Monday, December 6, 2010

பள்ளிக்கட்டு சபரி மலைக்கு

இருமுடி தாங்கி ஒரு மனதாகி குருவெனவே வந்தோம்
இருவினை தீர்க்கும் அந்த எமனையும் வெல்லும்
உன் திருவடியை காண வந்தோம்...

பள்ளிக்கட்டு சபரி மலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
ஸ்வாமியே அய்யப்போ
சுவாமி சரணம் ஐயப்பா சரணம் (2 தடவை மெல்லிய குரலில்)

பள்ளிக்கட்டு சபரி மலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
ஸ்வாமியே அய்யப்போ அய்யப்போ சுவாமியே

நெய்யபிஷேகம் சுவாமிக்கே
கற்பூர தீபம் சுவாமிக்கே
ஐயப்பன் மார்களும் கூடிக்கொண்டு
ஐயனை நாடி சென்றிடுவார்
சபரி மலைக்கு சென்றிடுவார் (ஸ்வாமியே அய்யப்போ அய்யப்போ சுவாமியே)

கார்த்திகை மாதம் மாலையணிந்து
நேர்த்தியாகவே விரதமிருந்து

பார்த்த சாரதியின் மைந்தனே உன்னை
பார்க்க வேண்டியே தவமிருந்து (2)

இருமுடி எடுத்து எருமேலி வந்து
ஒரு மனதாகி பேட்டை துள்ளி
அருமை நண்பராம் வாவரை தொழுது
அய்யனின் அருள் மலை ஏறிடுவார் (ஸ்வாமியே அய்யப்போ அய்யப்போ சுவாமியே)

அழுதை ஏற்றம் ஈரும் போது
அரிகரன் மகனை துதித்து செல்வார்
வழி காட்டிடவே வந்திடுவார்
அய்யன் வன்புலி ஈறி வந்திடுவார்

கரிமலை ஏற்றம் கடினம் கடினம்
கருணை கடலும் துணை வருவார்
கரிமலை இறக்கம் வந்தவுடனே
திருநதி பம்பையை கண்டிடுவார் (ஸ்வாமியே அய்யப்போ அய்யப்போ சுவாமியே)

கங்கை நதி போல் புண்ணிய நதியாம் பம்பையில் நீராடி
சங்கரன் மகனை கும்பிடுவார் சங்கடமின்றி ஏறிடுவார்
நீலிமலை ஏற்றம் சிவபாலனும் ஈற்றிடுவார்
காலமெல்லாம் நமக்கே அருள் காவலனாய் இருப்பார்

தேக பலம் தா பாட பலம் தா தூக்கிவிடையா ஏற்றிவிடையா
தேக பலம் தா பாட பலம் தா (மெல்லிய குரலில்)

தேக பலம் தா என்றல் அவரும் தேகத்தை தந்திடுவார்
பாட பலம் தா என்றல் அவரும்
பாட்டை தந்திடுவார் நல்ல
பாதையை காட்டிடுவார் (ஸ்வாமியே அய்யப்போ அய்யப்போ சுவாமியே)

சபரி பீடமே வந்திருவார்
சபரி அன்னையை பணிந்துடுவார்
சரங்குத்தி ஆளில் கன்னிமார்களும்
சரத்தினை போட்டு வணங்கிடுவார்
சபரிமலை தனை நெருங்கிடுவார்

அந்த பதினெட்டு படி மீது ஏறிடுவார்
கதி என்று அவரை சரணடைவார்
மதி முகம் கண்டே மயங்கிடுவார்
ஐயனை துதிக்கையிலே
தன்னையே மறந்திடுவார்

பள்ளிக்கட்டு சபரி மலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
ஸ்வாமியே அய்யப்போ
சுவாமி சரணம் அய்யப்ப சரணம்

பள்ளிக்கட்டு சபரி மலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
சுவாமி அய்யப்போ அய்யப்போ சுவாமி

சரணம் சரணம் அய்யப்போ சுவாமி சரணம் அய்யப்போ (6)



ஓம் கன்னிமூல கணபதியே சரணம் ஐயப்பா

ஓம் காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா

ஓம் ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா

ஓம் அன்னதானப் பிரபுவே சரணம் ஐயப்பா

ஓம் ஆறுமுகன் சோதரனே சரணம் ஐயப்பா

ஓம் ஆபத்தில் காப்போனே சரணம் ஐயப்பா

ஓம் ஆபத்தில் காப்போனே சரணம் ஐயப்பா

ஓம் இன்தமிழ்ச் சுவையே சரணம் ஐயப்பா

ஓம் இச்சை தவிர்ப்பவனே சரணம் ஐயப்பா

ஓம் ஈசனின் திருமகளே சரணம் ஐயப்பா

ஓம் உண்மைப் பரம்பொருளே சரணம் ஐயப்பா

ஓம் உலகாளும் காவலனே சரணம் ஐயப்பா

ஓம் ஊமைக்கருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா

ஓம் ஊழ்வினை அழிப்பவனே சரணம் ஐயப்பா

ஓம் எளியோர்க்கு அருள்பவனே சரணம் ஐயப்பா

ஓம் எங்கள் குல தெய்வமே சரணம் ஐயப்பா

ஓம் ஏழைப் பங்காளனே சரணம் ஐயப்பா

ஓம் ஏகாந்த மூர்த்தியே சரணம் ஐயப்பா

ஓம் ஐங்கரன் தம்பியே சரணம் ஐயப்பா

ஓம் ஐயமெல்லாம் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா

ஓம் ஒப்பில்லாத் திருமணியே சரணம் ஐயப்பா

ஓம் ஒளிரும் திருவிளக்கே சரணம் ஐயப்பா

ஓம் ஓங்காரப் பரம்பொருளே சரணம் ஐயப்பா

ஓம் ஓதும் மறைபொருளே சரணம் ஐயப்பா

ஓம் ஒளடதங்கள் அருள்பவனே சரணம் ஐயப்பா

ஓம் சௌபாக்கியம் அளிப்பவனே சரணம் ஐயப்பா

ஓம் கலியுக வரதனே சரணம் ஐயப்பா

ஓம் சபரிமலை சாஸ்தாவே சரணம் ஐயப்பா

ஓம் சிவன்மால் திருமகனே சரணம் ஐயப்பா

ஓம் சைவ வைணவ ஐக்கியமே சரணம் ஐயப்பா

ஓம் அச்சங்கோயில் அரசே சரணம் ஐயப்பா

ஓம் ஆரியங்காவு ஐயாவே சரணம் ஐயப்பா

ஓம் குளத்துப்புழை பாலனே சரணம் ஐயப்பா

ஓம் பொன்னம்பல வாசனே சரணம் ஐயப்பா

ஓம் வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா

ஓம் வீரமணிகண்டனே சரணம் ஐயப்பா

ஓம் உத்திரத்தில் உதித்தவனே சரணம் ஐயப்பா

ஓம் உத்தமனே சத்தியனே சரணம் ஐயப்பா

ஓம் பம்பையில் பிறந்தவனே சரணம் ஐயப்பா

ஓம் பந்தள மாமணியே சரணம் ஐயப்பா

ஓம் சகலகலை வல்லோனே சரணம் ஐயப்பா

ஓம் சாந்தம் நிறை மெய்ப்பொருளே சரணம் ஐயப்பா

ஓம் குருமகனின் குறை தீர்த்தவனே சரணம் ஐயப்பா

ஓம் குருதட்சினை அளித்தவனே சரணம் ஐயப்பா

ஓம் புலிப்பாலைக் கொணர்ந்தவனே சரணம் ஐயப்பா

ஓம் வன்புலி வாகனனே சரணம் ஐயப்பா

ஓம் தாயின் நோய் தீர்த்தவனே சரணம் ஐயப்பா

ஓம் குருவின் குருவே சரணம் ஐயப்பா

ஓம் வாபரின் தோழனே சரணம் ஐயப்பா

ஓம் துளசிமணி மார்பனே சரணம் ஐயப்பா

ஓம் தூயவுள்ளம் அளிப்பவனே சரணம் ஐயப்பா

ஓம் இரு முடிப்பிரியனே சரணம் ஐயப்பா

ஓம் எரிமேலி தர்மசாஸ்தாவே சரணம் ஐயப்பா

ஓம் நித்ய பிரம்மச்சாரியே சரணம் ஐயப்பா

ஓம் நீலவஸ்திர தாரியே சரணம் ஐயப்பா

ஓம் பேட்டை துள்ளும் பேரருளே சரணம் ஐயப்பா

ஓம் பெரும்ஆணவத்தை அழிப்பவனே சரணம் ஐயப்பா

ஓம் சாஸ்தாவின் நந்தவனமே சரணம் ஐயப்பா

ஓம் சாந்தி தரும் பேரருளே சரணம் ஐயப்பா

ஓம் பேரூர்த்தோடு தரிசனமே சரணம் ஐயப்பா

ஓம் சாஸ்தாவின் நந்தவனமே சரணம் ஐயப்பா

ஓம் சாந்தி தரும் பேரருளே சரணம் ஐயப்பா

ஓம் பேரூர்த்தோடு தரிசனம் சரணம் ஐயப்பா

ஓம் பேதமையை ஒழிப்பவனே சரணம் ஐயப்பா

ஓம் காளைகட்டி நிலையமே சரணம் ஐயப்பா

ஓம் அதிர்வேட்டுப் பிரியனே சரணம் ஐயப்பா

ஓம் அழுதைமலை ஏற்றமே சரணம் ஐயப்பா

ஓம் ஆனந்தமிகு பஜனை பிரியனே சரணம் ஐயப்பா

ஓம் கல்லிடும் குன்றமே சரணம் ஐயப்பா

ஓம் உடும்பாறைக் கோட்டையே சரணம் ஐயப்பா

ஓம் இஞ்சிப்பாறைக் கோட்டையே சரணம் ஐயப்பா

ஓம் கரியிலந் தோடே சரணம் ஐயப்பா

ஓம் கரிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா

ஓம் கரிமலை இறக்கமே சரணம் ஐயப்பா

ஓம் பெரியானை வட்டமே சரணம் ஐயப்பா

ஓம் சிறியானை வட்டமே சரணம் ஐயப்பா

ஓம் பம்பா நதித் தீர்த்தமே சரணம் ஐயப்பா

ஓம் பாவமெல்லாம் அழிப்பவனே சரணம் ஐயப்பா

ஓம் திரிவேணி சங்கமே சரணம் ஐயப்பா

ஓம் திருராமர் பாதமே சரணம் ஐயப்பா

ஓம் சக்தி பூஜை கொண்டவனே சரணம் ஐயப்பா

ஓம் சபரிக்கு அருள் செய்தவளே சரணம் ஐயப்பா

ஓம் தீபஜோதித் திருஒளியே சரணம் ஐயப்பா

ஓம் தீராத நோய் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா

ஓம் பம்பா விளக்கே சரணம் ஐயப்பா

ஓம் பலவினைகள் ஒழிப்பவனே சரணம் ஐயப்பா

ஓம் தென்புலத்தார் வழிபாடே சரணம் ஐயப்பா

ஓம் திருப்பம்பையின் புண்ணியமே சரணம் ஐயப்பா

ஓம் நீலிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா

ஓம் நிறைவுள்ளம் தருபவனே சரணம் ஐயப்பா

ஓம் அப்பாச்சி மேடே சரணம் ஐயப்பா

ஓம் இப்பாச்சி குழியே சரணம் ஐயப்பா

ஓம் சபரி பீடமே சரணம் ஐயப்பா

ஓம் சரங்குத்தி ஆலே சரணம் ஐயப்பா

ஓம் உரல்குழி தீர்த்தமே சரணம் ஐயப்பா

ஓம் கருப்பண்ணசாமியே சரணம் ஐயப்பா

ஓம் கடுத்த சாமியே சரணம் ஐயப்பா

ஓம் பதினெட்டாம் படியே சரணம் ஐயப்பா

ஓம் பகவானின் சந்நிதியே சரணம் ஐயப்பா

ஓம் பரவசப் பேருணர்வே சரணம் ஐயப்பா

ஓம் பசுவின் நெய்யபிஷேகமே சரணம் ஐயப்பா

ஓம் கற்பூரப் பிரியனே சரணம் ஐயப்பா

ஓம் நாகராசப் பிரபுவே சரணம் ஐயப்பா

ஓம் மாளிகைப் புரத்தம்மனே சரணம் ஐயப்பா

ஓம் மஞ்சமாதா திருவருளே சரணம் ஐயப்பா

ஓம் அக்கினி குண்டமே சரணம் ஐயப்பா

ஓம் அலங்காரப் பிரியனே சரணம் ஐயப்பா

ஓம் பஸ்மக் குளமே சரணம் ஐயப்பா

ஓம் சற்குரு நாதனே சரணம் ஐயப்பா

ஓம் மகர ஜோதியே சரணம் ஐயப்பா

ஓம் மங்கள மூர்த்தியே சரணம் ஐயப்பா

தெரிந்தும்
தெரியாமலும் அறிந்தும் அறியாமலும் செய்த சகல குற்றங்களையும் பொறுத்து
காத்து ரட்சிக்க வேண்டும். ஓம் சத்தியமான பொன்னு பதினெட்டாம்படி மேல்
வாழும் வில்லாளி வீரன் வீர மணிகண்டன் காசி, ராமேஸ்வரம், பாண்டி மலையாளம்
அடக்கி ஆறும் ஓம் ஸ்ரீ ஹரி ஹரசுதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப சாமியே சரணம்
ஐயப்பா!

0 comments:

  ©Raka - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo