Saturday, May 1, 2010

ஒருநாள்-30ரூபாய்-நகர்வலம்.

வேலன்:-ஒருநாள்-30ரூபாய்-நகர்வலம்.


சென்னை நகரையும் நகரை சுற்றியுள்ள இடங்களையும்

வெறும் 30 ரூபாயிலேயே சுற்றி பார்க்க சென்னை மாநகர

போக்குவரத்துக்கழகம் ஏற்பாடு செய்திருக்கின்றது. இந்த

டிக்கட் அனைத்து மாநகர பேருந்துகளிலும்(City Bus) கிடைக்

கின்றது. ஒரு நாள் முழுவதும் அனைத்து மாநகர

 பேருந்துகளிலும் இந்த டிக்கட் மூலம் பயணம் செய்யலாம்.

மாநகர பேருந்துகளில் முப்பது ரூபாய் டிக்கட் என கேட்டால் 

கண்டக்டரே அதை கொடுப்பார். சென்னையை மையமாக

வைத்து சுமார் 60 கிலோமீட்டர் சுற்றளவில் மாநகர 

பேருந்துகள் சென்று வருகின்றன. வெளியூரிலிருந்து 

வருகிறவர்கள் மாநகரபேருந்து வசதியுள்ள ஊரிலேயே

இறங்கி அங்கிருந்து 30 ரூபாய் டிக்கட்டில் சென்னையை

சுற்றிபார்த்து அதே டிக்கட்டில் மீண்டும் பேருந்து ஏறிய

இடத்திலேயே இறங்கிவிடலாம். திருமண பத்திரிக்கை

வைப்பவர்கள், நண்பர்களை பார்க்க செல்பவர்கள்,

கோயில் மற்றும் வழிபாட்டுத்தலங்களை பார்க்க 

செல்பவர்கள், சென்னையிலும் அதை சுற்றியு்ள்ள 

சுற்றுலாதளங்களான முட்டுக்காடு. மகாபலிபுரம், 

திருப்போரூர்(முருகன் கோயில்),வண்டலூர் 

உயிரியல்பூங்கா,அடையார் சிறுவர்பூங்கா, 

காந்திமண்டபம், காமராஜர் நினைவகம், பிர்லா

கோளரங்கம், சென்னை லைட்டவுஸ், அண்ணா

நினைவகம், எம்.ஜி.ஆர் நினைவகம், மெரினா

கடற்கரை . கோட்டை மற்றும் கோட்டை மியூசியம்

என ஒரு நாளில் எவ்வளவு இடங்களை பார்க்க

முடியுமோ அவ்வளவு இடங்களை பார்க்கலாம்.

இதில் உள்ள ஒரே ஒரு குறை என்னவென்றால்

இரவுப்பேருந்திலும், குளிர்சாதன பேருந்திலும் 

மட்டும் இந்த டிக்கட்டுக்கு அனுமதியில்லை.

ஒரு நாள் விருப்ப பயணச்சீட்டு வாங்குங்கள்.

விருப்பம் போல் பயணம் செய்யுங்கள்.

வாழ்க வளமுடன்,

0 comments:

  ©Raka - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo