகள் ஆகியவை மைக்ரேன் தலைவலியை உண்டாக்குகின்றன.

    ஒற்றைத்தலைவலி பரம்பரை நோயா?
    ஒற்றைத் தலைவலி பரம்பரையாக வரக்கூடியது என்று சொல்லப்படுகிறது. என்றாலும், இது மரபில் உள்ள கோளாறால்தான் என்று திட்டவட்டமாகக் கூற முடியவில்லை. மற்றபடி, கட்டாயம் வரும் என்றும் சொல்லமுடியாது.

    தாக்குண்டவர் துன்பத்தில் துடிக்க, சூழ இருப்பவரின் நோய் நீக்க முடியாத கையாலாகாத நிலை இன்னும் துன்பமானதாகும். சந்தோசமாக இணைந்து வாழும் இருவரில் ஒருவருக்கு இது வந்துவிட்டால், அவ்வுறவே பிரியுமளவுக்கு இந்நோய் பாதிக்கும். பெற்றோர்க்கு தலைவலி வந்துவிட்டால் சிறு பிள்ளைகள் குழப்பமடைந்து கவலைகொள்கின்றார்கள்.

    உணவு¸ வாழ்க்கை முறை மாற்றங்கள்:
    தாக்குதல் ஏற்ப்பட்டபோதான விபரங்கள் - நாள், நேரம், தாக்கின் கடுமைநிலை, கடந்த 24 மணி நேரத்தில் உட்கொண்ட உணவு போன்றவற்றை குறித்து வைத்துக்கொண்டால், தாக்குதலுக்கான தனிப்பட்டவருக்குரிய காரணிகளைக் கண்டுகொள்ளலாம். பின்னர் தெரிந்த காரணிகளைத் தவிர்த்துக் கொள்ளவேண்டும்.

    வராமல் காக்கும் வழிகள்:

    அறிகுறிகளை வைத்தே ஒற்றைத் தலைவலியை நெருங்க விடாமல் செய்ய முடியும். உங்களுக்கு உதவ சிலவழிகள்.

    1. உணவுமுறையில் மாற்றம்:

    சரியாக உணவு உண்ணாததும், ஒத்துக்கொள்ளாத சில உணவுவகைகளை உண்பதும், அளவுக்கு அதிகமாக உண்பதும் ஒற்றைத் தலைவலிக்கு முக்கியக் காரணங்களாகும். இதனால் நல்ல ஆரோக்கியமான உணவை, வேளை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். பால், காய்கறி வகைகள் நல்லது. இறைச்சி வகைகளைத் தவிர்த்தல் மிக நல்லது.சீனியளவு கூடிய உணவுகளைத் தவிர்ப்பதோடு குருதி வெல்லவளவு அதிகம் மாறுபடாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். போதியளவு நீர் குடிக்கவேண்டும்.

    2. முறையான தூக்கம்:

    தூக்கமில்லாமல் அவதிப்படுபவர்கள் காலையில் எழுந்ததும் தலைவலிப்பதாகச் சொல்வது வாடிக்கையாகிவிட்டது. அதனால் நல்ல தூக்கம் வரச்செய்யும் வழி முறைகளைத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக தூக்கம் வரும்வரை படிப்பது.

    3. உடற்பயிற்சி:

    உடற்பயிற்சிதான் உடலில் உள்ள வேதிப்பொருட்களை உற்பத்தி செய்யும் தன்மை கொண்டது. இதனால் மூளை நன்கு செயல்படத் தொடங்கும். முறையான தொடர் உடற்பயிற்சி இருந்தாலே ஒற்றைத் தலைவலி அண்டாது. மன, உடலமைதிக்கான தியானப்பயிற்சியும் செய்யவேண்டும். தொடர்ச்சியான, திரும்பத் திரும்ப ஒன்றையே செய்யும் வேலைகளிலின்போது ஒழுங்கான சிறு ஓய்வுகள் எடுக்கவேண்டும்

    4. சுற்றுச்சூழலில் கவனம்:

    அதிக சூரிய வெப்பம் படுதல், வானிலை மாற்றங்கள், காற்றோட்டமில்லாத புழுக்கமாக சூழலில் வாழ்தல் ஆகிய சுற்றுச்சுழல்களாலும் சிலருக்கு தலைவலி வரும். அதனால் இவற்றைத் தவிர்த்தல் வேண்டும். காற்றோட்டமுள்ள இடத்தில் தூங்குவதும், மலச்சிக்கல் வராமல் பார்த்துக் கொள்வதும் மிக அவசியம்.

    5. மது, புகை, காபி தவிர்த்தல்

    மது அருந்துதல், புகை பிடித்தல், காபி குடித்தல் சிலருக்கு தலைவலியை உண்டாக்கும். இவை முற்றிலும் நிறுத்தப்படல் வேண்டும். சிலருக்குக் காப்பி சாப்பிட்டால் தலைவலி நிற்பது போல் தெரியும். ஆனால் அது நிரந்தரமற்றதாகும்.

    6. கவலை, சோர்வு, மனஅழுத்தம் வேண்டாம்.

    அதிகமாகக் கவலைப்படுபவர்கள், அடிக்கடி சோர்வு அடைபவர்கள், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிக்கடி ஒற்றைத் தலைவலி வரும். இவற்றில் இருந்து விடுபட, மற்றவர்களுடன் நட்பாகப் பேசிப் பழக வேண்டும். மனம் விட்டுப் பேசி குறைகளைக் களைய வேண்டும்.

    7. தடுப்புமுறைகள்:

    ஒற்றைத்தலைவலி எதனால் வந்தது என்பதை அறிந்துகொண்டு அவற்றைத் தவிர்த்தலே மிக நல்லது. உதாரணமாக, ஒரு நிகழ்ச்சிக்குப் போனால் தலைவலி வந்திருக்கும். திரும்பவும் அந்த நிகழ்ச்சியைக் காணாது தவிர்த்தல். சில பொருட்கள் அலர்ஜியாகி தலைவலி கொடுத்திருக்கும். அவற்றைத் தவிர்த்து முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ளலாம்.

    8. மருந்துகள்:

    அதிக அளவில் மருந்து எடுத்துக் கொள்வதும் சிலருக்குத் தலைவலி வரக் காரணமாக இருக்கும். இதனால் மருத்துவர் ஆலோசனைப்படி மட்டுமே மருந்து எடுத்துக்கொள்ளவேண்டும். நோயின் தன்மை, நோயின் தீவிரம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு உடனடி சிகிச்சை தேவைப்படும் நோயாளிக்கு சிகிச்சையளிக்க வேண்டும். நரம்பியல் நிபுணரை ஆலோசிப்பது நல்லது.

    மேலும் விபரம் அறிய http://yourtotalhealth.ivillage.com/migraines

    தண்ணீர் மரு(க)த்துவம்






    நம் உலகம் 70% நீரால் ஆனது. தண்னீரில் தால் முதலில் உயிர் தோன்றியது. நம் உடலின் பெரும் பகுதியும் நீரால் ஆனது தான். Dr. F. Batmaghelidj போன்றவர்கள் பல வருடம் ஆய்ந்து கண்டுபிடித்த விஷயம், நோய் எனப்படுவதே தாகம் தான் என்பதே.உடலிலே தண்ணீரின் அளவு குறையும் போது தான் நோயாக உணர்கிறோம். எனவே தேவைப்படும் தண்ணீரை குடித்தாலே பல நோய்கள் பறந்து விடுமாம்.

    நம் உடலின் திசுக்கள் இயங்க 75% தண்ணீர்,இரத்தம் சத்துப்பொருட்களை உடலின் பாகங்களுக்கு கொண்டு செல்ல 82% தண்ணீர்,நுரை யீரல் தேவையான பிராண வாயுவை வழங்க 90% தண்ணீர் ,ஏன் எலும்புகளில் கூட 25 % தண்ணீர் தேவையாய் இருக்கிறது. எனவே நீண்ட நாள் நோயற்று வாழ் நிறையத் தண்ணீர் பருகுங்கள்.
    தண்ணீர் நெஞ்செரிச்சலை தடுக்கிறது: ஜீரண மண்டலத்தின் மேல் பகுதியில் ஏற்படும் நீர்சத்து குறைவே நெஞ்செரிச்சலை உருவாக்குகிறது. கவனியாது விட்டால் அது தொடர்பான பல நோய்களை அறிமுகப்படுத்தும்.Antaacid மாத்திரைகள் வேதனையை குறைக்குமே ஒழிய தேவையான தண்ணீர் அருந்தி வருவது தான் குணமடையும் வழி
    தண்ணீர் மூட்டு வலிக்கு மருந்து்: மூட்டு இணைப்புகளில் உண்டாகும் தண்ணீர் பற்றாக்குறைதான் மூட்டு வலிக்கு காரணம். pain-killers மாத்திரைகள் உபயோகிப்பது வலி நிவாரணம் தருமே ஒழிய நோயை குணமாக்காது. சிறிய அளவு உப்பு சத்துடன் கூடிய தண்ணீர் அதிகம் அருந்தினால் மூட்டு வலி குணமாகும்
    தண்ணீர் முதுகு வேதனையைத் தடுக்கும்:முதுகெலும்புத் தொகுதியில் உடலின் எடையைத் தாங்குவதில் தண்ணீர் ஒரு மெத்தை போல் செயல் படுகிறது.இந்த எலும்புகளில் நீர் சத்து குறையும் போது இடுப்பு வலி ,முதுகு வலி கழுத்து வலி ஏற்படுகிறது.சரியான அளவு தண்ணீர் அருந்துவதே இவ்வலிகளிலிருந்து விடுதலை தரும்

    தண்ணீர் இதய நோயிலிருந்து காக்கிறது:இதயம் மற்றும் நுரை ஈரலில் உண்டாகும் தண்ணீர் பற்றாக்குறையே angina எனும் நெஞ்சு வலிக்குக் காரணம்.அதிகப்படியான் தண்ணீர் அருந்துவது. இன்நோயைக் குணமாக்குகிறது.
    தண்ணீர் ஒற்றைத் தலைவலியை குணமாக்குகிறது:
    மூளை மற்றும் கண்களுக்குத் தேவையான தண்ணீர் அளவு குறைவதால் தான் ஒற்றைத்தலைவலி உண்டாகிறது
    தண்ணீர் பெருங்குடல் அழற்சியை போக்குகிறது:உடலில் தண்ணீர் வரண்டு போகும்போது செரிக்கப்பட்ட உணவிலிருந்து குடல் தண்ணீரை முழுமையாக உறுஞ்சி விடுவதால் மலம் இறுகி குடலில் உராய்ந்து புண்ணாக்குகிறது. அடி வயிற்றில் வேதனை உண்டாக்குகிறது.இதன் தொடர்ச்சியே இரத்தக்கசிவு ,மூல முளை ,குடல் புற்று போன்றவை.போதுமான தண்ணீர் அருந்துவது மட்டுமே இதனை குணமாக்கும்
    தண்ணீரும் உப்பும் ஆஸ்த்மாவை குணப்படுத்துகிறது: உடம்பில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க உடல் எடுக்கும் நடவடிக்கை தான் ஆஸ்த்மாவிற்குக் காரணம். உடலின் தண்ணீர் காற்றில் ஆவியாகி போய்விடாமல் காற்றுப் பாதைகளில் உடல் தடை ஏற்படுத்துவதே ஆஸ்த்மாவிற்குக் காரணம்.அதிக அளவு தண்ணீர் சிறிது உப்புச்சத்துடன் எடுத்துக்கொள்வது நுரை ஈரலிலிரு்ந்து சளியை வெளியேற்றி பிராணவாயு தடங்கலின்றி கிடைக்கச்செய்யும்
    தண்ணீர் இரத்தக் கொதிப்பை தடுக்கிறது: போதுமான தண்ணீரின்றி உடலில் உண்டாகும் வறட்சி தான் உயர் இரத்த அழுத்தத்திற்குக் காரணம். தண்ணீரும் சிறிது உப்பும் அருந்தி வருவது இரத்தக்கொதிப்பை குணமாக்குகிறது.இதை கவனியாது விட்டால் ஹார்ட் அட்டாக்,ஸ்ட்ரோக்,பக்கவாதம், மூளைப் பாதிப்பு,அல்ஷீமர்போன்ற ஆபத்துகளில் கொண்டு சேர்க்கும்
    நீரிவு நோய்க்குக் காரணம் தண்ணீர் பற்றாக்குறையே:
    தண்ணீர் அதிக கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துகிறது:
    தண்ணீர் உடலில் சேரும் விஷத்தை வெளியேற்றுகிறது:
    ---------------------------------------------------------------------------------------------------
    தினமும் அதிகாலை-யில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது ஜப்பானில் இப்போது பிரபலமாகி வருகிறது.

    கீழே கொடுக்கப்பட்டிருக்கும் மிகப் பழைய கடுமையான வியாதிகளை மட்டுமல்ல நவீன கால நோய்களைக் கூட இந்த நீர் மருத்துவம் மூலம் 100% வெற்றிகரமாக குணப்படுத்த முடியுமென ஜப்பானிய மருத்துவ சம்மேளனம் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.

    தலை வலி , உடல் வலி, இதய நோய்கள், ஆத்திரட்டிஸ் எனப்படும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய் , வேகமான இதயத்துடிப்பு, எபிலெப்ஸி எனப்படும் வலிப்பு நோய், அளவுக்கதிகமான உடல் பருமன், ஆஸ்துமா, காச நோய், மூளைக்காய்ச்சல், சிறு நீரகம் மற்றும் சிறு நீர் வியாதிகள் , வாந்தி, பேதி, வாய்வுக் கோளாறுகள், மூல வியாதி, சலரோகம் அல்லது சர்க்கரை வியாதி, சகலவிதமான கண் நோய்கள், கர்ப்பப்பை புற்று நோய், ஒழுங்கீனமான மாதவிடாய் கோளாறுகள், காது, மூக்குத், தொண்டை கோளாறுகள் போன்றவற்றுக்கு இந்த நீர் மருத்துவம் 100% பயனளிக்கின்றது என இம் மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

    மருத்துவ முறை
    1. காலையில் தூங்கி எழுந்ததும் , பல் துலக்கும் முன்பே 4 x 160ml டம்ளர் (கிளாஸ் ) தண்ணீர் அருந்துங்கள்.
    2. பல் துலக்கி வாய் அலம்பிய பின் 45 நிமிஷங்களுக்கு உணவோ, நீராகாரம் எதுவாயினும் உட்கொள்ளக் கூடாது.
    3. 45 நிமிடங்களுக்குப் பின் வழக்கமான உங்கள் உணவை உட்கொள்ளலாம்.
    4. காலை உணவின் பின் 15 நிமிஷங்களுக்கும், மதிய உணவு, இரவு உணவின் போதும 2 மணி நேரங்களுக்கு எதுவும் உட்கொள்ள வேண்டாம். (After 15 minutes of breakfast, lunch and dinner do not eat or drink anything for 2 hours)
    5. முதியோர் அல்லது நோயாளிகள் அல்லது 4 டம்ளர் நீரை எடுத்த எடுப்பிலேயே அருந்த முடியாதவர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நீர் உட்கொண்டு நாளடைவில் 4 டம்ளர் அளவு நீர் அருந்த பழகலாம்.
    மேற்குறிப்பிட்ட முறையை பின்பற்றும் நோயாளிகள் நலம்பெறுவது உறுதி. எந்த நோய்க்கு எத்தனை நாட்கள் இந்த முறையை பின்பற்ற வேண்டும் என்ற விபரங்களை கீழே காணலாம். இந்த வழியில் பின்பற்றினால் இந்நோய்கள் முற்றிலும் குணமாகும் அல்லது தணியும் என்று ஜப்பானிய மருத்துவர்கள் கூறுகின்றனர்.
    1. உயர் இரத்த அழுத்தம் - 30 நாட்கள்
    2. வாய்வுக் கோளாறுகள் - 10 நாட்கள்
    3. சலரோகம் அல்லது சர்க்கரை வியாதி - 30 நாட்கள்
    4. மலச்சிக்கல் (கான்ஸிடிபேஷண்ட்) - 10 நாட்கள்
    5. புற்றுநோய் - 180 நாட்கள்
    6. காச நோய் - 90 நாட்கள்.
    7. ஆத்திரட்டிஸ் நோயாளிகள் முதல் வாரம் 3 நாட்களும், இரண்டாவது வாரத்திலிருந்து தினமும் இம் முறையினைப் பின்பற்ற வேண்டும்.
    பக்க விளைவுகள் எதுவுமில்லாத மருத்துவமுறை இது, எனினும் நீர் அதிகமாக உட்கொள்வதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வரும். ஆனாலும் இந்த முறையை நமது அன்றாட கடமைகளில் ஒன்றாகப் பின்பற்றுவது மிகவும் நன்மை தரும் என்றே சொல்ல வேண்டும். நீர் அருந்தி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருங்கள். "நீரின்றி அமையாது உலகு" என வள்ளுவர் சொன்னதன் பொருள் இது தானோ?

    கொஞ்சம் இருங்கள் இரண்டு கப் தண்ணீர் குடித்துவிட்டு வந்து விடுகிறேன்.

    மேலும் விபரங்களுக்கு:
    www.shirleys-wellness-cafe.com
    www.watercure.com/wondersofwater

    தேங்காய் - மகத்துவம்



    உணவில் சுவையும் மணமும் ஊட்டும் தேங்காய் சிறந்த மருந்தாகவும் பயன் படுகிறது.
    தேங்காயில் உள்ள சத்துக்கள் என்ன?
    தேங்காயில் புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என அனைத்தும் உள்ளன.
    தேங்காயால் உடல் வலிமை பெறும். தீ புண்களை ஆற்றும். தேங்காய் எண்ணெய் கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது. தேமல்,படை,சிரங்கு நீக்கும்.
    தோலை புதுப்பித்து தோல் சுருக்கங்கள் அகற்றும்.

    இதய நோயாளிகள் தேங்காய் சாப்பிடலாம்
    தேங்காயில் உள்ள fatty Acid உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது, உடல் எடையைய் குறைக்கிறது என ஓர் ஆய்வு கூறுகிறது
    "தேங்காய் எண்ணெயில் கொழுப்பு உள்ளது, சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகளுக்கு நல்லதல்ல" என்ற கருத்தை இது பொய்யாக்குகிறது. தேங்காய் எண்ணெயில் "medium chain Fatty Acid" அதிகமாக உள்ளது.உடலில் உள்ள கொழுப்பு சத்தை குறைக்கும் Capric Acid, மற்றும் 'Lauric Acid' ஆகிய இரு அமிலங்களும் போதிய அளவு உள்ளது. இதனால் தினமும் தேங்காய் எண்ணெய் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறையுமாம். அதோடு இந்த அமிலங்கள் வைரஸ் பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்க்க வல்லது.நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.தேங்காயில் உள்ள Mono Laurin வைரஸ்களின் செல் சுவர்களை கரைக்கிறது.தேங்காய் சர்க்கரை நோயால் ஏற்படும் தளர்ச்சியை போக்கும்.
    இயற்கையான தேங்காய் எண்னெயால் இதயத்துக்கு எந்தக் கெடுதியும் இல்லை.ஆனால் தேங்காய் எண்னெய் கெட்டுப் போகாமலிருக்க பதப்படுத்தும் போது அதாவது hydrogenation என்னும் முறையில் ஒரு hydrogen மூலக்கூறை செயற்கையாக தேங்காய் எண்ணெயின் மூலக்கூறுடன் சேர்க்கிறார்கள்.இது தான் கெடுதல். இவ்வாறு செய்யப்படும் எல்லா எண்ணெயும் கெடுதல் தான் எனவே தூய இயற்கையான வடிவில் தேங்காய் எண்ணெய் உபயோகிப்பது சிறந்தது.

    எய்ட்ஸ் நோயாளிகளுக்கு நல்லது:
    எய்ட்ஸ் நோயாளிகளுக்கு வைரஸ் பாதிப்பை குறைக்கிறது. தேங்காயில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம். உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்கு பெரிதும் உதவுகிறது.
    ஆண்மைப் பெருக்கி:
    முற்றிய தேங்காய் ஆண்மையை அதிகரிக்கும். அதில் உள்ள வைட்டமின் இ முதுமையைத் தள்ளிப் போடும் தைராய்டு சுரப்பியை ஊக்குவிக்கிறது. குறை தைராய்டு நோய்க்கு தேங்காய் எண்ணெய் நல்லது.

    கர்ப்பிணிகளுக்கு நல்லது:
    தேங்காய்ப் பூவை சாறாக்கி கர்ப்பிணிகளுக்குக் கொடுத்தால் குழந்தை சிவப்பாகப் பிறக்குமாம்
    இளநீரின் மருத்துவக் குணங்கள் என்ன?

    இளநீர் இயற்கை மனிதனுக்கு தந்த வரம் . சுத்தமான சுவையான பானம். பல்வேறு வகைகள் உள்ளன. எல்லா வகையிலும் சிறந்தது தான்.
    • உடல் வெப்பத்தைத் தணித்து குளிர்ச்சி அளிக்கும்
    • இரத்தத்தில் தேவையான தாது உப்புக்களைச்சேர்த்து, உடலின் செயல்திறனை ஊக்குவிக்கிறது.
    • அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும் .
    • இருதயம், கல்லீரல், சிறுநீரகம், கண்கள் மற்றும் இரத்த நாளங்களில் உஷ்ணத்தை கட்டுப்படுத்துகிறது.
    • ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
    • சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். விந்துவை அதிகரிக்கும்.
    • மேக நோய்களைக் குணப்படுத்தும்.
    • உடலில் ஏற்படும் நீர் - உப்புப் பற்றாக்குறையை இளநீர் சரி செய்கிறது.
    • இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது.
    • இளநீரின் உப்புத் தன்மை வழுவழுப்புத்தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்ல சத்து.
    • ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருள்கள் இளநீரில் உள்ளன.
    • அவசர நிலையில் நோயாளிகளுக்கு இளநீரை சிரை மூலம் செலுத்தலாம்.
    • பேதி, மயக்கம், அசதி ஏற்படும்போது டாக்டரிடம் செல்வதற்குமுன் 2 டம்ளர் இளநீர் சாப்பிடுவது என்பது1 பாட்டில் சலைன் வாட்டர் ஏற்றுவதற்குச்சமமாகும்.
    • இளநீர் மிக மிகச் சுத்தமானது.
    • ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப் பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறது.
    • ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொருள்களை அகற்ற இளநீர் பயன்படுகிறது.
    • இளநீரிலிருந்து கண் நோய்களுக்குச் சிறந்த மருந்தான . "ஜெல்' என்ற பொருள் தயாரிக்கப்படுகிறது
    • இளநீரில் அதிக அளவில் சத்துகள் உள்ளன. சர்க்கரைச் சத்துடன் தாதுப் பொருள்களும் நிறைந்துள்ளன. பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன.
    • இளநீரில் தாய்ப்பாலுக்கு ஈடான புரதச்சத்து உள்ளது.
    • மூல நோயாளிகள், நாட்பட்ட சீதபேதி, ரத்த பேதி, கருப்பை ரணம், குருதிப் போக்குக் காரணமாக வரும் இரத்த சோகை, உற்சாகமின்மை ஆகியவற்றிற்கு இளநீர் மிகச்சிறந்த நிவாரணம் அளிக்கின்றது.
    • கடும் வெயில் காரணம் அப்போது வியர்வை ஏராளமாக வெளியேறுவதால் நீர் கடுப்பு உண்டாகும். அப்போது 2 டம்ளர் இளநீர் பருகிட 1 மணி நேரத்திற்குள் சிறுநீர் தாராளமாகப் போகும். சிறுநீர்த் பாதையில் புண் இருந்தால் PUS CELLS அதிகமாகி எரிச்சல், கடுப்பு உண்டாகும். அதற்கு இளநீரில் வெந்தயம் அரைக்கால் ஸ்பூன் தூள் செய்து கலந்து பருகி வர ஐந்து நாளில் சரியாகும்.
    • மாத விலக்கின் போது ஏற்படும் அடிவயிற்று வலிக்கு இளநீரே மருந்து.
    • கடும் காய்ச்சலுக்கு இளநீர் 8 மணிக்கொரு முறை பருகிவரத் தணியும்.
    • பேதி, சீதபேதி, இரத்த பேதியின் போது மற்ற உணவுகள தவிர்த்து உடனே இளநீர் பருகிவர, உடல் அசதி, மயக்கம் மாறும்.
    • சிறுநீரகக் கல், சதையடைப்பு URINARYINFECTION போன்ற கோளாறுகளுக்கு இளநீர் நல்ல மருந்து
    • கூல்டிரிங்க்ஸ், ஐஸ்கிரீம்ஆகியவற்றை விட உடலுக்குப் பல மடங்கு நலம் தரும் இளநீரை இயற்கைப் பானமாக பயன்படுத்துவதே ஆரோக்கியமான வழி.
    • டைபாய்டு, மலேரியா, மஞ்சள் காமாலை, அம்மை நோய்கள், டிப்தீரியா, நிமோனியா, வாந்திபேதி, வயிற்றுப்புண், மலச்சிக்கல், சிறுநீரகக் கோளாறுகள் போன்றவற்றால் பாதிக்கப்படும் போது இளநீரைத் தாராளமாகக் குடிக்க வேண்டும்.
    • அறுவை சிகிச்சைகளுக்குப் பின் திரவ ஆகாரம் மட்டுமே சாப்பிட வேண்டிய சமயங்களில் இளநீருக்கு முன்னுரிமை வழங்கி உபயோகித்தால் அறுவைச் சிகிக்சைப் புண் (OPERATION SORE) சீக்கிரம் ஆறிவிடும்..
    • இளநீரில் உள்ள தாதுக்கள் உணவு எளிதில் ஜீரணமாவதற்கு பயன்படுவதால் ஜீரணக் கோளாறுகளால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இளநீர் கொடுத்தால் வாந்தி கட்டுப்படும். நாக்கு வறட்சி நீங்கும்.
    • இளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதில் உள்ள அமிலத் தன்மை வயிற்றில் புண்ணை உருவாக்கும். ஏதாவது ஆகாரம் எடுத்த பின்னரே சாப்பிடவேண்டும்.
    தென்னை மரத்தின் வெவ்வேறு பாகங்களின் மருத்துவக் குணங்கள் என்ன?
    • மாத விடாயின் போது ஏற்படும் அதிக ரத்தப் போக்குக்கு,தென்னை மரத்தின் வேரிலிருந்து எடுக்கப்படு சாறு நல்ல மருந்து.
    • வெள்ளை படுதலுக்கு தென்னம் பூ மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
    • தேங்காய் புண்ணாக்கும் கருஞ்சீரகமும் சேர்த்து தோல் நோய்களுக்கு மருந்தாகிறது.
    • தேங்காய் சிரட்டையில் (வெளிப்புற ஓடு) இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளைக் குணப்படுத்துகிறது.
    • மூல முளை, ரத்த மூலம் போன்றவற்றுக்கு தென்னங் குருத்திலிருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது.
    • தேங்காய்ப் பால் சிறந்த நஞ்சு முறிவு. இது சேராங்கொட்டை , பாதரசத்தால் உண்டாகும் நஞ்சு போன்ற பல நஞ்சுகளை முறிக்கும்.
    தைலங்கள்;
    நாள்பட்ட தீராத புண்களுக்கு மருந்தாகத் தரப்படும் மத்தம் தைலம், தோல் நோய்களுக்கான கரப்பான் தைலம், வாத வலிகளைக் குணப்படுத்தும் கற்பூராதி தைலம், தலைக்குப் பயன்படுத்தப்படும் நீலபிரிங்காதித் தைலம், சோரியாசிஸ் நோய்க்குப் பயன்படும் வெப்பாலைத் தைலம், தலையில் உள்ள பொடுகுக்கு மருந்தாகும் பொடுதலைத் தைலம் ஆகிய தைலங்களில் தேங்காய் எண்ணெய் பயன்பாடு முக்கியமானது.

    தேங்காயில் உள்ள சத்துக்கள்:
    ஒரு கப் (80 gm துருவிய )தேங்காயில் உள்ள சத்துக்கள்
    கலோரிகள்- 283 : கொழுப்பிலிருந்து பெறப்படும் கலோரி-224
    மொத்தக் கொழுப்பு : 27 gm (41%)
    ஸேச்சுரேட்டட் கொழுப்பு:24 gm (119%)
    கொலெஸ்ட்ரால் : 0gm (0%)
    சோடியம் : 16 mg (1%)
    மொத்த மாவுச்சத்து :12gm(4%)
    உண்ணத்தக்க நார் சத்து :7gm (29%)
    சர்க்கரை :5gm
    புரதம் :3 gm
    விட்டமின் A : (0%)
    விட்டாமின் C :(4%)
    சுண்ணாம்பு சத்து :(1%)
    இரும்பு சத்து :(11%)

    மேலு அறிய: Super Foods - The Truth about Coconut - video


    பல் வலி, கூசுதல், அரணி சரியாக

    Post by உமா on Sat Jul 10, 2010 10:54 am
    பல் உறுதியாகமாவிலையை பொடி செய்து பற்களைத் துலக்கி வந்தால் உறுதி பெரும்.

    பல் நோய்மகிழம்இலை கஷாயம் செய்து வாய் கொப்பளித்து வர எதுவும் அணுகாது.

    பல்வலி நிவாரணம் பெறகோவைப்பழம் சாப்பிடலாம்.

    பல்வலி, ஈறுவீக்கம், பல்லில் இரத்தக்கசிவு, பல் சொத்தை வராமல் இருக்கசெவ்வாழைப்பழத்தை இரவு சாப்பிட்டு வரலாம்.

    பல் ஆடுதல்மகிழ மறக்காயை மென்று அடக்கி வைத்திருந்து துப்ப சரியாகி உறுதிப்படும்.

    பல்வலி நீங்கஒரு துண்டு சுக்கை வாயில் போட்டு கொள்ளலாம்.

    பற்கள் மற்றும் எலும்புகள் உறுதி பெறஒருநாள் விட்டு ஒருநாள் அதிகாலை வெறும் வயிற்றில் மாதுளம்பழம் சாப்பிட்டு வரலாம்.

    பல்லரணைகற்கண்டு அடிக்கடி பயன்படுத்தி வர குணமாகும்.

    பல் உறுதியாககுறைந்த பட்சம் 10 முறையாவது பற்களால் நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.

    பற்கள் உறுதியாகபிரஷ் கொண்டு பல் துலக்குபவர்கள் வாய் கொப்பளிக்கும் போது கட்டாயம் ஈறுகளை அழுத்திக் கொடுத்துவர உறுதியாகும்.

    பல் வலி, பல் அரணை தீரகண்டங்கத்திரி பழத்தை நெருப்பில் இட்டு வாயில் புகை பிடிக்க குணமாகும்.

    பல் கூச்சம், ஈறுவீக்கம் தீரபுளியங்கொட்டை தோல், கருவேலம் பட்டை, தூள் உப்பு கலந்து பல் துலக்கலாம்.

    பல் முளைக்கும் போது ஏற்படும் பேதி நிற்கபேய்மிரட்டி இலை சாற்றை 5 துளி வெந்நீரில் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

    பல் உறுதியாககாலை, இரவு இருவேளை கட்டாயம் பல் துலக்க வேண்டும், சாப்பிட்ட பின் பல் துலக்கி விடுவது மிக நன்று.

    ஈறு பலமடையமாசிக்காயை தூளாக்கி நீரில் காய்ச்சி வாய் கொப்பளிக்கலாம்.

     
     

Leia mais...

  ©Raka - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo