Saturday, May 1, 2010

பரமபதம் விளையாட்டு


ஆதவன் படத்தில் ஒரு வசனம் வரும். சரோஜாதேவி அவர்களிடம் கேட்பார்கள்.எம்.ஜி.ஆரை தெரியுமா என்று. அதற்கு அவர் எம்.ஜி.ஆர் .படங்களை மறக்க முடியுமா என்பார்..அதுபோல வீட்டில் உள்ள பெரியவர்களை கேட்டுப்பாருங்கள்.பரமபதம் விளையாடுவீர்களா என்று..வைகுண்ட ஏகாதேசியின் ஸ்பெஷலே பரமபத விளையாட்டுதான்.வாழ்க்கையில் வெற்றியும் தோல்வியும் சகஜம் என்று சிம்பிளாக உணர்த்தும் விளையாட்டு அது.இந்த விளையாட்டை நவீன யுகத்தில் விளையாட கமயூட்டரிலும் வந்து விட்டது.இந்த விளையாட்டை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.இதை உங்கள் கணிணியில் இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதன் இடதுபுறம் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ இருக்கும். அதில எத்தனை நபர்கள் விளையாட போகின்றார்களோ அந்த நபர்களுக்கு எதிரே டிக் செய்யவும்.
உடன் விளையாடும் நண்பர்களின் பெயரை தட்டச்சு செய்யுங்கள்.
தட்டச்சு செய்தபின் வந்த படம் கீழே:-அந்த அந்த நண்பர்களின் காய்களின் நிறங்களை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.
அவ்வளவுதாங்க. இனி விளையாட ஆரம்பிக்கலாம். இதில மேல்புறம் உள்ள ROLL DICE கிளிக் செயயுங்கள். எண்ணிக்கை வரும் அதே சமயம் அநத விளையாட்டுக்கு உரியவரின காய் போர்டில் நகர ஆரம்பிக்கும்.
காய் நகர்ந்தபின் வரும் விண்டோவினை பாருங்கள்.இதில் ஏணியில் வரும் சமயம் காய் மேலே செலவதும் பாம்பில் வரும் சமயம் கீழே இறங்கிவிடுவதும் நடக்கும்.
இறுதியல் யார் வெற்றி பெற்றார்களோ அவர்கள் பெயர் வரும்.கீழே உள்ள படத்தை பாருங்கள்.
400 கே.பி. அளவிள்ள உள்ள இதை பதிவிறக்கி நீங்கள் ஒருமுறை விளையாடிவிட்டு குழந்தைகளிடம் விளையாட கொடுங்கள்.

0 comments:

  ©Raka - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo